முதல் பக்கம்

Jun 17, 2014

மாவட்ட செயற்குழு கூட்டம் 6

ஜூன் 15 ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் சின்னமனூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு எம்.மணிமேகலை அவர்கள் தலைமை தாங்கினார். வேலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்து கிளைகளையும் கூட்டுவது, உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது, தேசிய குழ ந்தைகள் அறிவியல் மாநாடு, துளிர் வினாடி வினா, துளிர் திறனறிதல் தேர்வு, ஹிரோஷிமா நாகசாகி நிகழ்ச்சிகள் குறித்து திட்டமிடல், கிளை நிகழ்ச்சிகளில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பது, பொறுப்பு கிளைகளின் செயல்பாடுகளை வழிகாட்டுவது ஆகியவை செயற்குழுவில் விவாதிக்கப்பட்டன.மாநிலச் செயலாளர்கள் திருமிகு.தியாகராஜன் மற்றும் சுந்தர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Jun 5, 2014

சுற்றுச்சூழல் தினம் 2014

கம்பம் கிளைக்கு உட்பட்ட சுருளிப்பட்டி அரசுகள்ளர் துவக்கப்பள்ளியில் சுற்றுச்சூழல் காப்போம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. கமபம் கிளை செயலர் திருமிகு,முத்துக்கண்ணன் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் தொடர்பாக குழந்தைகளுடன் கலந்துரையாடினார். சுந்தர் மற்றும் தனசேகரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

உலக சுற்றுச்சூழல் தினம்-2014

ஜூன் 5 சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னட்டு பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் மரக்கன்று நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் காப்போம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைச் செயலர் திருமிகு.ஞான சுந்தரி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பிஅனர் திருமிகு,மணிமேகலை ஆகியோர் செய்திரு ந்தனர்.