முதல் பக்கம்

Apr 30, 2014

மாவட்டசெயற்குழு கூட்டம்-5


ஏப்ரல் 28ம் தேதி(திங்கள்கிழமை) மாலை 5 மணி அளவில் பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.மாவட்டத்தலைவர் திருமிகு பா.செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் நடைப்பெற்ற வேலை அறிக்கை மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன் சமர்ப்பித்தார். அனைத்து கிளைகளையும் கூட்டுவது,உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது, மாநில அளவிலான மற்றுக்கல்விக்கான வாசிப்பு முகாம் திட்டமிடல், கிளை நிகழ்ச்சிகளில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பது,பொறுப்பு கிளைகளின் செயல்பாடுகளை வழிகாட்டுவது ஆகியவை செயற்குழுவில் விவாதிக்கப்பட்டன.மாநிலச் செயலாளர் திருமிகு.தியாகராஜன் கலந்து கொண்டார்..15 க்கும் மேற்பட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.