முதல் பக்கம்

Aug 20, 2018

அறிவியல் இயக்கம் சார்பில் கேரள வெள்ள நிவாரணப் பொருட்கள்

கடந்த ஓரிரு வாரங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலம் வரலாறு காணாத வகையில் பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் அடைந்துள்ளது. உடைமைகளை உறவுகளை இழந்து தவிக்கும் அம்மக்களுக்கு உதவிகள் செய்திடும் வகையில் தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அரிசி மூட்டைகள், பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கான மளிகைப் பொருட்கள், பெண்கள், குழந்தைகளுக்கான நாப்கின்கள், குளியல் மற்றும் துவைக்கும் சோப்புகள், சீனி, சில்வர், அலுமினியப் பாத்திரங்கள், அனைத்து வயதினருக்குமான புதிய ஆடைகள், போர்வைகள், பாய்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட சுமார் 1.5 இலட்சம் மதிப்பிலான நிவாரண உதவிப் பொருட்கள் பெறப்பட்டு இன்று பிற்பகல் கேரள மாநிலம் பாலக்காடு, வயநாடு பகுதிகளுக்கு தனி வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டச் செயலாளர் மு.தெய்வேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹ.ஸ்ரீராமன், கிளைச் செயலாளர்கள் ஸ்ரீதர், சுரேஷ்கண்ணன், ஞானசுந்தரி, ராம்குமார், பி.எஸ்.என்.எல். சங்க பொறுப்பாளர்கள் சிரில், சீனிவாசன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.