முதல் பக்கம்

Aug 31, 2013

ஹிரோசிமா நாகசாகி நினைவு தின போட்டிகள் – 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 6 & 9 தேதிகளில் ஹிரோசிமா நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் ஆர்வலர்கள் பங்கு பெறும் போட்டிகளை நடத்தி வருகிறது. மாநில மையம் அறிவித்த தலைப்புகளில் தேனி மாவட்டத்தில் போட்டிகள் அறிவிக்கப்பட்டன.பத்திரிக்கை செய்தி தரப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட பள்ளிகள், 5 கல்லூரிகளுக்கு தபால் மூலம் போட்டிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. மாவட்டத்தில் இருந்து 135 ஓவியங்கள், 82 கட்டுரைகள், 17 கவிதைகள் பெறப்பட்டன. ஹிரோடிமா நாகசாகி நினைவு தினப்போட்டிகளை பெரியகுளம் கிளை செயலாளர் திருமிகு ராம்சங்கர் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

Aug 29, 2013

மாவட்ட செயற்குழு கூட்டம்-2

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் 28.08.2013(புதன்கிழமை) மாலை 5 மணி அளவில் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் கருணா பயிற்சி மையத்தில் நடைபெற்றது.இணைச்செயலாலர் திருமிகு ஞானசுந்தரி தலைமை தாங்கினார்.மாவட்ட பொருளாளர் மஹபூப்பீவி முன்னிலை வகித்தார். தேனி, கம்பம், பெரியகுளம், கடமலை-மயிலை ,போடி ஆண்டிபட்டி,உத்தமபாளையம்,சின்னமனூர் உள்ளிட்ட கிளைகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போரடிய மகாராஸ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நரெந்திர தபோல்கர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளை வாரியாக நடைப்பெற்ற வேலைகள் விவாதிக்கப்பட்டன.மாநில செயற்குழுவில் உபகுழு வாரியாக எடுக்கப்பட்ட முடிவுகளை மாநில செயலாளர் திருமிகு சுந்தர் எடுத்துக்கூறினார்.துளிர் திறன்அறிதல் தேர்வை சிறப்பாக நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.ஹிரோசிமா நாகசாகி நினைவு தின நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்த திருமிகு.இராம் சங்கர் மற்றும் மாவட்ட செயலாளர் விவெங்கட் ராமன் அகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.உடனடி பனிகளாக ஆசிரியர் தினம் அன்று நிகழ்ச்சிகளை நடத்த முடிவு எடுக்கப்பட்டது. கம்பம் கிளை செயலாளர் திருமிகு முத்துக்கண்ணன் சாமிகளின் பிறப்பும் இறப்பும் எனும் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

Aug 27, 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்: 17வது மாநில மாநாடு

துவக்கவிழா: 

மாநாட்டின் சில பதிவுகளைக் காண:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 17வது மாநில மாநாடு ஆக.2.2013 மாலை காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள கிருஷ்ணமஹாலில் மிகச்சிறப்பாக துவங்கியது. மாண்புமிகு.நீதியரசர் கே.சந்துரு உள்ளிட்ட சிறப்புவிருந்தினர்கள் மேளதாளங்கள் முழங்க மேடையேறினர்.

துவக்க விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத்தலைவர் முனைவர்.என்.மணி தலைமை வகித்துப் பேசினார்.காஞ்சிபுரம் மாவட்டத்தலைவர் திருமிகு. எஸ்.ஜனார்த்தனன் முன்னிலை வகிக்க, மாநாட்டு வரவேற்புக் குழுச்செயலாளர் திருமிகு.ஜி.முனுசாமி வரவேற்றுப் பேசினார். அறிவியல் இயக்க ஸ்தாபர்களில் ஒருவரானமாண்புமிகு.நீதியரசர் கே.சந்துரு மாநாட்டைத்துவங்கி வைத்துப் பேசினார். கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சிநிலையத்தின் இயக்குநர் டாக்டர்.பி.ஆர்.வாசுதேவராவ் அறிவியல் இயக்க புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்துரைவழங்கினார். மேலும் பாவினி அமைப்பின் தலைவர் & நிர்வாக இயக்குநர் டாக்டர்.பிரபாத் குமார், செயல் இயக்குநர்திருமிகு.டேவிட் கடவில் அந்தோணி, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்திருமிகு.சி.பி.நாராயணன், பொதுச்செயலாளர் திருமிகு.ஜி.கங்காதரன், செங்கல்பட்டு வருவாய்க் கோட்டாட்சியர்திருமிகு.ஜி.செல்லப்பா, முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு.எஸ்.சாந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டுவரவேற்புக்குழு பொருளாளர் திருமிகு.எ.குமார் நன்றி கூறினார்.

கல்வி & சுகாதாரம் குறித்த கருத்தரங்கம்:

மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர்.எஸ்.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர்திருமிகு.என்.மாதவன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் தேமொழிச்செல்வி முன்னிலை வகித்தார். திருவனந்தபுரம்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.இக்பால் கருத்துரையாற்றினார். மாநிலச் செயற்குழு உறூப்பினர்திருமிகு.எஸ்.பார்த்தசாரதி நன்றி கூறினார்.

பிரதிநிதிகள் அமர்வு:

இரண்டாவது நாள் (ஆக.3) பிரதிநிதிகள் அமர்வு நடைபெற்றது. மாநிலத்தலைவர் முனைவர்.என்.மணி தலைமைவகித்தார். மாநிலப்பொதுச்செயலாளர் திருமிகு.எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலம்முழுவதும் நடைபெற்ற அறிவியல் இயக்கப் பணிகள் குறித்த செயலறிக்கை சமர்ப்பித்துப் பேசினார்.மாநிலப்பொருளாளர் திருமிகு.எஸ்.சுப்ரமணி நிதியறிக்கை சமர்ப்பித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து மாவட்டவாரியாக குழு விவாதம் நடந்தது. மாவட்ட வாரியாக நண்பர்கள் குழுவிவாத அறிக்கையினைச் சமர்ப்பித்தனர்.பொதுச்செயலாளர் அதன் மீதான தொகுப்புரை வழங்கினார்.

இயற்கை வள மேலாண்மை கருத்தரங்கம்:

மாநிலத்துணைத்தலைவர் பேரா.சோ.மோகனா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன்வரவேற்றார். புதுதில்லி, விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் பதிவாளர் டாக்டர்.த.வி.வெங்கடேஸ்வரன், சுற்றுச்சூழல் நிபுணர்திருமிகு.சி.இ.கருணாகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சுற்றுச்சூழல் நிபுணர் திருமிகு.பி.கே.இராஜன்கலந்துகொண்டார். காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.தீனதயாளன் நன்றி கூறினார்.

பேரணி & பொதுநிகழ்ச்சி:

செங்கல்பட்டு அரிமா சங்க பொறுப்பாளர் திருமிகு.எம்.எஸ்.முருகப்பா பேரணியைத் துவங்கி வைத்தார். காஞ்சிபுரம்மாவட்டத் துணைத்தலைவர் திருமிகு.எம்.ஜெயவேல் தலைமை வகிக்க மாநிலச்செயலாளர் எம்.முகமது பாதுஷாவரவேற்றார். திரைப்பட இயக்குநர் திருமிகு.பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரையாற்றினார். பாடல்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.

ஆற்றல் வளங்களும் மாற்று வளங்களும் கருத்தரங்கம்:

மூன்றாம் நாள் (ஆக.4) காலை நடந்த கருத்தரங்கிற்கு BARC-WSD அமைப்பின் தலைவர் டாக்டர்.வேல்முருகன் தலைமைவகித்தார். கல்பாக்கம் விஞ்ஞான் அலுவலர் டாக்டர்.ம்.சூரியமூர்த்தி, உத்திரமேரூர் கிளைத்தலைவர்திருமிகு.எல்.வரகுணபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர்திருமிகு.சி.வெங்கடேசன் வரவேற்றார். சென்னை அணுமின் நிலையம் தொழில்நுணுக்க தணிக்கை அதிகாரிதிருமிகு.ஜி.இரவிசங்கர் கருத்துரை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.த.பாரதி நன்றி கூறினார்.

இணை அமர்வுகள்:

பல்வேறு தலைப்புகளில் இணை அமர்வுகள் நடைபெற்றன. வளர்ச்சி குறியீடுகளை மக்களுக்கானதாக மாற்றிஅமைப்போம் என்ற தலைப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர்.புஷ்பராஜ், பாடம்இதழாசிரியர் திருமிகு.கி.நாராயணன் ஆகியோரும் பாலின பாகுபாட்டை பகுப்பாய்வு செய்வோம் என்ற தலைப்பில் SBIOAதாளாளர் திருமிகு.டி.தாமஸ் பிராங்கோ, ஐ.ஐ.டி.பேராசிரியர் முனைவர்.கல்பனா ஆகியோரும் அறிவியல் வளர்ச்சியும்விழிப்புணர்வும் என்ற தலைப்பில் AIPSN செயற்குழு உறுப்பினர் பேரா.பொ.இராஜமாணிக்கம், NCSCTCன் செயலாக்கக்குழு உறுப்பினர் திருமிகு.சி.இராமலிங்கம் ஆகியோரும் தரமான கல்வி கானல் நீரா? தலைப்பில் புதிய ஆசிரியன்இதழாசிரியர் பேரா.கே.இராஜீ, யுனிசெப் ஆலோசகர் (குழந்தைகள் பாதுகாப்பு) திருமிகு.பி.பாலமுருகன் ஆகியோரும்,உணவையும் மருந்தையும் அடிப்படை ஆதாரமாக்குவோம் என்ற தலைப்பில் AIPSN முன்னாள் தலைவர் பேரா.ஆத்ரேயா, GIEA தென் மண்டலப் பொதுச்செயலாளர் திருமிகு.ஆனந்த் ஆகியோரும் தண்ணீர் நமது அடிப்படை உரிமை என்றதலைப்பில் விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் திருமிகு.பெ.சண்முகம், மதுரைக் கல்லூரி பேராசிரியர்முனைவர்.எஸ்.தினகரன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர். திருமிகு.எல்.பிரபாகரன், திருமிகு.ஜெ.ஜான்சிலிபாய் (மாநிலத்துணைத்தலைவர்) திருமிகு.எஸ்.டி.பாலகிருஷ்ணன் (மாநிலத்துணைத்தலைவர்), திருமிகு.அ.அமலராஜன்(மாநிலச்செயற்குழு) திருமிகு.எம்.இராதா (மாநிலச் செயலாளர்), திருமிகு.கு.செந்தமிழ்ச் செல்வன்(மாநிலத்துணைத்தலைவர்) ஆகியோர் இணை அமர்வுகளை ஒருங்கிணைத்தனர்.

புதிய நிர்வாகக்குழு:

அதனையடுத்து புதிய பொதுக்குழு, செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. செயற்குழு கூடி அடுத்த இரண்டுஆண்டுகளுக்கான மாநிலத் தலைவராக முனைவர்.என்.மணி, பொதுச்செயலாளராக திருமிகு.எம்.எஸ்.ஸ்டீபன் நாதன்,பொருளாளராக திருமிகு.எல்.பிரபாகரன் ஆகியோரும் மாநிலத் துணைத் தலைவர்களாக பேரா.சோ.மோகனா, திருமிகு.எஸ்.டி.பாலகிருஷ்ணன், திருமிகு.எம்.இராதா, திருமிகு.என்.மாதவன், முனைவர்.இந்துமதி ஆகியோரும் மாநிலச்செயலாளர்களாக திருமிகு.எஸ்.சுப்ரமணி, திருமிகு.மு.தியாகராஜன், திருமிகு.முகமது பாதுஷா,திருமிகு.அ.அமலராஜன், திருமிகு.ஜெ.ஜான்சிலிபாய், திருமிகு.எல்.நீலா, திருமிகு.தே.சுந்தர் ஆகியோரும் தேர்வுசெய்யப்பட்டனர்.

அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர். திருமிகு. வெங்கடேஷ் பா.ஆத்ரேயா புதியநிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மாநாட்டு நிறைவுரையாற்றினார். மாநிலம் முழுவதுமிருந்து தமிழ்நாடு அறிவியல்இயக்கப் பிரதிநிதிகள் 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் காஞ்சிபுரம் மாவட்ட அறிவியல் இயக்கத்தின் சார்பில்நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. செங்கல்பட்டு முழுவதும் போஸ்டர்கள், சுவரெழுத்துகள் என திரும்பும் திசையெங்கும்மாநாட்டுச் செய்திகள்... கூடுமான அளவில் பிளக்ஸ் பேனர் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு காஞ்சி நண்பர்கள்பெருஞ்சிரத்தை எடுத்துள்ளனர். மாநாட்டை வெற்றி பெறச் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறாமல் இருக்கமுடியுமா? நன்றி.. நன்றி... நன்றி.. 

தே.சுந்தர்,மாநிலச் செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
பேச: 94880 11128

Aug 22, 2013

ஹிரோஷிமா-நாகசாகி தின போட்டிகள்-2013

அன்புடையீர்,

வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகம் முழுவதும் மக்களிடையே ஏராளமான அறிவியல் விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. கடந்த 1945ஆம் ஆண்டில் ஆகஸ்ட், 6,9 தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி நகரங்களில் நிகழ்ந்த அணுகுண்டுத் தாக்குதலால் இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள். அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு ஹிபாகுஷாக்கள் என்ற தனி இனமே உருவானது. இன்றும் உலகின் பல பகுதிகளில் போர்களும் பலிகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 
 

எனவே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இக்கொடுரத் தாக்குதல் நடைபெற்ற தினங்களைப் போர்களுக்கு எதிரான தினமாக அனுசரித்து அமைதியை வலியுறுத்தியும் அறிவியல் அமைதிக்கே, அறிவியல் ஒற்றுமைக்கே, அறிவியல் உலக சமாதானத்திற்கே என்பதை வலியுறுத்தியும் குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே போட்டிகளையும் பள்ளி மாணவர்களின் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி இயக்கத்தையும் கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.. இவ்விழிப்புணர்வு இயக்க நிகழ்வுகளில் தங்கள் பள்ளியின் சார்பில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி. 
 

போட்டிகளின் விபரம் பின்வருமாறு:

6,7,8 மாணவர்களுக்கு: ஓவியப்போட்டி :
தலைப்பு: அறிவியலால் அழகு செய்வோம் இப்பூவுலகை...
அளவு:(30*45செ.மீ.சார்ட்)

9,10,11,12 மாணவர்களுக்கு: கட்டுரைப்போட்டி;
தலைப்பு: ஆற்றல் தேவைகளும் மாற்று வழிமுறைகளும்
(4 பக்க அளவில் ... சொந்த கையெழுத்தில்)

கல்லூரி மாணவர்களுக்கு: கவிதைப்போட்டி:
தலைப்பு: சாதிமதங்களின் வேலிக்குள்ளே நாம்!?
(20 வரிகளில் .... சொந்த கையெழுத்தில்)

ஆசிரியர்களுக்கு: கட்டுரைப்போட்டி:
தலைப்பு: அறிவியல் வளர்ச்சியும் மனிதகுல ஏற்றத்தாழ்வும்
(4 பக்க அளவில்... சொந்த கையெழுத்தில்)

ஆர்வலர்கள்/சுய உதவிக்குழுவினருக்கு: கட்டுரைப்போட்டி:
தலைப்பு: உலகமயத்தால் மாயமாகும் உள்ளூர் வளங்கள்
(4 பக்க அளவில் .... சொந்த கையெழுத்தில்) 
 

படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி:
  திருமிகு. எஸ்.ராம்சங்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஹிரோஷிமா தின போட்டிகள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், டிரயம்ப் பள்ளி, பெரியகுளம் ,பேச: 9952511460, 9488683929, 9942112203,9488011128

கடைசி தேதி: ஆகஸ்ட்,26,2012

தாய்ப்பால் வாரம்:ஆகஸ்ட் 1-7 : தேனி.சுந்தர்



தாய்ப்பால் அவசியம்:

WHO, UNICEF, WABA (World Alliance for Breastfeeding Action), IBFAN (International Baby Food Action Network போன்ற அமைப்புகள் சர்வதேச அளவில் தாய்ப்பால் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக பல பணிகளைச் செய்து வருகின்றன. இந்தியாவில் இதற்கெனவே ஒரு அமைப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது. அதுதான் BPNI (Breastfeeding Promotion Network of India) இந்த அமைப்பு உலக தாய்ப்பால் வார நிகழ்வை 1992 முதல் இந்தியாவில் ஒருங்கிணைத்து வருகிறது. 
 

தாய்ப்பால் தருவது, தாயின் உடல்நலனுக்கும் உகந்தது. குழந்தை பிறந்த முதல் அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க தொடங்க வேண்டும். முதல் முறை கொடுக்கப்படும் பால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்படுகிறது. குழந்தைக்கு தேவையான புரதங்கள் இதில் அடங்கியுள்ளன. குழந்தை பிறந்தது முதல், ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் எனவும், குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் வழங்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்துகிறது. முழுமையான தாய்ப்பால் வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் 1.5 மில்லியன் குழந்தை மரணங்களைத் தவிர்க்க முடியும் (யுனிசெப்).


தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம். குழந்தை மரணங்களும் தாய்ப்பால் தருவதால் தவிர்க்கப்படுகிறது. ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது அவசியம். குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான பிணைப்பு தாய்ப்பால் தருவதன் மூலம் அதிகரிக்கிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து 50% குறைகிறது. சரியான தாய்ப்பால் பெற்ற குழந்தைகளின் நுண்ணறிவு பிற குழந்தைகளை விடவும் 8 புள்ளிகள் அதிகமெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது தவிர நம்மை அதிர்ச்ச்க்குள்ளாக்கும் ஆய்வுகளும் சில புள்ளி விபரங்களும் இருக்கின்றன. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 6.9 மில்லியன் குழந்தைகள் இறக்கின்றனர். நாளொன்றுக்கு சுமார் 14000 குழந்தைகள் இறந்துகொண்டுதான் இருக்கின்றனர். சரியான முறையில் தாய்ப்பாலூட்டுவதன் மூலம் 8,30,000 குழந்தை இறப்புகளைத் தடுக்க முடியும். குழந்தை பிறந்த 1 மணி நேரத்தில் பாலூட்டுவதன் மூலம் 22% இறப்புகளையும் 24 மணி நேரத்திற்குள் பாலூட்டுவதன் மூலம் 16% இறப்புகளையும் தவிர்க்க இயலும். குழந்தை பிறந்தவுடன் 1 முறை பாலூட்டுவதும் 1 நாள் கழித்து 3 முறை பாலூட்டுவதும் சமமே. 6 மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் நிமோனியாவில் இறப்பதற்கு 15 மடங்கும் வயிற்றுப்போக்கால் இறப்பதற்கு 11 மடங்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் 93 பில்லியன்/ மூன்றில் இரண்டு மடங்கு குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்குள்ளாகவே தாய்ப்பால் தவிர்த்த செயற்கை உணவுகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான பால் வர்த்தகம் மட்டுமே உலக அளவில் 25 பில்லியன் டாலர் அளவிற்கு நடைபெறுகிறது. குழந்தை உணவுப்பொருள் தயாரிப்பு தொழில் வளர்ச்சியில் 31% இலக்கு நிர்ணயித்துள்ளனர். அவர்களின் முக்கிய வியாபாரச் சந்தையாக / இலக்காக இருப்பது நமது ஆசியக் கண்டமே.

தாய்ப்பால் வாரம்:

WABA அமைப்புதான் சர்வதேச அளவில் இந்த தாய்ப்பால் வாரம் நிகழ்வை ஒருங்கிணைக்கிறது.
 
 
 ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மையக்கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மையக்கருத்தாக தாய்ப்பாலுக்கு ஆதரவு: அன்னையருக்கு நெருக்கமாக.. (Breastfeeding Support: Closed to Mothers)) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை அனுசரிப்பதற்கான காரணங்கள் ஐந்து. 1. தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த கவனத்தை ஈர்ப்பது 2. பேறுகாலப் பெண்களுக்கு அனுபவ தாய்மார்களின் ஆலோசனைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவது. பேறுகால பெண்களுக்கான ஆலோசனை முகாம்களை நடத்துவது. 3. தாய்ப்பால் ஆதரிப்போரை பயிற்சிகள் மூலம் மேம்படுத்துவது 4. பேறுகால பெண்களுக்கு ஆதரவாக உள்ளூர் சமுக ஆதரவைத் திரட்டுவது 5. பேறுகாலப் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 10 படிநிலைகளைப் பின்பற்ற அரசுகளை வலியுறுத்துவது. முழுமையாக தாய்ப்பால் வழங்குவோர் சராசரியை உயர்த்தவும் அரசுகளை வலியுறுத்துவது.


உலக சுகாதார நிறுவனம் & யுனிசெப் தாய்ப்பால் ஆதரவு, விழிப்புணர்வுக்காக அறிவித்துள்ள பத்து படிநிலைகள்:

1. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எழுத்துப்பூர்வமான தகவலறிக்கைகளின் மூலமாக அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் தொடர்ந்து நினைவூட்டப்பட வேண்டும்.

2. தாய்ப்பால் ஊட்டச்செய்வதற்கான பணிகளைச் செய்வதற்கான முறையான பயிற்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

3. அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

4. பிரசவம் நிகழ்ந்த அரை மணிநேரத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டத் தொடங்கிட உதவ வேண்டும்.

5. குழந்தையிடமிருந்து தனித்திருந்தாலும் தாய்மார்களுக்கு பாலூட்டலுக்கான பயிற்சியளித்தல் வேண்டும்.

6. மருத்துவ உதவிக்காக மட்டும் அன்றி வேறெவ்வித காரணத்திற்காகவும் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர்த்த திட, திரவ உணவுகளைக் கொடுக்கக் கூடாது.

7. தாயும் சேயும் ஒன்றாக இருக்க செய்தல் வேண்டும்.

8. தேவைக்கேற்ப தாய்ப்பாலூட்ட ஊக்குவிக்க வேண்டும்

9. பால் பாட்டில்கள் தடை செய்வது

10. தாய்ப்பால் ஆதரவு குழுக்கள் அமைத்து மருத்துவமனை, கிளினிக்-ல் இருந்து சென்ற பின்பும் தாய்மார்களுக்கு ஆலோசனை, ஆதரவு அளித்திட வேண்டும்.

மேலும் பேறுகாலப் பெண்கள் குழந்தைகளுக்கு முழுமையாக தாய்ப்பாலூட்ட ஐந்து புறச்சூழல் ஆதரவு தேவை எனவும் WABA அமைப்பு வலியுறுத்துகிறது. அதாவது 1.குடும்ப, சமூக ஆதரவு, 2.பணியிடம்,சுற்றுச்சூழல் 3.அவசரகாலச்சூழலிலும் உரிய ஏற்பாடுகள் (உம்.உத்தரகாண்ட் வெள்ளப்பாதிப்பு போன்ற பேரழிவு நேரங்களில் கூட) 4. சுகாதார நிலைமை 5.அரசுத்தரப்பு (ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, சட்ட திட்டங்கள் வகுப்பதில்)

தாய்ப்பால் வழங்குவதில் என்ன பிரச்சினை?:

தாய்ப்பால் வழங்குவதை அப்பெண்ணின் சமூக, பண்பாடு, கலாச்சார, பொருளாதார, கல்விப் பின்புலங்களும் தீர்மானிக்கின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன. முக்கியமாக எங்கும் எதிலும் லாபம் ஒன்றே குறியெனத் திரியும் பன்னாட்டு, உள்நாட்டு பகாசுரக் கம்பெனிகளின் அநியாயம் தாங்கமுடியாத அநியாயமாக இருக்கிறது. தாய்ப்பாலை, தாய்-சேய் பாசத்தை, குழந்தை வளர்ப்பை மூலதனமாகக் கொண்டு பல்வேறு கம்பெனிகள் தமது தயாரிப்புகளைச் சந்தைக்கு கொண்டு வருகின்றன. தாய்ப்பால் தனியுணவாக குறைந்த பட்சம் 6 மாதங்கள் வழங்குவதில் கூட உலக அளவில் திருப்திகரமான சராசரி நிலையை அடைய முடியாததற்கு இந்தக் கம்பெனிகளின் வியாபார தில்லுமுல்லுகளும் தந்திரங்களுமே பெருங்காரணமாய் இருக்கின்றன. 
 

இவர்களைக் கட்டுப்படுத்தவே IBFAN என்ற அமைப்பின் முயற்சியால் உலக சுகாதார நிறூவனம், யுனிசெப் ஆகியவை 1981ல் பால்துணைப்பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கான சர்வதேச விதிமுறைகளை (International Code of Marketing Breastmilk Substitute) வகுத்துள்ளன.

பால் துணைப்பொருட்கள், பால் பாட்டில்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை முன்னெடுத்துச் செல்லும்பொருட்டு விளம்பரங்கள் செய்வது, பொருட்களை பிரபலப்படுத்தும்பொருட்டு பரிசாகத் தருவது, சாம்பிள்-ஆகத் தருவது, இதற்காக மருத்துவமனை மற்றும் சுகாதார கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள், பணியாளர்களைப் பயன்படுத்துவது, பொருட்களில் குழந்தையுடன் கூடிய தாய்மார்களின் படங்களைப் பயன்படுத்துவது, தாய்ப்பாலின் மகத்துவத்தைக் குறைக்கும் வகையில் வாசகங்களை அச்சிடுவது, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளைக் “கவனிப்பது”, நன்கொடை வழங்குவது, கல்வி சார்ந்த பிற செயல்பாடுகளுக்கான அச்சு, காட்சி ஊடகங்களை நேரடியாக அல்லது மறைமுகமாகப் பயன்படுத்துவது, மருத்துவர்களுக்கு சன்மானம் கொடுப்பது, அவர்களின் உயர்கல்வி, ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்வது ஆகியவை தடைசெய்யப்படுகின்றன.

சரி இந்தியாவின் நிலைமை?

IBFAN- (ஆசியா) அமைப்பால் தாய்ப்பால் வழங்குவதில் உள்ள முன்னேற்றம், கொள்கை ரீதியான பிரச்சினைகள், கள நிலைமைகளை ஆசிய அளவில் 50 நாடுகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. 2012-ல் வெளியான WBTi (-World Breastfeeding Trends Initiative) அறிக்கை நம் தாய்த்திருநாட்டைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.. 15 அம்சங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், இந்தியாவில் இருக்கின்ற மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளைத் திறம்பட ஒருங்கிணைப்பதில் பின்னடைவு, IYCF (Infant and Young Child Feeding) குறித்த தேசிய வழிகாட்டு நெறிமுறைகளை கீழ்மட்ட அளவுகளில் கொண்டுசெல்வதில் பின்னடைவு, உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் ஒதுக்கப்படுகின்ற நிதி அளவினைக் கருத்தில் கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைப்பதற்கான சர்வதேச பத்து படிநிலைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை. BFH (Baby Friendly Hospital) அமைப்பை உருவாக்குவதில் 2005 முதல் எவ்விதத்திலும் முன்னேற்றம் காணப்படவில்லை. (உலக அளவில் 156 நாடுகளில் 20,000 மருத்துவமனைகள் மட்டுமே பாஸ். BFH அமைப்பை 82% மகப்பேறு மருத்துவமனைகளில் நிறுவிய உலகின் முதல் மாநிலமாக கேரளா(இந்தியா) வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. ஆனாலும் தற்போதும் இந்தியாவில் 10% மருத்துவமனைகள் தான். கியூபாவில் 87%, சீனாவில் ஊரகப்பகுதிகளில் 68% நகர்ப்பகுதிகளில் 48% என 6000 மருத்துவமனைகள்-UNICEF & StC அறிக்கை)

IMS-2003 சட்டத்தை முழுமையாக, வலுவாக கொண்டு செல்ல தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவில்லை. சட்டத்தை மீறுபவர்கள் குறித்த நடவடிக்கை எடுக்க மாவட்ட, மாநில அளவுகளில் வலுவான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதைக் கண்காணிக்க பயிற்சி பெற்ற உரிய அலுவலர்கள் இல்லை.இச்சட்டம் குறித்து மக்களிடையே மிகமிகக் குறைந்த அளவே விழிப்புணர்வு உள்ளது. (WBTi)

(இந்தியாவில் இளம்குழந்தைகளுக்கான பால் துணைப்(பதிலி)பொருட்கள், உணவு மற்றும் பால்பாட்டில்கள் தயாரிப்பு, விநியோக ஒழுங்குமுறைச்சட்டம் (IMS ACT-1993) கொண்டு வரப்பட்டது. 2003ல் அச்சட்டத்திற்கு (-Infant Milk Substitute, Feeding Bottles and Infant Foods (Regulation of Production, Supply and Distribution) Amendment Act,2003) வலுவூட்டும் பொருட்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம்தாய்மார்களை குறிவைத்து செய்யப்படும் நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டன.

பிறந்த 6 மாதங்களுக்குள் பகுதியாகவோ, முழுமையாகவோ தாய்ப்பாலுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் பால் துணைபொருட்கள் (Lactogen-1, Lactogen-2, Nestogen-1, Nestogen2, Lactodex- 1, Lactodex - 2, Amul Spray, Zerolac, Dexolac, ProSoyal , Simyl-MCT, Similac Neosure போன்றவை), பால் பாட்டில்கள்: Bonny Baby, Hello Baby, Wipro போன்ற அனைத்து வகைக் கம்பெனிகளின் தயாரிப்புகளும்.. உணவுகள்: 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கான உணவுகளாக முன்வைக்கப்படும் Nestum,Cerelac, Farex, Weano, Veelac, Infacare, First Food, Dexrice, Easum, Junior Horlicks, Growing up milk, health drinks போன்றவையும் இச்சட்ட வரையறைக்குள் வருகின்றன. பால்துணைப்பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கான சர்வதேச விதிமுறைகளுள் (International Code of Marketing Breastmilk Substitute) பல சரத்துகள் இச்சட்டத்திலும் பிரதிபலிக்கின்றன.)

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணிமுன் பயிற்சி போதுமானதாக இல்லை. அங்கன்வாடி, ANM, ASHA பணியாளர்களுக்கான பயிற்சியில் IYCF குறித்த கருத்துகள் இடம்பெறவே இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

நமது இந்தியாவில் ஆண்டுதோறும் 26 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றனர்(NFHS-3). அதில் 25% குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த 1 மணி நேரத்தில் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. 20 மில்லியன் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு மட்டும் கூட முழுமையாக தாய்ப்பால் உணவு கிடைப்பதில்லை. 13 மில்லியன் குழந்தைகளுக்கு 6-9 மாதங்களில் தாய்ப்பாலுடன் சரியான இணை உணவுகள் கிடைக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைப்பதில் கடந்த 20 ஆண்டுகளாக பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. 20% குழந்தைகள் மட்டுமே ஆறு மாதங்களுக்குப் பிறகும் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் பெறுகின்றனர். மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடிப் பணியாளர்களின் சேவையைப் பெறுகின்றனர். நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் மட்டுமே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சத்துணவு பெறுகின்றனர். 18% குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடி மையங்களில் எடை பார்த்துள்ளனர்.

இந்தியா பாரம்பரியமாகவே தாய்ப்பாலுக்கு சிறப்பான இடம் அளிக்கும் நாடு. ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது. தாய்ப்பால் வழங்கும் பெண்களுக்கு சரியான தகவல்கள், வீடு, பணிபுரியும் இடங்களில் உரிய ஏற்பாடு, மகப்பேறு விடுப்பு, குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இருக்கும்பட்சத்தில் இந்நிலை மேலும் உயரும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. 40.5% பெண்கள் பிறந்த உடனேயே தாய்ப்பால் வழங்குகின்றனர். 46.8% பெண்கள் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் வழங்குகின்றனர். அதிகபட்சமாக 24.4 மாதங்கள் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. 12.5% பெண்கள் பாட்டில் பால் கொடுக்கின்றனர். 57.1% பெண்கள் தாய்ப்பால் தவிர்த்த உணவுகளைக் கொடுக்கின்றனர். (WBTi)

மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளுக்குக் கூட முழுமையான தாய்ப்பால் (6மாதங்கள்) வழங்க இயலாத பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று.(தாய்ப்பால் குறித்த சர்வதேச மாநாடு-2012 அறிக்கையில் யுனிசெப்)

இந்தியாவில் 2010ல் உரிய நாட்களுக்கு முன்னதாகவே 13% குழந்தைகள் பிறப்பதாகவும் 20% குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமலும் 47.9% குழந்தைகள் வயதிற்கேற்ற வளர்ச்சியில்லாமலும் இருப்பதாகவும் கூறுகிறது உலக சுகாதார அறிக்கை-2013.

சரி, மேற்கண்ட ஆய்விற்கு வருவோம். WBTi ஆய்வில் கொள்கை மற்றும் திட்டங்கள் சார்ந்த 10 அம்சங்களில் 43/100 மதிப்பெண்களும் குழந்தைகளுக்கு உணவூட்டுதல் சார்ந்த 5 அம்சங்களில் 31/50 மதிப்பெண்களும் ஆக மொத்தம் இந்தியா 74/150 மதிப்பெண்கள் பெற்று C கிரேடில் இருக்கிறது. இருந்தபோதிலும் 2005, 2008 ஆம் ஆண்டுகளை ஒப்பிடும்போது 5 மதிப்பெண்கள் அதிகமாகவே பெற்றிருக்கிறது.

இதுவரை போடப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களில் கடந்த 10, 11 மற்றும் 12வது ஐந்தாண்டுத் திட்டங்களில் தான் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்காக 1% ல் இருந்து 2% ஆக உயர்த்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி, மருத்துவம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதில் மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கின்ற இருக்கின்ற பாய்ச்சல் வேகம் இதுபோன்ற செயல்பாடுகளில் இருந்தால் மக்கள் நலம் பெறுவர். திறன் மிக்க குடிமக்களாய்த் திகழ்வர். உழைப்பு பெருகும். உற்பத்தி பெருகும். பொருளாதார வளர்ச்சியால் நாடு நலம் பெறும்.! வளம் பெறும்..! 
 
நன்றி: விஞ்ஞானச்சிறகு-ஆகஸ்ட்.2013

ஜி.கல்லுப்பட்டியில் கருத்தரங்கம் & பேரணி:


ஆக.6 பிற்பகல் பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட முகாம் இணைந்து நடத்திய கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் திருமிகு.முருகேசன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் திருமிகு. பா.செந்தில்குமரன் கருத்தரங்கைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.


100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு.நாகராஜன் துவங்கிவைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.அம்மையப்பன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

Aug 9, 2013

பொன்னம்மாள்பட்டியில் கருத்தரங்கம் & பேரணி:

ஆகஸ்ட்,8 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கடமலை, மயிலை ஒன்றியக் கிளையின் சார்பில் பொன்னம்மாள் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கருத்தரங்கம் மற்றும் பேரணி நடந்தது. தலைமை ஆசிரியர் திருமிகு.லிங்கப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அறிவியல் வளர்ச்சிக்கே.. அறிவியல் அமைதிக்கே.. அறிவியல் ஆக்கத்திற்கே... அறிவியல் உலக ஒற்றுமைக்கே என்னும் முழக்கங்களை எழுப்பியபடியே கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே வந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிளைச்செயலாளர் திருமிகு.இரத்தினசாமி செய்திருந்தார். 120 மாணவர்கள், ஆசிரியர்கள் திருமிகு.ஜெயப்பிரகாஷ், திருமிகு.பாலகிருஷ்ணன், திருமிகு.வள்ளிராணி, திருமிகு.வடிவாம்பிகை ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுருளிப்பட்டியில் கருத்தரங்கம் & பேரணி:


ஆக.8 அன்று சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளியில் அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளையின் சார்பில் கருத்துரை வழங்கப்பட்டது. மாநிலச்செயலாளர் தே.சுந்தர் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் பவர்பாயிண்ட் விளக்கத்துடன் கருத்துரை வழங்கி பேரணியைத் துவங்கி வைத்தார்.


சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர். அறிவியல் வளர்ச்சிக்கே.. அறிவியல் அமைதிக்கே.. அறிவியல் ஆக்கத்திற்கே... அறிவியல் உலக ஒற்றுமைக்கே என்னும் முழக்கங்களை எழுப்பியபடியே கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே வந்தனர். தலைமை ஆசிரியர்கள் திருமிகு.மேகலா, திருமிகு.இராஜாத்தி மற்றும் ஆசிரியர்கள் ரமேஷ், ராஜேஷ், சீதா, கலையரசி ஆகியோரும் கலந்துகொண்டனர். இறுதியில் அனைவரும் ஹிரோஷிமா தின உறுதிமொழி ஏற்றனர். அறிவியல் இயக்க கம்பம் கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

சுப்பிரமனிய சந்திரசேகர் துளிர் இல்லம்

தேனி மாவட்டம் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் கூடலூர் லோயர்கேம்ப் கிராமத்தில் சுப்பிரமனிய சந்திரசேகர் துளிர் இல்லம் 09-08-2013அன்று காலை துவங்கப்பட்டது.துளிர் இல்ல மாணவர் தமிழ் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ராமன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கானஅறிவியல் கதைகளை கூறினார். சுப்பிரமணிய சந்திரசேகர் பற்றிய எளிய அறிமுகத்தை துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் பொ.சுரேந்தர் எடுத்துக்கூறினார்.கம்பம் கிளை செயற்குழு உறிப்பினர் சுபாஸ் குழந்தைகளுக்கான விளையாட்டுக்களை வழி நடத்தினார்.துளிர் இல்ல தலைவராக பொ.தினேஸ் குமார்,செயலாளராக யோகிசிவசங்கர்,பொருளாளராக பெஸ்வன் ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மாதம் ஒரு முறை துளிர் இல்லம் தவறாமல் கூட வேண்டும் என குழந்தைகள் கேட்டுக்கொண்டனர்.இறுதியில் துளிர் இல்ல செயலர் யோகி நன்றி கூறினார்....
வி.வெங்கட் ராமன் .மாவட்ட செயலாளர்.

Aug 8, 2013

ஹிரோஷிமா தின நிகழ்ச்சிகள் -2013



1945ஆம் வருடம், இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் அமெரிக்க நாடானது மனித குலமே வெட்கித் தலைகுனியும் வகையில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரகளில் சின்னப்பையன், குண்டுப்பையன் என்னும் இரண்டு அணுகுண்டுகளை, மானுட வரலாற்றில் முதல் முறையாக முறையே ஆகஸ்ட், 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் வீசியது. உடனடியாக 1 இலட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டனர். இதன் விளைவாக அந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் 1 இலட்சம் மக்கள் வரை மாண்டனர்.



ஒன்றிரண்டு தலைமுறைகள் கடந்தும் இன்னும் அதன் தழும்புகள் மாறாமல் மரபணுப் பாதிப்பால் பிறக்கின்ற குழந்தைகள் ஊனமாகப் பிறக்கின்றனர். ஹிபாகுஷாக்கள் என்னும் தனி இனமாகவே சுமார் 2 இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடன் மற்றவர்கள் திருமண உறவுகள் கொள்வதில்லை. மேலும் இன்றளவும் உலகில் ஏதேனும் ஒரு பகுதியில் போர்களும் பலிகளும் தொடர்கின்றன. எனவே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஹிரோஷிமா நாகசாகி துயரங்கள் நடந்த நினைவு தினங்களை போர்களுக்கு எதிரான தினங்களாக அனுசரித்து அறிவியலை ஆக்கத்திற்காக, வளர்ச்சிக்காக, உலக ஒற்றுமைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகளை, போட்டிகளை நடத்தி வருகிறது.



மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்:
தேனி ஒன்றியம்: அன்னஞ்சியில் கருத்தரங்கம் & பேரணி:

தேனி ஒன்றியம் அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் இயக்கம் சார்பில் ஆகஸ்ட்,6 அன்று காலை ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.ப.மோகன்குமாரமங்கலம் தலைமை வகித்தார் 
 
 மாவட்டச் செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அன்னஞ்சி, ஊஞ்சாம்பட்டி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. மாணவர்கள் அறிவியல் வளர்ச்சிக்கே.. அறிவியல் அமைதிக்கே.. அறிவியல் ஆக்கத்திற்கே... அறிவியல் உலக ஒற்றுமைக்கே என்னும் முழக்கங்களை எழுப்பியபடியே கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே வந்தனர். 170 பேர் கலந்துகொண்டனர். ஆசிரியர் திருமிகு.சுமன் ஒருங்கிணைத்தார்.

பெரியகுளம் ஒன்றியம்: டி.வாடிப்பட்டியில் கருத்தரங்கம் மற்றும் பேரணி:

பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் இயக்கம் சார்பில் ஆகஸ்ட்,6 அன்று காலை ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திருமிகு.எஸ்.வாசுகி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு.எம்.கே.மணிமேகலை வரவேற்றார். 
 
அறிவியல் இயக்க மாவட்டத் துணைச்செயலாளர் திருமிகு.எஸ்.ஞானசுந்தரி ஹிரோஷிமா- நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வே.ஜெயந்தி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக அமைதியை வலியுறுத்தி மாணவர்கள், ஆசிரியர்களின் பேரணி நடைபெற்றது. 170 பேர் கலந்துகொண்டனர்.

ஜி.கல்லுப்பட்டியில் கருத்தரங்கம் & பேரணி:

ஆக.6 பிற்பகல் பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட முகாம் இணைந்து நடத்திய கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் திருமிகு.முருகேசன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் திருமிகு. பா.செந்தில்குமரன் கருத்தரங்கைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு.நாகராஜன் துவங்கிவைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.அம்மையப்பன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

கம்பம் ஒன்றியம்: சுருளிப்பட்டியில் கருத்தரங்கம் & பேரணி:

ஆக.8 அன்று சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளியில் அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளையின் சார்பில் கருத்துரை வழங்கப்பட்டது. மாநிலச்செயலாளர் தே.சுந்தர் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் பவர்பாயிண்ட் விளக்கத்துடன் கருத்துரை வழங்கி பேரணியைத் துவங்கி வைத்தார்.


சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர். அறிவியல் வளர்ச்சிக்கே.. அறிவியல் அமைதிக்கே.. அறிவியல் ஆக்கத்திற்கே... அறிவியல் உலக ஒற்றுமைக்கே என்னும் முழக்கங்களை எழுப்பியபடியே கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே வந்தனர். தலைமை ஆசிரியர்கள் திருமிகு.மேகலா, திருமிகு.இராஜாத்தி மற்றும் ஆசிரியர்கள் ரமேஷ், ராஜேஷ், சீதா, கலையரசி ஆகியோரும் கலந்துகொண்டனர். இறுதியில் அனைவரும் ஹிரோஷிமா தின உறுதிமொழி ஏற்றனர். அறிவியல் இயக்க கம்பம் கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

கடமலை ஒன்றியம்: பொன்னம்மாள்பட்டியில் கருத்தரங்கம் & பேரணி:

ஆகஸ்ட்,8 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கடமலை, மயிலை ஒன்றியக் கிளையின் சார்பில் பொன்னம்மாள் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கருத்தரங்கம் மற்றும் பேரணி நடந்தது. தலைமை ஆசிரியர் திருமிகு.லிங்கப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். 
 

 
அறிவியல் வளர்ச்சிக்கே.. அறிவியல் அமைதிக்கே.. அறிவியல் ஆக்கத்திற்கே... அறிவியல் உலக ஒற்றுமைக்கே என்னும் முழக்கங்களை எழுப்பியபடியே கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே வந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிளைச்செயலாளர் திருமிகு.இரத்தினசாமி செய்திருந்தார். 120 மாணவர்கள், ஆசிரியர்கள் திருமிகு.ஜெயப்பிரகாஷ், திருமிகு.பாலகிருஷ்ணன், திருமிகு.வள்ளிராணி, திருமிகு.வடிவாம்பிகை ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 

டி.வாடிப்பட்டியில் கருத்தரங்கம் மற்றும் பேரணி:


பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் இயக்கம் சார்பில் ஆகஸ்ட்,6 அன்று காலை ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திருமிகு.எஸ்.வாசுகி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு.எம்.கே.மணிமேகலை வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்டத் துணைச்செயலாளர் திருமிகு.எஸ்.ஞானசுந்தரி ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வே.ஜெயந்தி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக அமைதியை வலியுறுத்தி மாணவர்கள், ஆசிரியர்களின் பேரணி நடைபெற்றது. 170 பேர் கலந்துகொண்டனர்.

அன்னஞ்சியில் கருத்தரங்கம் & பேரணி:

தேனி ஒன்றியம் அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் இயக்கம் சார்பில் ஆகஸ்ட்,6 அன்று காலை ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.ப.மோகன்குமாரமங்கலம் தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அன்னஞ்சி, ஊஞ்சாம்பட்டி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. மாணவர்கள் அறிவியல் வளர்ச்சிக்கே.. அறிவியல் அமைதிக்கே.. அறிவியல் ஆக்கத்திற்கே... அறிவியல் உலக ஒற்றுமைக்கே என்னும் முழக்கங்களை எழுப்பியபடியே கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே வந்தனர். 170 பேர் கலந்துகொண்டனர். ஆசிரியர் திருமிகு.சுமன் ஒருங்கிணைத்தார்.