முதல் பக்கம்

Nov 30, 2013

ஐசான் வேன் பிரச்சார இயக்கம்…..

ஐசான் வேன் பிரச்சார இயக்கம்…..

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர், 18 முதல் ஐசான் வேன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை, நாகை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து வேன் பிரச்சாரம் துவங்கியது. தென் மண்டலத்தில் குமரியில் கிளம்பிய பிரச்சார வேன் நவ.23 அன்று தேனி மாவட்டத்திற்கு வந்தது.

தேனி மாவட்ட அளவிலான பிரச்சாரத் துவக்கவிழா ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சேகர் முன்னிலை வகித்தார். மாவட்டச்செயலாளர் வி.வெங்கட்ராமன் வரவேற்றார். வேன் பிரச்சாரத்தினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு அவர்கள் துவங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலர் நாகராஜ், உத்தமபாளையம் மாவட்டக்கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பெருமாள்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் தே.சுந்தர், கல்வியாளர் அமல்ராஜன், மாநில பிரச்சார ஒருங்கிணைப்பாளர் மு.தியாகராஜன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஆண்டிபட்டி கிளைச்செயலாளர் அழகு கணேசன் நன்றி கூறினார். அறிவியல் இயக்கத்தின் பெரியகுளம் செயலாளர் ராம்சங்கர், கம்பம் செயலாளர் முத்துக்கண்ணன், போடி செயலாளர் ஸ்ரீதர், உத்தமபாளையம் செயலாளர் ஜஸ்டின் ரவி, மாவட்டத்துணைச்செயலாளர் ஞானசுந்தரி, மாவட்ட கருத்தாளர்கள் அம்மையப்பன், சேசுராஜ், பாண்டி, சிவக்குமார், நந்தகுமார் உள்ளிட்ட குழுவினர் மாவட்டம் முழுவதும் ஐசான் வால்நட்சத்திரம் குறித்த வேன் பிரச்சாரம் மேற்கொண்டனர்.பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஐசான் குறித்து கருத்துரை, போஸ்டர் கண்காட்சி, பவர்பாயிண்ட் காண்பிக்கப்பட்டது. இரவு பொது நிகழ்வில் தொலைநோக்கி மூலம் விளக்கமும் அளிக்கப்பட்டது.

ஐசான் வால் நட்சத்திரம் குறித்து பிரச்சாரம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 26 அன்று செவ்வாய் கிழமை அன்று காலை 10 மணி அளவில் போடி பங்கஜம் நடுநிலைப்பள்ளியில் ஐசான் வால் நட்சத்திரம் குறித்து கருத்தரங்கம் நடைப்பெற்றது.கருத்தரங்கத்திற்கு போடி கிளைச் செயலாளர் திருமிகு.ஸ்ரீதர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் முன்னிலை வகித்தார்.கம்பம் கிளைச் செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் கருத்தாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு ஐசான் வால் நட்சத்திரம் குறித்து விளக்கம் அளித்தனர்.ஐசான் வால் நட்சத்திரம் குறித்த படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது.25 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 250 க்கும் மேற்பட்ட மாணவ்-மாணவியர் பங்கேற்றனர்.500 ரூபாய் அளவிற்கு புத்தக விற்பனையும் நடைப்பெற்றது…

ஐசான் வீதிப்பிரச்சாரம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 28 அன்று வியாழக்கிழமை மாலை 6 மணி அள்வில் கம்பம் நகரில் ஐசான்வால் நட்சத்திரம் குறித்த துண்டு பிரச்சுரமானது வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு வி நியோகம் செய்யப்பட்டது.இந்த மாபெரும்அறிவியல் பிரச்சார பணியில் மாநிலச் செயலாளர் தே.சு ந்தர்,மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டி,கம்பம் கிளை கே.நந்தகுமார், மற்றும் கணித மேதை இராமாணுஜம் துளிர் இல்ல மாணவர்கள் பங்கேற்றனர்.பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஐசான் வால் நட்சத்திரம் குறித்து பிரச்சாரம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 29 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் கூடலூர் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் ஐசான் வால் நட்சத்திரம் குறித்து கருத்தரங்கம் நடைப்பெற்றது.கருத்தரங்கத்திற்கு கம்பம் கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு ராஜ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை முன்னிலை வகித்தார்.கம்பம் கிளைச் செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் கருத்தாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு ஐசான் வால் நட்சத்திரம் குறித்து விளக்கம் அளித்தனர்.ஐசான் வால் நட்சத்திரம் குறித்த படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது. 350 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.100 ரூபாய் அளவிற்கு புத்தக விற்பனையும் நடைப்பெற்றது…

ஐசான் புத்தகம்-போஸ்டர் விற்பனை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியல் வெளியீடு சார்பில் வெளியிடப்பட்ட ஐசான் பிரச்சார போஸ்டர்கள்.புத்தகங்கள்,போஸ்ட் கார்ட்,செய்திப்பை ஆகியவற்றின் விற்பனையில் கம்பத்தை சேர்ந்த திருமிகு.கே.நந்தகுமார் அவர்களது பணி போற்றுதலுக்குரியது, அளப்பரியது.. கம்பம் பகுதியை சுற்றி அமைந்துள்ள அனைத்து பள்ளி.கல்லூரிகளிக்கும் சென்று ஐசான் பிரச்சாரத்தை மேற்கொண்டு புத்தக விற்பனையையும் மிகச்சிறப்பாக மேற்கொண்டார். கடமலை-மயிலை,கம்பம்ஆகிய ஒன்றியங்களில் மட்டுமே புத்த்க விற்பனை மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.மற்ற ஒன்றியங்களில் மேலும் கவனம் செலுத்தப்ப்ட வேண்டும்…

Nov 24, 2013

தேனி மாவட்டத்தில் ஐசான் வால்நட்சத்திரம் குறித்த பிரச்சாரம்

 ஐசான் வால் நட்சத்திரம் குறித்து பிரச்சார இயக்கம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 16 அன்று சனிக்கிழமை கம்பம் பெரியகுளம் ஒன்றிய வட்டார வள மையங்களில் ஐசான் வால் நட்சத்திரம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டட்து.ஐசான் போஸ்டர் விற்பனையும் நடைப்பெற்றது. கம்பம் ஒன்றிய வட்டார வள மையத்தில் மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன் மாநிலச் செயலாளர் தே.சு ந்தர், கம்பம் கிளைசெயலர் க.முத்துக்கண்ணன் ,கே.நந்தகுமார்,ஜி.பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.பெரியகுளம் ஒன்றிய வட்டார வள மையத்தில் மாவட்ட தலைவர் திருமிகு.பா.செந்தில்குமரன் மற்றும் பெரியகுளம் கிளைச் செயலர்.ஆர் ராம்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதன்மைக் கல்வி அலுவலர் சந்திப்பு 2 : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 19 செவ்வாய்க்கிழமை அன்று மாலை தேனி பி.சி. கான்வெண்ட் பெண்கள் பள்ளியில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமிகு.எம் வாசு அவர்களை மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட் ராமன், மாநிலச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் மாவட்ட தலைவர் திருமிகு பா.செந்தில் குமரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு.ஆர்.அம்மையப்பன்,ஆகியோர் சந்தித்து ஐசான் வால்நட்சத்திர பிரச்சார வழிமுறைகள் குறித்தும் நவம்பர் 23 சனிக்கிழமை அன்று ஐசான வேன் பிரச்சார செல்லும் பாதை குறித்து விளக்கிக் கூறினர்.

ஐசான் துண்டு பிரசுரம் வெளியீடு :அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்(RMSA) சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நவம்பர் 20 திங்கள்கிழமை தேனி பி.சி. கான்வெண்ட் பெண்கள் பள்ளியில் நடைப்பெற்றது.அக்கண்காட்சியின் பரிசளிப்பு விழாவில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமிகு.எம் வாசு அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஐசான் வால் நட்சத்திரம் குறித்த துண்டு பிரச்சாரத்தை வெளியிட பெரியகுளம் கல்வி மாவட்ட அலுவலர் திருமிகு. நாகராஜீ அவர்கள் பெற்றுக் கொண்டார். துண்டு பிரச்சுரத்தை மாவட்டசெயலாளர் வி.வெங்கட் ராமன், மாவட்ட தலைவர் பா.செந்தில் குமரன்,மாவட்ட பொருளாளர் ஜெ.மஹபூப் பீவி ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அம்மையப்பன் ஆண்டிப்பட்டி கிளைச் செயலாளர் திருமிகு.அழகு கணேசன் ஆகியோர் அங்கு வந்திருந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்தனர்.அதே தினத்தன்று மாநிலச்செயலாளர் தே.சுந்தர் மற்றும் கம்பம் கிளைச் செயலாளர் க.முத்துக்கண்ணன் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுருளிப்பட்டி மற்றும் அரசு மேல் நிலைப்பள்ளி,சுருளிப்பட்டி ஆகிய பள்ளிகளுக்கு சென்று ஐசான் வால் நட்சத்திரம் குறித்து மாணவ-மாணவியர்களுக்கு வகுப்பறையில் சிறிது நேரம் விளக்கியதோடு துண்டு பிரச்சுரத்தை விநியோகம் செய்தனர்.

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர், 18 முதல் ஐசான் வேன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை, நாகை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து வேன் பிரச்சாரம் துவங்கியது. தென் மண்டலத்தில் குமரியில் கிளம்பிய பிரச்சார வேன் நவ.23 அன்று தேனி மாவட்டத்திற்கு வந்தது.

 தேனி மாவட்ட அளவிலான பிரச்சாரத் துவக்கவிழா ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சேகர் முன்னிலை வகித்தார். மாவட்டச்செயலாளர் வி.வெங்கட்ராமன் வரவேற்றார். வேன் பிரச்சாரத்தினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு அவர்கள் துவங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

   பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலர் நாகராஜ், உத்தமபாளையம் மாவட்டக்கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பெருமாள்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் பேரா.மோகனா, மாநிலச்செயலாளர் தே.சுந்தர், கல்வியாளர் அமல்ராஜன், மாநில பிரச்சார ஒருங்கிணைப்பாளர் மு.தியாகராஜன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஆண்டிபட்டி கிளைச்செயலாளர் அழகு கணேசன் நன்றி கூறினார். அறிவியல் இயக்கத்தின் பெரியகுளம் செயலாளர் ராம்சங்கர், கம்பம் செயலாளர் முத்துக்கண்ணன், போடி செயலாளர் ஸ்ரீதர், உத்தமபாளையம் செயலாளர் ஜஸ்டின் ரவி, மாவட்டத்துணைச்செயலாளர் ஞானசுந்தரி, மாவட்ட கருத்தாளர்கள் அம்மையப்பன், சேசுராஜ், பாண்டி, சிவக்குமார், நந்தகுமார் உள்ளிட்ட குழுவினர் மாவட்டம் முழுவதும் ஐசான் வால்நட்சத்திரம் குறித்த வேன் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

       பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஐசான் குறித்து கருத்துரை, போஸ்டர் கண்காட்சி, பவர்பாயிண்ட் காண்பிக்கப்பட்டது. தொலைநோக்கி மூலம் விளக்கமும் அளிக்கப்பட்டது. 
     
       ஆண்டிபட்டி,தேனி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஒன்றியங்களில் வேன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சுமார் 10000 மாணவர்கள் வரை ஐசான் குறித்தும் வானவியல் குறித்தும் செய்திகள் சென்றடைந்துள்ளது.



Nov 20, 2013

ஐசான் வால்நட்சத்திரம் காண்போம்! : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பிரச்சாரம்.


           வானவியல் என்பது அனைவருக்கும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியதுஇதற்குக் காரணம் வானம் அனைவருக்கும் ஒரு பொதுவான ஆராய்ச்சிக் கூடமாக விளங்குவதேயாகும்எனவேதான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரும் இரவில் வானத்தை நோக்குவது என்பது மனிதன் தோன்றிய கலத்தில் இருந்து பிடித்தமான செயலாக இருந்து வருகிறதுஇதுவே வானவியல் அறிவியல்களின் தாயாக அமையக் காரணமாகவும் விளங்கியது.


              குழந்தைகள் மட்டும் அல்லாது அனைவருமே அறிவியலைப் படிப்பதை விட நேரடியாகச் செய்து பார்ப்பதின் மூலம் எளிதில் கற்றுக் கொள்கிறோம்மேலும் ஆர்வமும் அதிகமாகிறதுஅறிவியல் ஆர்வத்தை மக்களிடம் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் Vigyan Prasar மற்றும் NCSTC-network ஆகியவை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற நம்நாடு முழுவதும் உள்ள பல தன்னார்வ அறிவியல் இயக்கங்களுடன் சேர்ந்து பல பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனசமீபத்தில் நடந்த சர்வதேச வனவியல் ஆண்டு – 2009, வளைய சூரியகிரகணம்-2010, வெள்ளி இடைநகர்தல் – 2012 (Transition of Venus) போன்றவற்றை மக்களிடத்தில் ஒரு இயக்கமாகக் கொண்டு சென்றதை உதாரணமாகக் கூறலாம்.
         தற்போது சூரியனை நெருங்கிவரும் ஐசான் (C/2012 ISON) என்ற வால்நட்சத்திரம் அறிவியலை மக்களிடத்தே பரப்புவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதுஇந்த வால்நட்சத்திரம் நவம்பர் முதல் இரண்டாம் வாரத்திலிருந்து தெரிய ஆரம்பிக்கிறது.நவம்பர் 28ம் தேதி சூரியனுக்கு வெகுஅருகில் சென்று பின் டிசம்பர் முதல் மீண்டும் தெரியும்இந்த நூற்றாண்டின் மிக பிரகாசமன வால் நட்சத்திரமாய் அமையலாம் எனக் கருதப்படுகின்றதுஇந்த வான் நிகழ்வினை அனைத்து பள்ளிக் குழந்தைகளும் குறிப்பாக கிராமப்புறக் குழந்தைகளுக்கு வானவியலின் ஆர்வத்தை ஏற்படுத்துவற்கான ஓர் வாய்ப்பாகக் கருதலாம்.
         இதுவரை வால் நட்சத்திரத்தினை கண்டுபிடித்த ஒரே ஒரு இந்தியர் இந்திய நவீன வானவியலின் தந்தையான வைணு பப்பு என்ற ஒரே ஒருவர்தான்அதுவும் அமெரிக்காவில் படிக்கும்போதுஇந்திய மண்ணிலிருந்து இதுவரை யாரும் புதிய வால்நட்சத்திரங்களை கண்டுபிடித்த்து இல்லைஎனவேபள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடத்தே இதுபற்றிய விழிப்புணர்வையும் ஆராய்ச்சி மனப்பான்மையை தூண்டுவதும் இந்த ”ஐசான் காண்போம்’ பிரச்சாரத்தின் ஒரு நோக்கம் ஆகும்.


Nov 15, 2013

மந்திரமா? த ந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி 2


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு(நவம்பர் 14-2013) வியாழனன்று கடமலை-மயிலை ஒன்றியத்திறகு உட்பட்ட உப்புத்துறை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.இராணி தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கன்னியாகுமரி மாவட்ட கருத்தாளர் திருமிகு.எஸ்.தாமோதரன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் செயல்பாடுகள் பலவற்றை செய்து காட்டினர். மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியை இறுதியில் நன்றி கூறினார்.

மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு(நவம்பர் 14-2013)வியாழனன்று கடமலை-மயிலை ஒன்றியத்திறகு உட்பட்ட பூசணியூத்து கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி காலை 11 மணி அளவில் நடைபெற்றது.துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.முருகன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கன்னியாகுமரி மாவட்ட கருத்தாளர் திருமிகு.எஸ்.தாமோதரன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் செயல்பாடுகளை செய்து காட்டினர். உயர் நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளியைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மானவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் திருமிகு.இரா.ஸ்டாலின் இறுதியில் நன்றி கூறினார்.

Nov 13, 2013

முதன்மைக் கல்வி அலுவலர் சந்திப்பு

:தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து நமது வாழ்நாளின் அதிசியமான ஐசான் எனும் வால் நட்சத்திரம் குறித்து மாபெரும் பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்ட்து. நவம்பர் 12 அன்று மாலை 5 மணி அளவில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமிகு.எம் வாசு அவர்களை முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட் ராமன் மாநிலச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு.ஆர்.அம்மையப்பன், கம்பம் கிளை செயலாளர் திருமிகு.கே.முத்துக்கண்ணன் ஆகியோர் ச ந்தித்து ஐசான் வால்நட்சத்திர பிரச்சாரத்தின் அவசியம் குறித்து விளக்கிக் கூறினர்.முதன்மை கல்வி அலுவலுருடனான சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாய் இருந்தது…. பிரச்சார வழிமுறைகளுடன் மீண்டும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டது.