முதல் பக்கம்

Jan 17, 2014

கம்பம் கிளை செயற்குழு கூட்டம்:

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை செயற்குழு கூட்டம் ஜனவரி-9 வியாழனன்று மாலை 7 மணி அளவில் மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது.கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.கிளையில் நடைப்பெற்ற வேலைகளை கிளைச் செயலர் க.முத்துக்கண்ணன் எடுத்துக்கூறினார்.செயல்பாடுகள் குறித்து கிளை செயற்குழு உறுப்பினர்கள் விவாதித்தனர்.கிளை பொருளாளர் மொ.தனசேகரன் பொருளறிக்கை சமர்ப்பித்தார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,மாநிலச்செயலாளர் தே.சுந்தர் கிளை இணைச்செயலாளர் ஓவியர் பாண்டி,கிளை செயற்குழு உறுப்பினர்கள் நந்த குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹ,ஸ்ரீராமன்,ஆசிரியர் சோமநாதன், உள்ளிட்டோர் கல ந்து கொண்டனர் உறுப்பினர் சேர்க்கை வலியுறுத்தப்பட்டது.

நிர்வாகக்குழு கூட்டம்-2:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் ஜனவரி 7-2014 செவ்வாய் மாலை 6 மணி அளவில் தேனி அல்லி நகரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பா.செந்தில் குமரன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன், மாவட்ட பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி ,இணைச் செயலாளர்கள் எஸ்.ஜேசுராஜ்,தே.சுந்தர் மற்றும் எஸ்.ஞானசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநில செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பொறுப்பு கிளைகள் உடனடியாக கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.

ஆசிரியர் இணையக்கூட்டம் /கல்வியாளர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கல்வி உப குழு சார்பில் ஆசிரியர் இணையக்கூட்டம் டிசம்பர் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பெரியகுளம் 10 ஆவது வார்டு துவக்கப்பள்ளியில் மாலை நடைபெற்றது.மாவட்டத்தலைவர் திருமிகு பா.செந்தில்குமரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் இணைய ஒருங்கிணைப்பாளர் திருமிகு.ஞானசுந்தரி வரவேற்புரை ஆற்றினார்.கல்வியாளர் பேராசிரியர் விஜயகுமார் கலந்து கொண்டு ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.மாநிலச் செயளாளர் திருமிகு.தே.சுந்தர் மாவட்ட கல்வி உப குழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு க.முத்துக்கண்ணன் பெரியகுளம் கிளை செயலாளர் திருமிகு.ராம்சங்கர் உட்பட கிளை நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்,25 க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

ஐசான் வால்நட்சத்திரம் குறித்து பிரச்சாரம்:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 29 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் கூடலூர் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் ஐசான் வால் நட்சத்திரம் குறித்து கருத்தரங்கம் நடைப்பெற்றது.கருத்தரங்கத்திற்கு கம்பம் கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு ராஜ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை முன்னிலை வகித்தார்.கம்பம் கிளைச் செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் கருத்தாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு ஐசான் வால் நட்சத்திரம் குறித்து விளக்கம் அளித்தனர்.ஐசான் வால் நட்சத்திரம் குறித்த படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது. கணினி ஆசிரியர் திருமிகு பிரபாகரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திரு ந்தார்.350 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.100 ரூபாய் அளவிற்கு புத்தக விற்பனையும் நடைப்பெற்றது…

ஐசான் வீதிப்பிரச்சாரம்:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 28 அன்று வியாழக்கிழமை மாலை 6 மணி அள்வில் கம்பம் நகரில் ஐசான்வால் நட்சத்திரம் குறித்த துண்டு பிரச்சுரமானது வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு வி நியோகம் செய்யப்பட்டது.இந்த அறிவியல் பிரச்சார பணியில் மாநிலச் செயலாளர் தே.சுந்தர்,மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டி,கம்பம் கிளை கே.நந்தகுமார், மற்றும் கணித மேதை இராமாணுஜம் துளிர் இல்ல மாணவர்கள் பங்கேற்றனர்.ஐசான் குறித்து பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஐசான் வால் நட்சத்திரம் குறித்து பிரச்சாரம்:

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 26 அன்று செவ்வாய் கிழமை அன்று காலை 10 மணி அளவில் போடி பங்கஜம் நடுநிலைப்பள்ளியில் ஐசான் வால் நட்சத்திரம் குறித்து கருத்தரங்கம் நடைப்பெற்றது.கருத்தரங்கத்திற்கு போடி கிளைச் செயலாளர் திருமிகு.ஸ்ரீதர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் முன்னிலை வகித்தார்.கம்பம் கிளைச் செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் கருத்தாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு ஐசான் வால் நட்சத்திரம் குறித்து விளக்கம் அளித்தனர்.ஐசான் வால் நட்சத்திரம் குறித்த படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது.25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 250 க்கும் மேற்பட்ட மாணவ்-மாணவியர் பங்கேற்றனர்.500 ரூபாய் அளவிற்கு புத்தக விற்பனையும் நடைப்பெற்றது…

Jan 12, 2014

நிர்வாகக்குழு கூட்டம்: 2

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் ஜனவரி 7-2014 செவ்வாய் மாலை 6 மணி அளவில் தேனி அல்லி நகரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பா.செந்தில் குமரன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன், மாவட்ட பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி ,இணைச் செயலாளர்கள் எஸ்.ஜேசுராஜ்,தே.சுந்தர் மற்றும் எஸ்.ஞானசு ந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநில செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பொறுப்பு கிளைகள் உடனடியாக கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.