முதல் பக்கம்

Aug 21, 2017

வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் 1

ஆக.21 அன்று தேனி மாவட்டம் முழுவதுமுள்ள நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான குழந்தைகள் அறிவியல் மாநாடு- வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் மாவட்டத் தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உஸ்மான் அலி வரவேற்றுப் பேசினார். மாவட்டச் செயலாளர் ஈ.ஜெகநாதன் அறிமுக உரையாற்றினார். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கணேஷ் , உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வீராசாமி ஆகியோர் ஊக்க உரையாற்றினர். மாநிலத் தலைவர் பேரா.மோகனா மாநாட்டு கருப்பொருள் குறித்த விளக்கவுரையாற்றினார். சுமார் 150 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அறிவியல் இயக்க நிர்வாகிகள் பெரியகுளம் பாலு, ஞானசுந்தரி, போடி கிளைச்செயலாளர் ஸ்ரீதர், தேனி கிளைச்செயலாளர் ராம்குமார் ஆண்டிபட்டி கிளைச் செயலாளர் முருகேசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிறைவாக 85 உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் 54 துளிர் சந்தாக்கள் பெறப்பட்டன.

Aug 18, 2017

தேனியில் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டு விழா


ஆக.18 அன்று பிற்பகல் தேனி மாவட்டத்தில் கடந்த 2016-17 கல்வியாண்டில் 10, 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற சுமார் 60 பள்ளிகளுக்கான பாராட்டு விழா மாவட்டத் தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஈ.ஜெகநாதன் வரவேற்றுப் பேசினார். மாவட்டத் துணைத்தலைவர்கள் பேரா.செல்வராஜ், ஜான்சன், ஏ.எஸ்.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் தே.சுந்தர் துவக்கிவைத்துப் பேசினார். 




மாவட்டக் கல்வி அலுவலர் (பெரியகுளம்) வீ.செல்வம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பி.என்.கணேஷ் ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினர். முன்னாள் மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் நிறைவுரையாற்றினார். மாவட்டத் துணைத்தலைவர் ஆர்.அம்மையப்பன் நன்றி கூறினார். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன், கிளைச் செயலாளர்கள் ப.ஸ்ரீதர், முருகேசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Aug 15, 2017

மாவட்டச் செயற்குழு

ஆக.15 அன்று பிற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயற்குழு மாவட்டத் தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் எம்.கே.மணிமேகலை வரவேற்றுப் பேசினார். நடைபெற்ற பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் ஈ.ஜெகநாதன் பேசினார். மாவட்ட, மாநில மாநாடு பரிசீலனைகள், உபகுழு வேலைப் பகிர்வுகள், குழந்தைகள் அறிவியல் மாநாடு, வினாடி வினா, உறுப்பினர் சேர்க்கை ஆகிய கூட்டப்பொருள்களின் மீது விவாதிக்கப்பட்டது. மாநிலச் செயலாளர் தே.சுந்தர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். தேனி கிளைச் செயலாளர் ராம்குமார் நன்றி கூறினார்.

Aug 9, 2017

அறிவியலுக்காக அணிவகுப்போம் இந்தியா பேரணி


“அறிவியல் வளர்ச்சிக்காக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% நிதி ஒதுக்க வேண்டும். கல்விக்காக 10% நிதி ஒதுக்க வேண்டும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 51 A(h) வலியுறுத்துவதன் படி மக்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வை, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். பாடத்திட்டம் மற்றும் நாட்டின் கல்விக் கொள்கைகள் அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்..” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.9- நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட நகரங்களில் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் சார்பில் அறிவியலுக்காக அணிவகுப்போம் இந்தியா… என்ற பெயரில் பேரணிகள் நடைபெற்றன..


நமது பகுதியில் கம்பம் நகரில்  ஆக.9  அன்று மாலை பேரணி நடைபெற்றது. அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட துணைத் தலைவர் பேராசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர் அறிமுக உரையாற்றி பேரணியைத் துவங்கி வைத்தார். பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அறிவியல் செயல்பாட்டாளர்கள் பங்கேற்றனர். கம்பம் காந்தி சிலை அருகில் துவங்கி காமராசர் சிலை அருகே நிறைவுற்றது. இறுதியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் ஜெயமுருகன், வாலிபர் சங்க செயலாளர் லெனின், கலிலியோ அறிவியல் மையத்தின் சத்யமாணிக்கம் ஆகியோர் பேசினர். அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைச் செயலாளர் சுரேஷ்கண்ணன், தேனி கிளைச் செயலாளர் இராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கம்பத்தில் வினாடி வினா போட்டி

ஆக.9 அன்று பிற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கம்பம் ஒன்றியக் கிளை சார்பில் வினாடிவினா போட்டி கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சுரேஷ்கண்ணன் வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பெரோஷ், வளையாபதி, தலைமை ஆசிரியர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 பள்ளிகள் கலந்துகொண்டன. நிறைவாக மாநிலச் செயலாளர் தே.சுந்தர் ஹிரோஷிமா நாகசாகி தினம் குறித்து உரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன், ஜி.பாண்டி, மருத்துவர் இன்பசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தனசேகரன், சோமநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.