முதல் பக்கம்

Apr 6, 2015

மாவட்ட செயற்குழு கூட்டம்-8

ஏப்ரல் 4 தேனி கருணா பயிற்சி மையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பா.செந்தில் குமரன் தலைமை தாங்கினார். தேனி கிளை செயலாளர் தெய்வேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு பிறகு மாவட்டத்தில் நடைப்பெற்ற வேலைகளை மாவட்ட செயலர்.வி.வெங்கட் எடுத்துரைத்தார். கிளை செயற்குழு கூடுவதன் அவசியம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கிளை மாநாடுகள், மாவட்ட மாநாடுகள் நடத்தும் தேதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான் புத்தகங்கள் கிளை வாரியாக பிரித்து தரப்பட்டது. ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை கொண்டாடும் வழிமுறைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.