முதல் பக்கம்

Sep 1, 2018

சுருளிப்பட்டியில் துளிர் திறனறிதல் தேர்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று (செப்.1) மாநிலம் முழுவதும் சுமார் 60,000 குழந்தைகள் வரையிலும் பங்கேற்ற துளிர் அறிவியல் திறனறிதல் தேர்வு நடைபெற்றது. இளநிலை, உயர்நிலை மற்றும் முதுநிலை ஆகிய மூன்று நிலைகளில் குழந்தைகளின் அறிவியல் விழிப்புணர்வு மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த அறிதலைச் சோதிக்கும் விதமான கேள்விகள் இடம்பெற்றன. தேனி மாவட்டத்தில் 25 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1000 குழந்தைகள் 11 மையங்களில் தேர்வு எழுதினர். நமது கம்பம் பகுதியில் சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று முற்பகல் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயரூபி, அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டத் துணைத்தலைவர் பாண்டியன், செயலாளர் சுரேஷ்கண்ணன் மற்றும் அறிவியல் ஆசிரியர் செந்தில் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.