முதல் பக்கம்

Nov 15, 2013

மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு(நவம்பர் 14-2013)வியாழனன்று கடமலை-மயிலை ஒன்றியத்திறகு உட்பட்ட பூசணியூத்து கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி காலை 11 மணி அளவில் நடைபெற்றது.துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.முருகன் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க கன்னியாகுமரி மாவட்ட கருத்தாளர் திருமிகு.எஸ்.தாமோதரன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் செயல்பாடுகளை செய்து காட்டினர். உயர் நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளியைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மானவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் திருமிகு.இரா.ஸ்டாலின் இறுதியில் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment