முதல் பக்கம்

Jan 29, 2015

நியூட்ரினோ-பொது வெளி அரங்கு நிகழ்ச்சி


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டம் சார்பில் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமைய உள்ள நியூட்ரினோ நோக்குக்கூடம் குறித்த விஞ்ஞான விளக்க கருத்தரங்கம் தேவாரத்தில் ஜனவரி 28 மாலை 5 மணி அளவில் காமராஜர் அரங்கில் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் திருமிகு.சிவாஜி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேரா.முகமது ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட் வரவேற்புரை ஆற்றினார். மா நிலச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் அறிமுகவுரை ஆற்றினார். மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு நியூட்ரினோ நோக்குக்கூடம் குறித்து விளக்கம் அளித்தார்.தமிழ் நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளர் திருமிகு ராஜப்பன் விவசாயிகள் சார்பில் பங்கேற்று கேள்விகளை எழுப்பினார்.பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நண்பர்கள் மாற்று அமைப்பினர் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர்.போடிக்கிளை செயலாளர் திருமிகு,ஸ்ரீதர்,பாளையம் கிளைத்தலைவர் திருமிகு வளையாபதி ஓவியர் பாண்டி,குமரேசன்,ஓவியா தனசேகரன்,கூடலூர் கிளை ராஜ்குமார்,மோகன் உள்ளிட்ட அறிவியல் இயக்க மாவட்ட மற்றும் கிளைப்பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அறிவியல் ஆசிரியர்களுக்கான விளக்கக்கூட்டம்


ஜனவரி 28 காலை 10 மணி அளவில் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளீயில் பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் ஆசிரியர்களுக்கான நியூட்ரினோ குறித்த விஞ்ஞான விளக்க கருத்தரங்கம் நடைப்பெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமிகு பா.செந்தில் குமரன் தலைமை தாங்கினார். தேனி கிளைத்தலைவர் மகேஷ் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் திருமிகு வெங்கட் வரவேற்புரை ஆற்றினார். மாநிலச் செயலர் தே.சுந்தர் கலந்டு கொண்டு சிறப்புரை ஆற்றினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமிகு வாசு அவர்கள் கலந்து கொண்டு துவக்கவுரை ஆற்றினார். பெரியகுளம் கல்வி மாவட்ட அலுவலர் திருமிகு நாகராசு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு நியூட்ரினோ நோக்குக்கூடம் குறித்து விளக்கம் அளித்தார். 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர்.

Jan 28, 2015

நியுட்ரினோ விஞ்ஞான விளக்கக் கூட்டம்


ஜனவரி 27 நியூட்ரினோ விஞ்ஞான விளக்க பிரச்சாரம் கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி,உத்தம பாளையம் முகமது பாத்திமா பெண்கள் உயர் நிலைப்பள்ளி,குண்டல்னாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி நடைப்பெற்றது.கம்பத்தில் நடைப்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு என்.எம்.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார்.கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.பாளையம் பாத்திமா பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் விளக்கம் பெற்றனர்.குண்டல் நாயக்கன்பட்டியில் நடைப்பெற்ற பிரச்சார கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டி விளக்கம் பெற்றனர்.ஒரே நாளில் மூன்று இடங்களில் நிகழ்ச்சி சிறப்பாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.

Jan 15, 2015

நிர்வாகக் குழு கூட்டம்: 4

விரிவடைந்த மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் 2015 ஜனவரி 14 தேனி ரேடியன் ஐ.ஏ.எஸ் அகாடெமியில் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர் திருமிகு பா.செந்திலகுமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அம்மையப்பன் முன்னிலை வகித்தார். நியூட்ரினோ விளக்க கூட்டமாகவும் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நியூட்ரினோ பிரச்சரம் குறித்து திட்டமிடும் கூட்டமாகவும் நடைப்பெற்றது.மாநிலக் கருத்தாளர் முனைவர் தினகரன் கலந்து கொண்டு நியூட்ரினோ நோக்குக்கூடம் குறித்து விளக்கம் அளித்தார்.. மாநிலச் செயலாளர்கள் திருமிகு.தியாகராஜன் மற்றும் சுந்தர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம்


விரிவடைந்த மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் ஜனவரி 14 தேனி ரேடியன் ஐ.ஏ.எஸ் அகாடெமியில் நடைப்பெற்றது.மாவட்டத் தலைவர் திருமிகு பா.செந்திலகுமரன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அம்மையப்பன் முன்னிலை வகித்தார். நியூட்ரினோ விளக்க கூட்டமாகவும் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நியூட்ரினோ பிரச்சரம் குறித்து திட்டமிடும் கூட்டமாகவும் நடைப்பெற்றது.மாநிலக் கருத்தாளர் முனைவர் தினகரன் கலந்து கொண்டு நியூட்ரினோ நோக்குக்க்கூடம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இருபதுக்கும் க்கும் மேற்பட்ட நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Jan 10, 2015

இளம் விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா


2014 ஆம் ஆண்டிற்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பெங்களூரில் நடைப்பெற்றது.இதில் தேனி மாவட்டத்தின் சார்பில் பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி மாணவர்கள் குழு தேர்வு பெற்றது. சிறப்பான ஆய்வினை மேற்கொண்டு தேசிய அளவிலான மாநாட்டிற்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா ஜனவரி 9 வெள்ளி அன்று ஊர் பொதுமக்கள் சார்பில் நடைப்பெற்றது.உதவித்தொடக்க க்ல்வி அலுவலர் திலகவதி கல் ந்து கொண்டு இளம் விஞ்ஞானிகளை வாழ்த்திப்பேசினார்.மாவட்ட இணைச்செயலர் திருமிகு.ஞானசுந்தரி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் மணிமேகலை மற்றும் ஜெயந்தி மாநிலச்செயலர் தியாகராஜன் மாவட்ட செயலர் வெங்கட் பெரியகுளம் கிளைச்செயலர் ராம்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.