முதல் பக்கம்

Aug 8, 2013

அன்னஞ்சியில் கருத்தரங்கம் & பேரணி:

தேனி ஒன்றியம் அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் இயக்கம் சார்பில் ஆகஸ்ட்,6 அன்று காலை ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.ப.மோகன்குமாரமங்கலம் தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அன்னஞ்சி, ஊஞ்சாம்பட்டி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. மாணவர்கள் அறிவியல் வளர்ச்சிக்கே.. அறிவியல் அமைதிக்கே.. அறிவியல் ஆக்கத்திற்கே... அறிவியல் உலக ஒற்றுமைக்கே என்னும் முழக்கங்களை எழுப்பியபடியே கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே வந்தனர். 170 பேர் கலந்துகொண்டனர். ஆசிரியர் திருமிகு.சுமன் ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment