முதல் பக்கம்

Aug 15, 2015

ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தின போட்டிகள்

கூடலூர், :ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியலை ஆக்கத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், உலக ஒற்றுமைக்காகவும் மட்டுமே பயன்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் கூறியதாவது: "அணுயுத்தத்தால் அகதிகளாய் குழந்தைகள்' என்ற தலைப்பில் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப்போட்டி. "அணு ஆயுத குவிப்பால் அமைதி கிட்டுமா' என்ற தலைப்பில் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, "அணு ஆயுத போருக்கு அசோகர் சாட்சியானால்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப்போட்டி நடைபெறும். சுயஉதவிக்குழு மற்றும் ஆசிரியர்கள், ஆர்வலர்களுக்காக "அணு ஆயுத போட்டியும் அன்றாட உணவுக்கான போராட்டமும்' என்ற தலைப்பில் கதைப்போட்டியும் நடைபெறும். படைப்புகளை ஆகஸ்ட் 22 க்குள் அனுப்பவேண்டும். சிறந்த படைப்புகளுக்கு பரிசும் கலந்து கொள்ளும் அனைத்து படைப்புகளுக்கும் பாராட்டு சான்றும் வழங்கப்படும். படைப்புகளை வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சவுடம்மன் கோயில் தெரு, கூடலூர், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பலாம். விபரங்களுக்கு 94886 83929 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Aug 10, 2015

10வது தேனி மாவட்ட மாநாடு- ஆக.9





தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 10வது தேனி மாவட்ட மாநாடு ஆக.9.2015 அன்று அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முற்பகல் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.ஸ்ரீதர் வரவேற்றார். மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் வி.வெங்கட்ராமன் கடந்த இரண்டாண்டுகள் நடைபெற்ற பணிகள் குறித்து செயலறிக்கையை சமர்ப்பித்துப் பேசினார். பொருளறிக்கையை மாவட்டப் பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி சமர்ப்பித்தார்.




அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. மாநிலக் கருத்தாளர் முனைவர்.எஸ்.தினகரன் சமூக மாற்றத்திற்கான அறிவியல் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். சுருளிப்பட்டி க.மா.சிவாஜி தனது அறிவொளி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத்தலைவராக பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளராக வி.வெங்கட்ராமன், மாவட்டப் பொருளாளராக எஸ்.ஞானசுந்தரி ஆகியோரும் மாவட்டத் துணைத்தலைவர்களாக மா.மகேஷ், மா.சிவக்குமார், எஸ்.சேசுராஜ் மற்றும் ஜெ.மஹபூப் பீவி ஆகியோரும் மாவட்ட இணைச் செயலாளர்களாக ஆர்.அம்மையப்பன், எம்.கே.மணிமேகலை, மு.தெய்வேந்திரன் மற்றும் எஸ்.ராம்சங்கர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்கள் நாவலாசிரியர் காமுத்துரை மற்றும் ப.மோகன்குமாரமங்கலம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயலாளர் அன்பழகன் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர் முத்தரசப்பன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.




பிற்பகல் நடைபெற்ற பொதுத்தேர்வில் 100% தேர்ச்சிபெற்ற அரசுப்பள்ளிகளுக்கான பாராட்டு விழாவிற்கு மாவட்டத் துணைத் தலைவர் செ.சிவாஜி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ராம்சங்கர் வரவேற்றுப் பேசினார். 


மாநிலச் செயலாளர் தே.சுந்தர் அரசுப் பள்ளிகளைக் கொண்டாட வேண்டியதன் அவசியம் குறித்து அறிமுக உரையாற்றினார். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அப்துல் ஜப்பார் தேனி மாவட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சிபெற்ற 35 அரசுப்பள்ளிகளுக்கான நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். 



செயற்குழு உறுப்பினர்கள்: பேரா.ஜி.செல்வராஜ், பேரா.ஜி.கோபி, பேரா.கண்ணன், பேரா.முகமது செரீப், செ.சிவாஜி, ஹ.ஸ்ரீராமன், தே.சுந்தர், பெரோஸ், முத்துக்கண்ணன், ஜஸ்டின் ரவி, காளிதாஸ், சோமநாதன், ஸ்ரீதர், ஜெகநாதன், மனோகரன், ஜெயந்தி, அழகு கணேசன், சூரியபிரகாஷ், ரத்தினசாமி, மோகன், மொக்கராஜ்



பொதுக்குழு உறுப்பினர்கள்: இன்பசேகரன், ஜி.பாண்டி, தனசேகரன், சீனிவாசன், ராஜ்குமார், வளையாபதி, குமரேசன், வன்னியராஜன், போடி குமரேசன், ஜெகதீசன், ஏ.எஸ்.பாலசுப்ரமணியன், எஸ்.ஏ.செல்வராஜ், முருகேசன், சதீஸ், ஜான்சன், செந்தில்குமார், கருணாநிதி, பாலமுருகன், கரியன், நாகராஜ், பார்த்தசாரதி

Aug 7, 2015

கம்பம் ஒன்றிய அளவில் துளிர் அறிவியல் வினாடி வினா-2015

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் இன்று ஆகஸ்ட் 7 வெள்ளி அன்று துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான துளிர் அறிவியல் வினாடி வினாப் போட்டி கம்பம் நகராட்சி மெயின் ஆரம்பப்பள்ளியில் நடைப்பெற்றது. இரண்டு பிரிவுகளில் இருபதுக்கும் மேற்பட்ட குழுக்கள் சார்பாக அறுபது மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் பங்கேற்றனர்.அறிவியல்,தமிழ் மற்றும் பொதுஅறிவு ஆகிய சுற்றுகளின் கீழ் வினாக்கள் கேட்கப்பட்டன.மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற பள்ளிகள்: துவக்க நிலை(ஐந்தாம் வகுப்பு)

முதலிடம்: அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி சுருளிப்பட்டி
இரண்டாமிடம்:கஸ்தூரிபாய் நடுநிலைப்பள்ளி-கே.கே.பட்டி
மூன்றாமிடம்: அரசு ஆரம்பப்பள்ளி-லோயர்கேம்ப


நடுநிலை(6,7,8 வகுப்பு)
முதலிடம்: அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளி- கம்பம்
இரண்டாமிடம்:இலாஹி ஓரியண்டல் அரபி உயர்நிலைப்பள்ளி-கம்பம்
மூன்றாமிடம்: ஸ்ரீ எம்.பி.எம்.உயர்நிலைப்பள்ளி-கம்பம்


பரிசளிப்பு விழா

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கம்பம் கிளைத்தலைவர் ஜி.பாண்டி தலைமை வகித்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.மலர்விழி முன்னிலை வகித்தனர்.கம்பம் கிளை இணைச்செயலாளர் எஸ்.சுரேஷ் கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாநிலச்செயலாளர் தே.சுந்தர் துவக்கவுரை ஆற்றினார்.மருத்துவர் ஆர்.இன்பசேகரன் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ்.காளிதாஸ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.கம்பம் கிளை துணைத்தலைவர் அ.பெரோஸ் மற்றும் பாளையம் கிளைத்தலைவர் எ.வளையாபதி ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட செயலாளர் வி.வெங்கட் வாழ்த்திப் பேசினார்.கம்பம் கிளைப் பொருளாளர் மொ.தனசேகரன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் இயக்க ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



மேலும் தொடர்புக்கு: வி.வெங்கட் மாவட்ட செயலர்.9488683929

புகழஞ்சலி கூட்டம்



கூடலூர் : கூடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு புகழஞ்சலி கூட்டம் கிளைத்தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.

மக்கள் மன்ற நிர்வாகி கவிஞர் திராவிடமணி முன்னிலை வகித்தார். அப்துல்கலாம் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது குறித்த தகவல்கள் கூறப்பட்டது. இணைச்செயலர்கள் பிரபாகரன், சரண்ராஜ், மாவட்ட செயலர் வெங்கட், மாநிலசெயலர் சுந்தர், ஆசிரியர் செல்வன் மற்றும் என்.எஸ்.கே. பி.,மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமலர்

Aug 3, 2015

போடி ஒன்றியக்கிளையின் நான்காவது மாநாடு

போடி ஒன்றியக்கிளையின் நான்காவது மாநாடு ஜூலை 30 2015 வியாழக்கிழமை அன்று மாலை மாலை 5 மணி அளவில் போடி மூட்டா அரங்கில் நடைப்பெற்றது. போடி கிளைத்தலைவர் ஆர்.காளிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்.செ.சிவாஜி மற்றும் முனைவர் சி. கோபி முன்னிலை வகித்தனர். போடி கிளைச்செயலாளர் ப.ஸ்ரீதர் வரவேற்புரை ஆற்றி கிளையின் கடந்த கால செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். அதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதமும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைப்பெற்றது. புதிய தலைவராக தலைமை ஆசிரியர் குமரேசன் அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார். கிளைச்செயலாளராக ப.ஸ்ரீதர் ,பொருளாளராக பொ.ஜெகதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளையின் இணைச்செயலாளர்களாக பாலமுருகன் மற்றும் கிளைத் துணைத்தலைவர்களாக முனைவர் சி.கோபி மற்றும் ஆசிரியை ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பதினெட்டு பேர் அடங்கிய செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் மற்றும் மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் எஸ்.தினகரன் சக்கை உணவுகளும் அதன் கார்ப்பரேட் அரசியலும் அனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.தேனி கிளைச் செயலர் மு.தெய்வேந்திரன் காளிதாஸ்,தலைமை ஆசிரியர் பழனிராஜா,கமல் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க ஆர்வலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.