முதல் பக்கம்

Mar 25, 2011

கல்வியின் வெற்றியை தாய்மொழியே சாதிக்கும்!


ருத்ரபன்னீர்
First Published : 21 Nov 2009 11:20:00


ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் (தங்ஞ்ண்ர்ய்ஹப் கஹய்ஞ்ன்ஹஞ்ங்ள்) பிராந்திய மொழிகள் அதாவது அவரவர் தாய்மொழிகளையே பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் திறக்கப் பெற்றன. ஆங்கிலம், மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்கப்பட்டது. ஆங்காங்கே ஆங்கிலேய குழந்தைகளுக்காக ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளும் இயங்கி வந்தன. தமிழகத்தில் வழக்கமான ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் மட்டுமன்றி மாநிலம் முழுவதும், மாநிலப் பாடத்திட்டப்படியே, தனியார் ஆங்கில நர்சரிகளில் 5-ம் வகுப்பை நிறைவு செய்தவர்கள் படிப்பைத் தொடர்வதற்கு ஏதுவாக உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில போதனாமுறை அறிமுகம் செய்யப்பட்டது. பின்னாளில் மாநிலம் முழுவதும் 30 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு வகுப்புக்கு ஒரு பிரிவு மட்டும் ஆங்கில வழி போதனை என்று மாநிலக் கல்வித்துறையால் தொடங்கப்பட்டது. 1980-ல் 72 பள்ளிகளும், 1987-ல் 200 பள்ளிகளும், 1992-ல் 1000 பள்ளிகளும், இன்றோ 4000 பள்ளிகளுக்கு மேலாக அவை எண்ணிக்கையில் பெருகிவிட்டன. தமிழகத்தில் மலையாளம், உருது, தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களும், அவரவர் தாய்மொழியில் கல்வி கற்க ஏதுவாகக் கல்விக்கூடங்கள் தனித்தனியே முறைப்படுத்தப்பட்டன. ஆனால் அவர்கள் பெரிதும் அந்தப் பகுதி வட்டார மொழியும் பேச்சு மொழியுமான தமிழ் மொழியிலேயே கல்வி பயில விரும்பி, தமிழ் வழி பள்ளிகளிலேயே படிப்பைத் தொடர்ந்தனர். ஒருமுறை ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பில் (ஆங்கில வழி போதனை) காலாண்டுத்தேர்வில் மதிப்பெண் அட்டைகளை ஆசிரியர் வழங்கினார். வகுப்பில் மதிப்பெண்கள் 65-க்கு மேல் வாங்கிய 15 மாணவர்கள் முதல் தரத்திலும், 40 - 65-ல் சரிபாதிப்பேர் 25 மாணவர்கள் இரண்டாம் தரத்திலும், 40-க்குள் எஞ்சிய 8 அல்லது 10 பேர் மூன்றாம் தரத்திலும் இருந்தனர். மிகவும் குறைவாக மார்க் எடுத்தது பற்றி மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டபோது ""நல்லாதான் மனப்பாடம் செய்திருந்தேன் சார் தேர்வு எழுதும்போது மறந்துபோச்சு''. ""நல்லாதான் படிச்சேன் சார். பரீட்சையில் எழுத வர மாட்டேங்குது'' என்று ஒரே மாதிரி பதில்கள் தான் வந்தன. மார்க்குகள் மிகவும் குறைவாக எடுத்த ஒரு மாணவன் ஆங்கில வழியில் தொடர்ந்தால் 9-ம் வகுப்பில் தேறுவது கடினம் என்று எண்ணிய ஆசிரியர் அவனை தமிழ் வழி போதனை வகுப்புக்கு மாற்றம் செய்ய விரும்பினார். மாணவனின் தகப்பனார் இதற்கு மறுப்புச் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில் தலைமை ஆசிரியரின் அனுமதியை நாடினார் ஆசிரியர். தலைமை ஆசிரியரும் இந்த மாற்றத்துக்கு அனுமதித்தார். ஒன்றாம் வகுப்பு முதலே ஆங்கில போதனா மொழியில் படித்து வந்த அம் மாணவன் இடையில் 9-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுக்கு முன்னதாக தமிழ்வழி வகுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டான். 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்து பிளஸ் டூவிலும் கணிதப் பிரிவில் அதே பள்ளியில் தமிழ் மீடியத்தில் சேர்ந்து படித்தான். பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தகுதி அடிப்படையில் பி.இ. படிக்க இடம் கிடைத்து சென்னையில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அம் மாணவனை முன்மாதிரியாகக் கொண்டு குறைவாக மார்க் பெற்றுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் ஒருசிலரிடம் தமிழ் வழிப் பிரிவுக்கு மாற்றிக் கொள்வது பையனின் படிப்பை எளிதாக்கும் என்ற யோசனையை ஆசிரியர் தெரிவித்து வந்தார். அவர்கள் ""தம் பிள்ளையும் மற்றவர்களின் பிள்ளைகளைப்போல உய்ஞ்ப்ண்ள்ட் ஙங்க்ண்ன்ம்-த்தில் படிக்கிறான்'' என்று சொல்வதையே கௌரவமாக நினைத்தார்கள். ஆசிரியரின் யோசனையை ஏற்கவில்லை. ஆங்கிலக் கல்வியாளர் ஏ.எஸ். நீல்ஸ் என்பவர் ""பிரச்னைக்குரிய நடத்தையுடைய குழந்தைகள் எவரும் இலர், இருப்பவர்கள் முரண்பாடுடைய பெற்றோர்கள் தாம்'' என்று கூறிய கூற்று மெய்யானதாக ஆசிரியருக்குத் தோன்றியது. இந்நிலையில் 35-க்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் பட்டியலில் ஒரு மாணவனின் தகப்பனார், முன்னேற்ற அட்டையில் கையொப்பமிட வந்தார். அவர் ஆசிரியரிடம் ""தான் ஒரு ஒப்பந்தக்காரரிடம் கூலி வேலை பார்த்து வருவதாகவும், ஆரம்பத்திலிருந்தே இவன் படிப்புச் செலவுக்கு என் சம்பளம் முழுவதையும் செலவழித்தேன் சார்'' என்றும் கூறினார். ""இப்ப பையனுக்கு நீண்ட நாள் வயிற்றுக் கோளாறு, சாப்பிட்ட உடன் மோஷன் போகிறான். மருத்துவம் பார்க்க வசதியில்லை. அதனால்தான் மார்க் குறைந்துவிட்டான்'' என்று தன் கவலையை ஆசிரியரிடம் வெளிப்படுத்தினார். பள்ளிக்கு எதிரில் ங.ஈ. படித்த டாக்டர் மருத்துவமனை நடத்தி வருகிறார். அந்த டாக்டர் இந்த ஆசிரியரின் முன்னாள் மாணவர். இந்நாள் மாணவருக்கு முன்னாள் மாணவர் செலவில்லாமல் சிறந்த மருத்துவ உதவி செய்தார். சிறுவன் நலம் பெற்றான். சிறுவனின் தகப்பனாரின் கவலை தீர்ந்தது. தாம்பெற்ற பிள்ளைகள் மறந்தாலும் தம்மிடம் படித்த பிள்ளைகள் மறவார் என்ற ஆசிரியரின் கருத்து சரியே. சிறுவனின் தந்தையிடம் ஆசிரியர், ""பையனை தமிழ் மீடியத்தில் படிக்கச் செய்தால் நன்கு படிப்பான்'' என்று ஆலோசனை கூறினார். ""இடையில் 9-ம் வகுப்பில் தமிழ் மீடியத்திற்கு மாற்றம் செய்தால் பிக்கப் பண்ண முடியுமா?' என்று தந்தை கேட்டார். ""நன்கு சுலபமாகப் படிக்க முடியும்'' என்று ஆசிரியர் உறுதியளிக்கவே தந்தையும் சம்மதம் தெரிவித்தார். அந்த மாணவனின் தமிழ் வழி வகுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டான். படிப்படியாக அவனும் நல்ல மார்க்குகள் பெற்று பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்விலும் நல்ல மார்க்குகளைப் பெற்றுவிட்டான். அதே பள்ளியில் பிளஸ் டூவில் தமிழ் மீடியத்திலேயே நல்ல மதிப்பெண்களைப் பெற்றான். கற்றலுக்கு வேண்டிய அடிப்படைச் சிந்தனைத் திறனில் தாய்மொழியில் படிப்போர் பின்தங்கியவர்கள் அல்ல. அதனால்தான் பொருள் புரிந்து தமிழ் மீடியத்தில் படிக்கும்போது மதிப்பெண்களை அவர்களால் அள்ள முடிந்தது. இதனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனத்தில் கொள்வது அவசியம். ""தம் பிள்ளைகள் சாதாரண பள்ளியில் அல்ல, மெட்ரிகுலேஷன் பள்ளியில் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிறார்கள்'' என்று சொல்வதை கௌரவம் தரும் சொல்லாக எண்ணிச் செலவழிக்கிறார்கள். பிள்ளைகளின் இயற்கை சுபாவங்களைக் கவனியாது, அவர்கள் வளர்ச்சிக்கு பெற்றோர்களே தடைகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். கல்வி என்பது ஓர் அனுபவமே. இந்த அனுபவம் சிந்தனையின் அடிப்படையில் எழுவதே ஆகும். குழந்தை சிந்திப்பதில் உள்ள வலு, ஆழம், உண்மை, தீவிரம் இவற்றைப் பொருத்து அமைவதே கற்றல் எனப்படும். குழந்தை சுயமாகச் சிந்தித்தல் தாய்மொழியில்தான் சாத்தியப்படும். அது அல்லாமல் ஆங்கில வழியில் மேற்கொள்ளப்படும் மனப்பாட முறையின் வழியாகப் பெறப்படும் மதிப்பெண்கள் முறைதான் உயர்வழிக் கல்வி, அதுவே கல்வி கற்றல் அல்லது கல்வி அடைவின் அளவுகோல் என்பது ஏற்புடையதாகாது. எனவே கற்பனைத்திறன், படைப்பாற்றல், புதியவை காணும் ஆற்றல், ஊக்கமுடைமை இவையாவும் தாய்மொழிக் கற்றல் மூலமே சாத்தியமும், வலிமையும் பெறும். ஆங்கில வழிக்கற்றலில் மதிப்பெண் குறைவாகப் பெறும் மாணவர்கள் படிக்கத் தகுதியற்றவர்கள், மந்த புத்தியுடையவர்கள், கல்வியில் பின்தங்கியவர்கள் என்று ஆசிரியர்கள் தவறான முத்திரையிட்டு அவர்களுடைய தன்னம்பிக்கையைக் குலைத்து விடுகின்றனர். பெற்றோர்களும் அன்றாடம் மனப்பாட சக்தி வழியே அதிக மதிப்பெண் வாங்கியவர்களோடு ஒப்பிட்டுப் பிள்ளைகளை வசைபாடுகின்றனர். ஆசிரியர்களும் பெற்றோர்களும் பின்பற்றும் இவை இரண்டும் கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியவையாகும். ஏனெனில் மனப்பாடத்திறனே படிப்பு அல்லது அறிவு வளர்ச்சி என்பது தவறான அளவுகோலாகும். நம் முன்னாள் குடியரசுத் தலைவரும் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான ஏபி.ஜெ. அப்துல் கலாம், ""தாம் 8-ம் வகுப்புவரை ராமேசுவரம் மீனவப் பள்ளியில் தமிழ்வழியிலேயே பாடங்களைப் பயின்றதால்தான் சுயமாகச் சிந்திக்க முடிந்தது. விஞ்ஞானி ஆவதும் சாத்தியப்பட்டது'' என்கிறார். கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி ""அறிவியலும் தொழில்நுட்பமும் மற்ற துறை அறிவும் தாய்மொழி மூலம் கற்றால்தான் அதன் பயனைப் பெற முடியும். 50 ஆண்டுகளுக்கு முன்னதாக பொருளாதார வளர்ச்சியில் நம்மை ஒத்த நிலையிலிருந்த அண்டைய நாடுகள் இன்று நம்மைவிட சற்று மேலாக வளர்ந்திருப்பதற்கு அவர்கள் தாய்மொழி வழியே கல்வி பயின்ற வலிமை ஒன்றுதான் அடிப்படைக் காரணம் '' என்று குறிப்பிடுகிறார். உலகில் முன்னேறிய நாடுகளான அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் மட்டுமன்றி உலகின் எல்லா நாடுகளிலுமே பள்ளிகள் அளவில் அவரவர் தாய்மொழிகள் தான் பயிற்றுமொழியாக உள்ளன. ஆங்கிலம் அல்ல. எங்கும் ஆங்கிலம் நூலக மொழியாகவே உள்ளது. ஆங்கிலம் ஆங்கிலேயர் நாட்டில் மட்டுமே பள்ளிகளில் பயிற்றுமொழியாக உள்ளது. நம் இந்திய நாட்டிலும் தமிழகம் நீங்கலாக மற்ற மாநிலங்களில் எல்லாம் அவரவர் தாய்மொழிகள்தாம் பள்ளியில் பயிற்றுமொழியாக உள்ளன. இவ்வாறு நம் நாட்டில் பள்ளிக்கல்வியில் 67 பயிற்றுமொழிகள் (அவரவரது தாய்மொழிகள்) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நம் தமிழகத்தில் மட்டுமே தாய்மொழியாகிய தமிழை பள்ளிகளிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு ஆங்கில மொழிவழியே பாடங்களைக் கற்பிக்கிற அவலநிலை உருவாகியுள்ளது. இது எந்த ஒரு மனிதகுலமும் எங்குமே கண்டிராத விநோதம் ஆகும். இந்த உலகமகா விநோதம் சிறார்களுக்கு ஆங்கில வழியே கற்பித்தல் என்ற பெயரில் சிறார் கல்வியை வணிகமாக்கிப் பணம் சேர்க்கும் நோக்குடைய ஒருசிலரால் தோற்றுவிக்கப்பட்டது ஆகும். இந்தப் பயிற்றுமொழி சிக்கலால் பாதிக்கப்படுவது குழந்தைகளும், மாணவர்களுமே. மேற்படி வணிகமயமாக்கலுக்கு எதிராக சமச்சீர் கல்வியின் ஓர் அம்சமான அண்மைபள்ளி (அ) அருகாமைப்பள்ளி முறை, முறையாகச் செயல்படுத்தப்பட்டால் அன்றாடம் படும் அவஸ்தையிலிருந்து சிறார்களும், வேன், ஆட்டோ, பேருந்துக் கட்டணம் மற்றும் தனியார் பள்ளிகளில் விதிக்கப்படும் ரசீது இல்லாத கட்டணங்களிலிருந்து பெற்றோர்களும் விடுவிக்கப்படுகின்றனர். எனவே இந்த அண்மைப்பள்ளி முறை பெற்றோர்களால் பெரிதும் விரும்பி ஏற்கப்படும். இந்த சமச்சீர் கல்வி நடைமுறைக்கு சகல வல்லமையும் சாதுர்யமும் மிக்க மெட்ரிக் பள்ளியினுடைய தாளாளர்களும், முதல்வர்களும் இளைய தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு முழு ஒத்துழைப்பு நல்கி அவர்களுடைய கல்விப் பணியைத் தொடர வேண்டுமென்று தமிழகம் எதிர்பார்க்கிறது.(கட்டுரையாளர்: முன்னாள் உதவிக் கல்வி அலுவலர்)

துளிர்: அறிவியல் மாத இதழ்

நண்பர்களே..
நமது
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
சுமார் 30 ஆண்டுகளாகதமிழ்வழியில்
பயிலும்குழந்தைகளிடையேஅறிவியல்
மனப்பான்மையை வளர்ப்பதற்காக
அழகிய தமிழில் ,எளிய நடையில்
குறைந்த விலையில் மாதந்தோறும் வருகின்ற
அறிவியல் மாத இதழ்தான் துளிர்.

அறிவியல் சிந்தனைகளைத் தூண்டும்
விதமாக கதைகள்,கட்டுரைகள்,கேள்வி பதில்கள்,
கோள்களின் நிலைகள் குறித்த விளக்கம் என
பலவிதமான செய்திகளைத் தாங்கி வரும்
துளிர் இதழை உங்கள் வீட்டுச் செல்லக்
குட்டிகளுக்கும் அறிமுகப்படுத்த வேண்டுமா?

மாவட்ட அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்களை
அணுகலாம்.அல்லது நேரடியாக மாநில
அலுவலகத்திற்கும் சந்தா தொகையை அனுப்பலாம்!

ஆண்டுச் சந்தா ரூ.75/-மட்டுமே.
ஆயுள் சந்தா ரூ.700/- மட்டுமே.

மாநில அமைப்பு முகவரி:
துளிர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
245,அவ்வை சண்முகம் சாலை
கோபாலபுரம்
சென்னை-86

உங்களது மேலான விமர்சனங்களையும்
சிறந்த படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம்.

எளிய அறிவியல் பரிசோதனைகள் மற்றும் ஓரிகாமி பயிற்சி

மார்ச் 19,2011 சனிக்கிழமையன்று 
காலை 10.30 மணிக்கு சீலையம்பட்டி
இந்து நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு 
அறிவியல் இயக்கம் சார்பில் 
மாணவர்களுக்கான எளிய அறிவியல் 
பரிசோதனைகள் மற்றும் ஓரிகாமி பயிற்சி
நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் திருமிகு சண்முகநாதன் 
தலைமையேற்று துவங்கி வைத்தார்.
மதுரை துளிர் அறிவியல் மைய 
ஒருங்கிணைப்பாளர் திருமிகு 
மு.தியாகராஜன் ஏராளமான எளிய 
அறிவியல் பரிசோதனைகளைச் செய்துகாட்டினார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக 
சுற்றுச்சூழல் துறைப் பேராசிரியர் எஸ்.கண்ணன் 
எது அறிவியல்என்ற தலைப்பில் பேசினார்.
அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் 
திருமிகு தே.சுந்தர் அவர்கள் ஓரிகாமி பயிற்சி 
அளித்தார்.
மாணவர்கள் ஆரிவமுடன் பங்கேற்று 
செய்து பார்த்தனர். சுமார் 300 மாணவர்கள் 
கலந்துகொண்டனர்.புத்தக் கண்காட்சி
நடைபெற்றது.அன்றைய தினம் ரூ.800 க்கு 
புத்தக விற்பைனை நடைபெற்றது.
அறிவியல் இயக்க நண்பர்கள் திருமிகுஸ்ரீதர் 
மற்றும் திருமிகு ஈஸ்வரன் ஆகியோர் கண்காட்சி 
ஏற்பாடுகளைச் செய்தனர்.
செய்தி – தே.சுந்தர்
பதிவர் - ஓவியா

அன்றாட வாழ்வில் வேதியியல்

மார்ச்18, 2011 வெள்ளிக்கிழமையன்று
மாலை 3.30 மணிக்கு தேனி மாவட்டம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
கொண்டுராஜா நினைவு உயர்நிலைப்பள்ளியில்
கருத்தரங்கம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு.முருகன்
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச்
செயலாளர் திருமிகு தே.சுந்தர் வரவேற்றுப்
பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க
மாவட்டத் தலைவர் திருமிகு பா.செந்தில்குமரன்
அன்றாட வாழ்வில் வேதியியல் என்ற தலைப்பில்
கருத்துரை வழங்கினார். மாவட்டச் செயற்குழு
உறுப்பினர் திருமிகு க.முத்துக்கண்ணன்
துளிரின் உள்ளடக்கம் குறித்தும் அறிவியல்
இயக்க வெளியீடுகள் குறித்தும் பேசினார்.
பள்ளி ஆசிரியர் திருமிகு வேல்முருகன்
நன்றி கூறினார். சுமார் 250 மாணவ மாணவியர்
கலந்துகொண்டனர். புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.
செய்தி – தே.சுந்தர்
பதிவர் - ஓவியா

Mar 24, 2011

ஜந்தர் மந்தர்: இருமாத அறிவியல் இதழ்

தமிழ்வழி பயிலும் குழந்தைகளின்
அறிவியல் ஆர்வம் பெருக  
துளிர் இதழ் துணைநிற்கிறது.

எங்களைப் போல
மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கில வழியில்
பயிலும் குழந்தைகளுக்கு
அறிவியல் இயக்கம் என்ன செய்யப்போகிறது
என நீங்கள் நினைப்பது எங்களுக்கு
தெரிகிறது அன்புக் குழந்தைகளே..!
ஆர்வமிக்க பெற்றோர்களே..!

இனிமேல் செய்யவேண்டியதில்லை.
ஏற்கனவே ஐஐடி, இந்திய கணித 
அறிவியல் ஆய்வு மையம் ஆகியவற்றில்
பணிபுரியும் அறிவியல் இயக்க விஞ்ஞானிகளால்
ஆங்கிலத்தில் எளிய முறையில் சிறந்த தரத்தில்
வருகின்றஇருமாத அறிவியல் இதழே 
ஜந்தர் மந்தர் ஆகும்.

நீங்கள் கருதுவது போல
துளிர் இதழில் வருகின்ற படைப்புகளின்
மொழிபெயர்ப்புகள் ஜந்தர் மந்தரில்
வருவதில்லை.
முற்றிலும் வேறுபட்டவை.
புதிய படைப்புகளே!

இதற்கான ஆண்டுச் சந்தா ரூ.90/-
ஆயுள் சந்தா ரூ.700/-

எங்க சார் சந்தா கட்டுவது?

இதோ இந்த முகவரிக்கு:
ஜந்தர் மந்தர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
245,அவ்வை சண்முகம் சாலை
கோபாலபுரம்
சென்னை-86

Mar 22, 2011

நவீனமயத்தால் அழியும் சிட்டுக்குருவிகள்: இன்று உலக சிட்டுக்குருவி தினம்


மார்ச் 20, 2010  

‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு…
தென்றலே உனக்கென்ன சொந்த வீடு…’
என்ற பாடலுக்கு ஏற்ப, சுதந்திரமாக சுற்றித்
திரியும் பறவைகளில் சிட்டுக்குருவி முதலிடம்
வகிக்கிறது.

தொல்காப்பியம் உட்பட இலக்கியங்களில்
அதிகம் பேசப்பட்டது. பாரதியார் கவிதைகளில்,
சிட்டுக்குருவியின் பெருமைகளை குறிப்பிட
மறக்கவில்லை.

உருவத்தில் சிறியதாக, அழகான தோற்றம்
கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவி,
காகங்களைப் போல், மனிதர்களின் பழக்க
வழக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு
பழகும் அறிவுபூர்வமான உன்னத பறவை.
கூரை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட கூரைகளில்
கூடு கட்டி முட்டையிடும் பெண் குருவிக்கு,
பக்க பலமாக ஆண் குருவி கூடவே இருந்து
குஞ்சு பொரிக்க உதவுகிறது. வீட்டுத் தோட்டங்களில்
பூச்சிகளை குருவிகள் உண்பதால், ‘விவசாயிகளின் நண்பன்’
என அழைக்கப்பட்டது. பல சரக்கு கடைகள் முன்
சிதறிக் கிடக்கும் தானியங்களை கூட்டமாகச்
சேர்ந்து உண்டு மகிழும்.

ஆட்கள் வந்தால், நடப்பதற்கு வழி விடுவதற்காக
சற்று நகர்ந்து கொண்டு தானியங்களை உண்ணும்.
சூரிய உதயத்திற்கு முன்பே குரல் எழுப்பும். அதன்
அழகையும், குரலின் மென்மையையும் ரம்மியமாக
ரசிக்கலாம்.
அழியும் குருவிகள்: மனிதனின் பழக்க வழக்கங்களில்
ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல்
தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக
எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற
காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம்
அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.

* வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி,
வீடு முழுவதும், ‘ஏசி’ செய்யப்பட்ட வீடுகளில்,
குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.

* பெட்ரோலில் இருந்து வெளியேறும், ‘மீத்தைல்
நைட்ரேட்’ எனும் ரசாயனக் கழிவு புகையால்,
காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும்
பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும்
உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள்
பட்டினி கிடந்தே அழிகின்றன.

* பல சரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
அவற்றிற்கு பதிலாக, டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள்
அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பிளாஸ்டிக்
பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால்,
ரோட்டில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.

* வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு
பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன.
இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.

* இவையனைத்துக்கும் மகுடம் சூட்டியது போல்,
மொபைல் போன் வருகைக்கு பின், குருவிகள்
90 சதவீதம் அழிந்துவிட்டன. மொபைல் போன்
டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு,
குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும்,
கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைக்கிராமங்களில்
சொற்ப அளவில் சிட்டுக்குருவிகள் தென்படுகின்றன.
தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பிற மாவட்டங்களில், பெயரளவிற்கு கூட இவற்றை காண முடியவில்லை.
விருதுநகர் மாவட்ட வனப்பகுதிகளில் அதிகளவில்
சிட்டுக்குருவிகள் இருந்தன. மரங்கள் வெட்டப்படுவதாலும்,
வறட்சி காரணமாகவும் குருவிகள் பசுமையான
இடங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது.

திருச்சி இயற்கை சங்கம் பிஷப் ஹீபர் கல்லூரி
பேராசிரியர்ரெல்டன் கூறியதாவது: ஆண் குருவி – பெண்
குருவி ரோமத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன.
வீடுகளின் கட்டமைப்பு, நச்சுத்தன்மை வாய்ந்த உரம்,
பூச்சிக்கொல்லி மருந்துகளினால் இந்த இனம் அழிகிறது.

கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, பன்றிமலை
போன்ற இடங்களில் மட்டுமே இவற்றை காண முடிகிறது.
இப்பறவை இனம் அழியாமல் இருக்க, இயற் கையை
பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு ரெல்டன் கூறினார்.

மதுரை பறவை வியாபாரி திலீப்குமார் கூறியதாவது:
மொபைல் போன் வருகைக்கு பின், சிட்டுக்குருவிகள்
இனப்பெருக்கம் செய்ய இயலாதபடி, அதன் கருப்பையில்
பாதிப்பு ஏற்பட்டு வருவதை பறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொபைல் போன் டவர்கள் அல்லாத மலைப்பகுதிகளில், சிட்டுக்குருவிகள் குறைந்த
அளவில் வசிக்கின்றன. கிராமங்களிலும் மொபைல்
போன் சேவைகள் அதிகரித்து வருவதால்,
சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன.
இவ்வாறு திலீப்குமார் கூறினார்.

குருவிகளை காக்கும் வழி: குறைந்த எண்ணிக்கையில்
உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு
ஒவ்வொருவரிடமும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும்,
தோட்டம் அமைக்க வேண்டும். பயிர்கள், தாவரங்கள்
மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது. குருவிகள்
குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்
. வீட்டு முன், மொட்டை மாடியில் தானியங்களை
தூவ வேண்டும். மண்பானையில் வைக்கோல் வைத்தால்,
குருவிகள் கூடு கட்ட பயன்படும்.

திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ்

வலைத்தளத்தில் இருந்து
மார்ச் 6, 1869 இல் மெண்டெலீவ் ரஷ்ய வேதியியல் கழகத்தில் தான் தயாரித்த வேதியியல் தனிமங்களின் முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்ப்பித்தார்

திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் (Dimitri Mendeleev ரஷ்ய மொழி: Дми́трий Ива́нович Менделе́ев, (பெப்ரவரி 8 [யூ.நா. ஜனவரி 27] 1834பெப்ரவரி 2 [யூ.நா. ] 1907, ரஷ்ய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் வேதியியல் தனிமங்களின் முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

தீமீத்ரி மென்டெலீவ் ரஷ்யாவின் சைபீரியாவில் தோபோல்ஸ்க் என்ற இடத்தில் பெப்ரவரி 8, 1834 இல் இவான் பவ்லோவிச் மென்டெலீவ் மற்றும் மரீயா திமீத்ரியெவ்னா மென்டெலீவா என்பவருக்கும் 17வது கடைசி மகவாகப் பிறந்தார். 13வது வயதில் தந்தை காலமானார். தாயாரின் தொழிற்சாலை தீயில் எரிந்து அழிந்தது. வறுமையீல் வாடிய மென்டெலீவின் குடும்பம் 1849 ஆம் ஆண்டில் சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்கு இடம்பெயர்ந்தது. அங்கு 1850ம் ஆண்டில் திமீத்ரி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்றார். அப்போது மெண்டெலீவுக்கு காசநோய் பீடித்ததால் 1855 இல் கருங்கடல் பகுதியில் உள்ள கிரிமியாவுக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. முற்றாக நோய் குணமானதும் மீண்டும் 1857 இல் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார்.
1859 க்கும் 1861க்கும் இடையில் இவர் ஜெர்மனியின் ஹைடெல்பூர்க் நகரில் வேதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். 1861 இல் நிறமாலைகாட்டி (spectroscope) பற்றிய ஒரு நூலை எழுதி வெளியிட்டர். இது அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. 1862 இல் மெண்டெலீவ் சென் பீட்டர்ஸ்பேர்க் அரச தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியல் பேராசிரியரானார். 1863 இல் சென் பீட்டர்ஸ்பேர்க் அரச பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். 1865 இல் நீருடன் அற்ககோலின் சேர்க்கை குறித்த ஆய்வுக்காக முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

[தொகு] ஆவர்த்தன அட்டவணை

மென்டெலீவின் ஆவர்த்தன அட்டவணை
மென்டெலீவ் ஆசிரியரான பின்னர் மாணவர்களுக்காக வேதியியலின் தத்துவங்கள் (1868-1870) என்ற நூலை எழுதினார். வேதியியல் தனிமங்களின் இயல்புகளை வகைப்படுத்தும் போதே அவர் தனது ஆவர்த்தன அட்டவணையை அறிமுகப்படுத்தினார்.
அணுத்திணிவு குறித்த பல தகவல்கள் கிடைத்தபோது அவர் தனக்கென பின்வரும் அட்டவணையைத் தயாரித்தார்:
Cl 35.5 K 39 Ca 40
Br 80 Rb 85 Sr 88
I 127 Cs 133 Ba 137
இந்த முறையில் வேறு தனிமங்களைச் சேர்த்தபோது ஆவர்த்தன அட்டவணை உருவானது.
மார்ச் 6, 1869 இல் மெண்டெலீவ் ரஷ்ய வேதியியல் கழகத்தில் தான் தயாரித்த அட்டவணையை சமர்ப்பித்தார். இந்த அட்டவணையில் அப்போது பல கண்டிபிடிக்கப்படாத மூலகங்களின் இயல்புகளையும் எதிர்வு கூறி அட்டவணையை முழுமைப்படுத்தியிருந்தார். மென்டெலீவ் இவ்வட்டவணைய வெளிப்படுத்திய சில மாதங்களின் பின்னர் ஜெர்மனியின் ஜூலியஸ் மேயர் என்பவர் அதே மாதிரியான அட்டவணையை அறிவித்தார்.
மேலும் ஆங்கிலத்தில் (  http://en.wikipedia.org/wiki/Dmitri_Mendeleev  )

இன்று சர்வதேச மகளிர் தினம்.

அன்பு நெஞ்சங்களே,

 வணக்கம். இன்று சர்வதேச மகளிர் தினம். தியானோவை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். 

என்றும் தோழமையுடன், 

மோகனா. 

பெண் ..கணிதவியலாளர்..தியானோ ..கி. மு 546..!

தியானோ
 பெண் ..கணிதவியலாளர்..தியானோ ..கி. மு 546

2010,சர்வதேச.. பெண் விஞ்ஞானிகள்.. ஆண்டு..! 
     பெண் விஞ்ஞானிகளை சிறப்பிக்கும் பொருட்டு 2010 ம் ஆண்டு சர்வதேச பெண் விஞ்ஞானிகள் ஆண்டு என அறிவிக்கப்பட்டது. சுமேரியர்கள்தான் முதன்முதலில் கி மு 7000 களில் எழுத்துக்களைப் பயன்படுத்தியவர்கள் என்று சொல்லப்படுகிறது. அந்தந்த காலகட்டத்தில் அறிவில் சிறந்தவர்கள் பலர் வாழ்ந்திருப்பார்கள். பலரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்,  சிலரின் பெயர்கள் பல்வேறு காரணங்களால் பதிவு செய்யப்படாமல் விடுபட்டிருக்கக் கூடும்.அப்படி விடுபட்ட சில விஷயங்களில் பெண்களைப் பற்றிய, கல்வி,அவர்களின் திறமைகள், போன்றவைகளும் இருக்கும்; இருந்தன.. ஆனால் கி.மு. 3700 களிலிருந்தே பெண்களைப்பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன.நாகரிக காலம் என்று சொல்லப்படும், இந்தக் காலத்திலேயே பெண்களின் படிப்பும்,திறமையும் ஒதுக்கப் படுகிறது எனில், சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெண்களின் நிலையை எண்ணிப் பாருங்கள் ..! உலகம் மறந்த, உலகத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்ட மறைக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள் ஏராளம். அவர்களில் ஒரு சிலரை பற்றிய பதிவுகள்  எப்படியோ கசிந்து நமக்கு கிடைத்துள்ளன .

<span> </span>
 குரோடோனாவின் ..தியானோ..!
  
இத்தாலி கடற்கரையில் குரோட்டோன் நகர்
 <Photo16>
     எந்த காலத்தில் குழந்தை பிறந்தாலும், அதனை மக்கள் கொண்டாடுவது இயல்பு. அதுவும் அரசனின் மகவு என்றால் கேட்கவா வேண்டும்? .அப்படி ஒரு பெண் மகவு சுமார் 2,557 ஆண்டுகளுக்கு முன் கி.மு. 546 ல்,அன்றைய கிரீஸ் நாட்டில்,  இன்றைய இத்தாலியின், தென் கடற்கரை ஓர நகரமான குரோடோனாவில் பிறந்தது. அந்த குழந்தை  இந்த உலகில் பல ஆயிரம் ஆண்டுகள் பேசும் பொருளாக இருக்கப் போகிறது என்ற அரிய உண்மை அன்றைக்கு அதன் பெற்றோருக்குத் தெரியாது.பெண் செல்லத்துக்கு,செல்லமாக தியானோ என்று பெயர் சூட்டினர். அந்த கால கிரேக்கத்தில் தியானோ என்ற பெயர் வைப்பது ரொம்ப பிரபலமான வழக்கம்.அப்போதைய பதிவில் இரண்டு தியானோக்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நம் கதையின் நாயகிதான் முதல் தியானோ. இரண்டாவது தியானோ இவருக்குப் பின்,கிரேக்கத்தில், கி.மு.500 களில்  வாழ்ந்தவர் . இவரும் கூட பின்னாளில் பித்தாகராஸ் கல்வி நிறுவனத்தில்  இருந்தவர்தான். கிரேக்க புராணக்கதையின்படி,ஏதெனாவின் பெண் ராஜகுருவின் பெயரும் தியானோ . இவர் திராசியன் அரசரான சிஸ்சியசின் பெண்;அன்டேனாரின் மனைவி. 

    தியானோவின்...பிறப்பு..கருத்து..மோதல்..!
     அன்று நிலவிய, ஒரு கருத்துப்படி, தியானோ என்பவர், கிரேக்கத்தின்  கிரேட்(Crete) என்ற பகுதியிலிருந்து வந்தவர் என்றும், இவரது தந்தை பைத்தொனாக்ஸ்(Pythonax) என்றும் சொல்லப்படுகிறது. இன்னொரு தகவல் தியானோ புரோண்டினசின் (Brontinus) மகள் என்றும் , குரோடோனிலிருந்து(Croton) வந்தவர் என்றும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், தியானோ ஒரு கணிதவியலாளர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.   இந்த தியானோ என்ற பெண் விஞ்ஞானி கி.மு 6 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்தான்.தியானோவுக்கு நல்ல கல்வி அவரது தந்தையால் தரப்பட்டது.தியானோவின், குழந்தைப் பருவமும், இளமைக் காலமும் பற்றி அவ்வளவாக அறியப் படவில்லை.  

  முதல்.. கணிதவியலாளர்.....பித்தாகராஸ் ..! 
     
பித்தாகரஸ்
  கிரேக்கத்தின் பித்தகராஸ் என்ற தத்துவ ஞானி கி.மு கி.மு 540 களில் கணிதத்தை மக்களுக்கு அருமையாக போதித்தார். மேலும் தன் வாழ்க்கையை இந்த சமூகத்தின் அரசியல், நீதிபோதனை,  நெறிகளுக்காக அர்ப்பணித்துக் கொண்டார்.  பித்தாகரஸ்தான் , பழங்கால கிரேக்கத்தின் அறிஞர் என்றும், முதல் கணிதவியலாளர் என்றும் சொல்லப்படுகிறார்.கி.மு 569 ல் இந்த உலகைப் பார்க்க வந்த , பித்தகராஸ், தனது 18 வது வயதில் சாமோஸ் தீவை விட்டு தேசாந்திரியாகப் புறப்பட்டார். மத்தியதரைக்கடல் நாடுகளை சுற்றித்திரிந்தார். எதற்குத் தெரியுமா? அங்கு வாழும் கல்வியில் சிறந்த மேதைகளைச் சந்தித்து பல அறிய விஷயங்களை தெரிந்து கொள்வதற்காகத்தான்.
      பித்தாகரசும்..தாலசும்..!
பித்த்தாகரஸூம், தேற்றமும்
எகிப்தில் பித்தாகரச் உரையாடல்
தாலஸ்
     பித்தாகராஸ் தன் 18 -20  வயதுகளில் மிலிட்டஸ் நகரின் தாலஸ் என்ற தத்துவஞானியை சந்தித்தார்.தாலஸ் சாக்ரடீசுக்கு முன் வாழ்ந்த தத்துவஞானி ஆவார். தாலஸ்,பித்தாகரசுக்கு ஏராளமான, வானவியல் மற்றும் கணிதம் பற்றிய தகவல்களை வாரி வழங்கினார். அவர்தான் பித்தாகராஸ், எகிப்து சென்றால், வானவியல் மற்றும் கணிதம் தொடர்பான அறிவுத் தேடல்களை அறிந்து கொள்ளமுடியும் என்று தூண்டுதல் தந்தவர். அதன் பின்னரே, பித்தாகராஸ் கி.மு 535 ல் எகிப்து,பாபிலோன்,கிரேட் மற்றும் ஸ்பார்ட்டாவுக்கும் பயணித்தார்.  
<span> </span>
 பித்தாகரஸ் ..குரோட்டன்.. வருகையும் ..தியானோ..சந்திப்பும்...!
    
தியானோ
   பித்தாகராஸ் கி.மு 531 .ல் தன் 56 வது வயதில்,இத்தாலியின்/
கிரேக்கத்தின், குரோட்டன் நகருக்கு வருகை புரிந்தார்.இந்த காலகட்டத்தில்தான்,  தியானோ குரோட்டன் மற்றும் சாமோசில் கணிதம் கற்பித்து கொடுத்துக் கொண்டிருந்தார். தியானோ..  ஓர் அற்புதமான கணிதவியலாளர்.அது மட்டுமல்ல. இயற்பியல், மருத்துவம், குழந்தை மனநலம் மற்றும் நிர்வாக திறமைகளில் கைதேர்ந்தவர் தியானோ ..! அந்த தியானோ, பித்தகராஸ், குரோட்டன் வந்ததை, கேள்விப்பட்டார்.பித்தாகரசின் திறமையையும்., பெருமையையும் முன்னமேயே அறிந்திருந்ததால், அவரைப் பார்ப்பதற்காக சென்றார் தியானோ.அதன்பின், பித்தாகரசை நேரில் கண்டு, பல விஷயங்களை அவருடன் விவாதித்தார். பின்னர்,பித்தாகரசிடமே, கணிதம் பயின்றார் தியானோ .

  பித்தாகரசின்...கணித.. நிறுவனமும்..பெண்களின்..உயர்வும்..!
    
பித்தாகரஸ் வகுப்பறையில் பெண்கள்
  பீட்டர் கார்மென் என்ற வரலாற்றியளார் , பித்தகராஸ் மற்றும் தியானோ பற்றி மிக உயர்வாக கூறுகிறார். அதன்படி, பித்தாகராஸ் மிகவும் உயரமான மனிதராகவும், கம்பீரமான தோற்றம் உடையவராகவும் , மற்றவர்கள் மனத்தைக் கவரும் குரல் வளம் கொண்ட வராகவும் இருந்தாராம். பித்தாகராஸ் தன்னுடன், சில உயர்குடி சீடர்கள் வட்டத்தை உருவாக்கி,  குரோட்டன் நகரில் ஒரு கணிதம் போதிக்கும் கல்வி நிறுவனத்தை நிர்மாணித்தார்.!.இந்த கல்வி நிறுவனத்தில் கணிதம்தான் முக்கியத்துவம் தந்து கற்பிக்கப் பட்டது.இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ரகசியமாகவே இருந்தன.பித்தாகரசின் மறைவுக்குப் பின்னரே, இவையனைத்தும் வெளியுலகுக்கு வந்தன.  இங்கு ஆண்,பெண் இருவரையும் சமமாக பாவித்ததிற்கான சான்றுகள் இருக்கின்றன.பித்தாகராஸ் பெண்களுக்கு அதிக மதிப்பும், மரியாதையும் தந்தார்.  பித்தாகரசின் பள்ளியில் 28 பெண்கள் ஆசிரியர்களாகவும் ,ஆராய்ச்சியாளர்களாகவும் இருந்தனராம். அதைத் தவிர 300 மாணவர்கள் அங்கு தங்கி படித்தனராம்.இந்த கணித நிறுவனத்தில், தியானோ தவிர, அரிஸ்டோகிளியா  (Aristoclea ) என்ற பெண் கணிதவியலாரும்,பெண் மாணாக்கர்களும் இருந்தனராம்.ஆனால் அவரின் சமகாலத்தில், மற்ற இடங்களில் பெண்களுக்கு கல்வியும், அரசியலும் மறுக்கப் பட்டிருந்தகால கட்டம் அது..! பெண்களை அப்போது பெண்களை உரிமைகள் அற்ற ஒரு சொத்தாக/பொருளாகவே கருதினாராம்.
பித்தாகராஸ் ..கல்வி நிறுவன..சூழல்..!
    
பித்தாகரஸ்
 இயாம்பிளிகஸ் (Iamblicus ) என்ற ஆய்வாளர் பித்தாகராஸ் கல்வி நிறுவனம் பற்றி மிகச் சிறப்பாவே, எடுத்துரைக்கிறார். அவரது கூற்றுப்படி, பித்தாகரசின் நிறுவனத்தில்,  ஒழுக்கம் கறாராக கடைபிடிக்கப்பட்டது; இவ்விடத்தில் சைவ உணவே உண்ணப்பட்டது; பெண் ஆண் சமத்துவம் இருந்தது; ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை நிலையே வாழ்ந்தனர்; சமய  கல்வியும், அனைவருக்கும் பொதுவான உணவும், உடல் பயிற்சியும்,வாசிப்பும், தத்துவ படிப்பும் சமமாக சொல்லித்தரப்பட்டன. கூட்டு வாழ்க்கையின் முக்கிய ஆதாரமாக இசை கருதப் பட்டது. எனவே, அவர்கள் உறங்கும் முன்னும், விழிக்கும்போதும், நினைவு சக்தியைத் தூண்டும் வகையில்,கவிதைகளையும், அப்பல்லோ என்ற கிரேக்க கடவுளின் பாசுரங்களையும்
சூரிய கடவுளுக்கு வந்தனமும்,பாடலும்
பாடினார்கள்.பித்தாகரஸ் கல்வி நிறுவனத்தில், பெண், ஆண் ஆசிரியர்கள், மா
ணாக்கர்கள் அனைவரும். ஒரு ஒட்டுமொத்த கூட்டு சமூகமாகவே வாழ்ந்தனராம். மதமும், அறிவியலும் அந்த காலத்தில் பிரிக்க முடியாத இரட்டையர்களாவே இருந்தது. மேலும் இங்கு இயற்கைத் தத்துவத்தை,அறிவு பூர்வமாக சொல்லித்தந்தனராம். 
  
பித்தாகரஸ் வகுப்பறையில் தியானோவும், இரண்டு மகள்களும்
   தம்பதியான..  பித்தாகரசும்.. தியானோவும்.....!
 தியானோ பித்தாகரசை விட 36 வயது சின்னவர்.இருந்தாலும் கூட ,பித்தாகரசின் மேல்,  மிகவும் ஈடுபாடும்,அர்ப்பணிப்பும் கொண்டிருந்தார். எனவே, அவரையே..வாழ்க்கைத்துணையாக்க முடிவு செய்து, திருமணமும் செய்துகொண்டார். பின்னர் பித்தாகரசும், தியானோவும் இணைந்து, பித்தாகரசின் கல்வி நிறுவனத்தைக் கவனித்துக்கொண்டனர்.    பித்தகராஸ், தியானோ தம்பதியருக்கு 5  குழந்தைகள் பிறந்தன . அதில் டாமோ, மைரியா, அரிக்நாட்,(Damo, Myria and Arignote ) என்ற பெண் மகவுகளும், ம்னேசார்கஸ், 
தெலேகஸ் ( Mnesarchus and Telauges) என்ற இரு ஆண் குழந்தைகளும் இருந்தன .
     கணித நிறுவன..அழிப்பும், பித்தாகராஸ்..கொலையும்..!                        
வயதான் பித்தாகரஸ்
  பித்தாகரசின் கல்வி நிறுவனம், குரோட்டன் நகரின் அரசையும்   தன் கரத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அரசு அதிகாரிகள், அதன் புகழையும், புனிதத்தையும், ஆளுமையையும், குறைத்து, அதன் மேல் வஞ்சம் தீர்க்க முடிவெடுத்தனர். அவர்களில் முக்கியமாக, இந்த நிறுவனத்தில் இணையமுடியாத சைலோன் (Cylon) என்பவரே, இந்த நிகழ்வின் முதன்மை சூத்ரதாரியாக இருந்தார்..! விளைவு..பித்தாகரசின் கல்வி ,கணித நிறுவனம் சூறையாடி அழிக்கப்பட்டது; எரிக்கப்பட்டது.ஏராளமான பதிவுகள் தீயின் கங்குகளுக்கு இரையாயின. மாணவர்களும், ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்; நாடு கடத்தப் பட்டனர். இந்த சமயத்தில்தான், பித்தாகரசும்(கி.மு. 500 /495 ல் ) கொல்லப்பட்டார் என்றே சொல்லப் படுகிறது. பித்தாகராஸ் இறக்கும் தறுவாயில் அவரது வயது 90௦ என்று சொல்லப்படுகிறது.  
  சாம்பலிலிருந்து..உயிர்த்தெழுந்த..தியானோ..பறவை..!
  
    தியானோ எதிராளிகளின் தாக்குதலிலிருந்து எப்படியோ உயிர் பிழைத்து, சாதுரியமாக தப்பித்தார்..! கணவர் பித்தாகரசின் இறப்புக்குப் பின்னர் சிதைந்து போன,பித்தாகரசின் கல்வி நிறுவனத்தை மீண்டும் தன் மூன்று பெண்களின் உதவியுடன், நிர்மாணித்தார்.அப்போது பித்தகராஸ் தனது ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை, பதிவுகளை, தான் உயிருடன் இருந்தபோதே,தன் மூத்த பெண் டாமோவிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்க சொன்னார். அவரோ, அவைகளை தங்கத்தைவிட பாதுகாப்பாக வைத்திருந்தார். அதனால்தான் , அவரது மறைவுக்குப் பின், அவைகளை முக்கிய அடிப்படை ஆவண்ங்களாக,  தொகுப்புகளாக,உலகுக்குத் தரமுடிந்தது. பித்தகராஸ் கல்வி நிறுவனத்தை, தியானோ செழுமையுடன் நடத்தினார்.
<span> </span>
 தியானோ-பித்தாகரஸ்...மகள்களின்.. சிறப்பு..!
    
பித்தாகரஸும், முதல் மகள் டாமோவும்
  தியானோவும் அவரது மகள்களும் குரோட்டனில்,மிகச் சிறந்த மருத்துவர்களாகவும் புகழ் பெற்று விளங்கினர். டாமோ, மைய்யா மற்றும் அறிக்நோட் என்ற இவரின் பெண்கள் பித்தாகரஸ் பள்ளியை பெருமையுடன் நடத்த உதவினர். இவர்கள் மூவரும தத்துவஞானிகள் தான். பித்தாகரசின் கொள்கைகளை,கருத்துக்களைப் பரப்பும் மையமாக பித்தாகரஸ் கல்வி நிறுவனம்  திகழ்ந்தது. . தியானோ ,பித்தாகரசின் மகளான டாமோதான், தன் தந்தையில் எழுத்துக்களை பத்திரமாக , பாதுகாத்து , மீண்டும் பதிப்பிக்க பெரும் உழைப்பை இந்த உலகுக்கு ஈந்தவர். இரண்டாவது மகள் மைய்யா,குழந்தைகளின் சத்து மிகுந்த உணவுத் தேவை,அவைகளுக்கிடையே உள்ள சமன நிலை, சகஜ நிலை பற்றி பதிவு செய்துள்ளார்.தியானோ,பித்தாகரசின் மூன்றாவது மகளான அரிக்னோட் சாகாவரம் பெற்ற எண்களின் இன்றியமையாமை பற்றியும், பிரபஞ்சம், சொர்க்கம், பூமி மற்றும் மதம்/சமயம் இவற்றுடன், அந்த எண்களுக்குள்ள தொடர்பு/காரணம் பற்றியும் எழுதி வைத்துள்ளார்.உலகிலுள்ள அனைத்து பொருள்களும் கணிதத்துடன் தொடர்பு கொண்டது; கணிதத்தின் மூலமே இவற்றை நன்கு கணிக்க/அறிய முடியும் என்றும் கூறுகிறார்.
   பித்தாகராஸ்.. பள்ளியின்.. நிர்வாகி..தியானோ..! 
    
தியானோ,பித்தாகராஸ் தம்பதியின்,  மகன்களில் ஒருவரான டேலஜெஸ்தான் ,பித்தகராஸ் பள்ளி அறிவு பூர்வமாய் வளர்ச்சி பெற மிகவும்  உதவினார். தியானோ கணிதம்,இயற்பியல்,  மருத்துவம், குழந்தை மனநலம் போன்றவை பற்றிய அடிப்படை புத்தகங்கள் எழுதியுள்ளார். .பித்தாகரசின் கல்வி நிறுவனம் அக்காலத்தில் கணிதம் போதித்ததுடன்,பித்தாகரசின் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பும் கணிதம் மற்றும் தத்துவத்தின் மையக்கூடமாக விளங்கியது. தியானோவின் உழைப்பும், ஒப்படைப்பு உணர்வும் இன்றி, பித்தாகரசின் கருத்துக்கள் மத்தியதரைக்கடல் பகுதியில் பாதிப்பை/தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியாது;பரவி இருக்கவும் வாய்ப்பில்லை என வரலாற்றுப் பதிவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திறமையின்..மொத்த..உருவான.. தியானோ..!
     தியானோவும், அவரது இரு பெண்களும் அற்புதமான, திறமைமிகு மருத்துவர்கள். பித்தாகரசின் கருத்துப் படி, மனித உடல் என்பது, இந்த 
பிரபஞ்சத்தின் சிற்றுருவே / நுண்ணளவே என்பதுதான்..!அக்கால மருத்துவரான,  யூரிபோன் ( Euryphon ) னிடம், தியானோவும், அவரின் இரண்டு பெண் மக்களும்,குழந்தை உருவாக்கம் பற்றி கூறும்போது, 7 வது மாதத்துக்குப் பிறகு, கரு உயிருடன் இருக்கும்; பிறந்தால் காப்பாற்றலாம் என்று வாதிட்டனர்.இந்த நிறுவனத்தில், பலரை ஆழ்ந்த அறிவுடன், பிடிப்புடன் உருவாக்கினார் தியானோ. எனவேதான், பித்தாகரசின் கணித நிறுவனம், தியானோ மற்றும் அவர்களின் இரண்டு பெண்களுக்குப் பின்னரும், சுமார்  200 ஆண்டுகள் , ஆல்போல தழைத்து, அருகுபோல  வேர்விட்டு, நீடித்து 
வாழ்ந்தது.கி.மு 5 ம் நூற்றாண்டிலும் கூட, அந்த நிறுவனத்தில் பெண் ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தனராம். 
      ஆசிரியர்..மாணவர்..கூட்டு வாழ்க்கையும்..பதிவும்..!
பித்தாகரஸ் பள்ளியில் ஆலோசனை
     பித்தாகரசின் நிறுவனத்தில், ஆசிரியர்களும், மாணவர்களும் ஒரு சமூகமாக வாழ்ந்தது மட்டுமின்றி, ஒன்றாக அமர்ந்து,பல விஷயங்களை விவாதித்து அதனையே முடிவாக எழுதினாராம். அவர்கள் பதிவு செய்தவை அனைத்தும், பித்தாகரசின்  பெயராலேயே வெளியிடப்பட்டனவாம். பித்தகராஸ் தேற்றத்தை எழுதியவர் தியானோதான் என்றும் சொல்லப்படுகிறது. பித்தாகராஸ் தேற்றம் என்பது, சதுரத்தில்  பக்கங்களின் கூட்டுத்தொகை/அதன் இரண்டு /செங்கோண முக்கோணங்களின் கூட்டுதொகையே பரப்பு என்பதை தெரிவிப்பதாகும்.அனைவரும் கூட்டாக செயல்பட்டு எழுதியதால், யார் எந்த விஷயத்தை, எந்த தேற்றத்தை, எந்த தகவலை எழுதினார்கள் என்பதை தனித்தனியாக குறிப்பிட்டு நாம் அறியமுடியாமல் போய்விட்டது. மேலும் தியானோதான், பித்தாகரசின் நிறுவனத்துக்கு முழுப் பொறுப்பு என்பதால், அவரின் பதிவும் இங்கு அதிகமாகவே இருந்ததாம். பித்தாகராஸ் எழுதிய எந்த அசலான எழுத்தும், பதிவும்,வரைவுகளும் எதுவுமே நமக்கு நேரிடையாக கிடைக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி, எழுதிய பிளாட்டோ மற்றும் ஹெரடோடஸ் ( Plato and Herodotus ) மூலமாகத்தான், பித்தாகராஸ்.தியானோ மற்றும் அவரின் பெண்களின் சாதனைகள், எழுத்துக்கள், திறமையால் உலகுக்குத் தெரிய வருகின்றன. அந்த நிறுவனத்தில் வாழ்ந்த அனைவருமே, பொது சொத்தாகவே,கருதப் பட்டனர்.  
 தியானோவின்.. பதிவுகள் ..!  
நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி,  தியானோவின் படைப்புகள், குறிப்புகள் எதனாயஸ்,சூய்தாஸ், டையோஜீன்ஸ்,லார்டியஸ் மற்றும் இம்பிளிகஸ் ( Athenaeus, Suidas, Diogenes Laertius and Iamblichus ) போன்றவர்கள் மூலமே தெரியவருகின்றன. அவைகளில், பித்தாகரசின் வாழ்க்கை வரலாறு, தங்க சராசரி தேற்றம், எண் தியரி,முதன்மை எண்கள், விண்வெளியியல், பிரபஞ்சத்தின் உருவாக்கம் பெண்களுக்கான அறிவுரை, ஒழுக்கநெறி, கடமை உணர்ச்சி, நேர்மை,பித்தாகரசின் தத்துவஞான கருத்துக்கள் என ஏராளமான படைப்புத்  தொகுப்புகளை   உருவாக்கியுள்ளார்.ஆனால் எந்த ஒன்றிலும் தியானோவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவலே இல்லை.சாமோஸ் மற்றும் குரோட்டன் நகர்களில் கணிதம் கற்றுத் தந்த தியானோ,இயற்கையில் பூக்கள் மற்றும் இலைகளில் காணப்படும் அமைப்புகளை கவனித்து, அதில் அடங்கிக் கிடக்கும் கணிதத்தின் தொடர்பும், உறவும் தெரிந்துகொண்டார். அதன் தொடர்பாக 'தங்க சராசரி/ விகிதம்' (golden mean/golden mean ratio) என்ற அற்புதமான கணிதவியல் புத்தகம் எழுதினர். 
  தியானோவின்... தங்க சராசரி..விகிதம்..!
தங்க விகிதம்
தங்க செவ்வகம்.. தங்க விகித சராசரி
தங்க விகிதம்
    தியானோவின் ஆவணங்களிலேயே, மிகவும் முக்கியமானதும், சுவையானதும் தங்க சராசரி விகிதம் (golden mean/golden mean ratio)தான். அதுதான்,  தங்க சராசரி  விகிததத்தின் மூலக் கோட்பாடு (the principle of the Golden Mean ) என்று கூறப்படுகிறது. இது  கணித ஜியோமிதியின் பை (pie ,π=3.14159 ....) என்பதைப் போன்றே, மாறாதது. இது, கூறுபடா எண் (irrational number) என்று சொல்லப் படுகிறது. இதுவும் கூட கிரேக்கத்திலும், நமது வழக்கிலும் கூட இது பை,(Phi- Φ ) என்றே அழைக்கப் படுகிறது. இதுதான் இயற்கை அமைப்பிலுள்ள தொடர்புகளையும், உறவுகளையும் எளிமையாக விளக்குகிறது. இதனுடைய தசம எண் சுமாராக, 1.6180 என்பதே..!  அதுவே, நம் அன்றாட வாழ்விலும், கணிதத்திலும் பயனுள்ளதுமான பல தகவலைத் தந்துள்ளது. அதற்காக, உலகம் அவருக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டுள்ளது.
தியானோவின்..தங்க விகித...பயன்பாடு..உலகுக்கு..!
எகிப்திய கட்டிடத்தில் தங்க விகிதம்

சனிக் கோளில் தங்க விகிதம்

      தியானோவின் தங்க சராசரி விகிதம் ( Phi  ) என்பது  கலை மற்றும் கட்டிடக்கலையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தியானோ தொகுத்துத் தந்துள்ள, தங்க சராசரி விகிதத்தை அடிப்படையாக வைத்தே, எகிப்தியர்களும், கிரேக்கர்களும் பெரிய பெரிய கட்டிடங்களும், நினைவகங்களும், அரச மாளிகைகளும் எழுப்பினர் என வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயற்கையில் அமைந்துள்ள செடிகளின் வளர்ச்சி அமைப்பைக் கவனிக்கும்போது அவை, தங்க சாராசரி விகிதம் மற்றும் தங்க செவ்வக அமைப்பிலேயே இருப்பதை இப்போது மக்கள் அறிகின்றனர். இயற்கையின் அமைப்பில் உருவான நத்தை, நாட்டிலஸ் (nautilus)ஓடு, சூரியகாந்தி மற்றும் பல கள்ளியின் இலை அமைப்புகள் சுற்றியும், எதிர் சுற்றிலும் காணப்படுவது தங்க சராசரி விகிதமே..! அது மட்டுமல்ல,
பனிக்கட்டியில், தங்க விகிதம்

தங்க விகிதம்

மரத்தின் அமைப்பில், தங்க விகிதம்

மோனோலிசா முகத்தில் தங்க விகிதம்

தங்க விகிதம்
 நமது கை, முகம்,உடல், இலை , செடி, ,மலர், மரம்,மரவட்டை, சிலந்தி வலை, பூச்சியின் அமைப்பு, தேன்கூடு மற்றும் பால்வழி மண்டலம் உட்பட,அனைத்து விஷயங்களின் அமைப்பும், இந்த கணித தங்க சராசரி விகிதத்தை ஒட்டியே அமைந்துள்ளன என்றால், ஆச்சரியமான தகவல் அல்லவா? பின்னர் உருவான பைபோனாச்சி எண் அமைப்பும் (IN nature , there is a  special relationship between the Golden Mean and Fibonacci Numbers (0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, ... etc, each number is the sum of the two numbers before it).இதனை சார்ந்த்ததே..! 
தியானோவின்..வானவியலில்..கணிதமும்..இசையும்..!
  

பால்வழி மண்டலம்
  தியானோ , சுமார் 2 ,500 ஆண்டுகளுக்கு முன்பே. பிரபஞ்சம் பற்றிய கருத்தை மிகத் தெளிவாக எழுதி,பதிவு செய்து வைத்துள்ளார் . அது தொடர்பாக, தீவிர நம்பிக்கையுடன், விவாதமும் செய்தார்.  சூரியன், சந்திரன், சனி, வியாழன், செவ்வாய், வெள்ளி, புதன் , பூமி , பூமியின் மையம் மற்றும் விண்மின்கள் அடங்கிய 10  அடர்வான கோளங்கள்அடங்கியது தான் பிரபஞ்சம் என அந்தக் காலத்திலேயே கணித்தவர், தியானோ என்ற பெண் கணிதவியலாளர்தான் . மேலும் சூரியன் , சந்திரன், சனி,வியாழன், செவ்வாய், வெள்ளி மற்றும் புதன் அனைத்தும் மையத்தில் உள்ள ஒரு நெருப்பு பந்தை சுற்றிவருகின்றன என்றும் கூறினார். விண்மின்கள் என்பவை நகராமல் நிலையாக இருக்கின்றன என நம்பினார். தியானோவின் கொள்கை/கருத்துப்படி, இந்த மைய நெருப்பு பந்துக்கும்,அதனைச் சுற்றி வரும் கோளங்களுக்கும் இடையேயுள்ள தொலைவு என்பது, இசையின் சுரவரிசைக்கு இடையேயுள்ள இடைவெளியை, ஒத்த  கணித பரிமாணம் உள்ளது என்ற அற்புதமான கருத்தையும் வெளிப்படுத்தினா

உலக வன தினம்

காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் கூட்ர்ரோடு ஜெ.சி.போஸ் துளிர் இல்ல மாணவர்கள் உலக வன தினம்(மார்ச் 21), உலக நீர் தினம்(மார்ச் 22) ஐ முன்னிட்டு ஏற்கனவே திட்டமிட்டப்படி விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சார பயணம் நெல்வாய் கூட்ரோட்டிலிருந்து காலை 10.00 மணியளவில் மங்கலம் ஊராட்சி துணைத்தலைவர் திரு தினகரன் மற்றும் வார்டு உறுப்பினர் திரு அக்பர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி துவக்கி வைத்தனர்,

     36 மாணவர்களும், 21 மாணவிகளும் சைக்கிள் பிரச்சாரத்தில் பங்கு பெற்றனர். 11 கிராமங்கள், குன்றுகளுடன் கூடிய  காடு, இரண்டு புகழ்பெற்ற பறவைகள் சரணாலயங்களில் (கரிக்கிலி, வேடந்தாங்கல்,) பிரச்சாரம் தொடர்ந்தது.
     இடையிடயே காடுகளைப்பற்றிய விளக்கங்களும், நீரின் அவசியமும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
 
     காடுகளைப்பற்றி வேடந்தாங்கள் வன பாதுகாபு அலுவலர் அவர்களும், நீரின் அவசியம் பற்றி காஞ்சி மாவட்ட நீர் உரிமை பாதுகாபு ஒருங்கிணைப்பாளர் திரு. திருமலை அவர்களும் விளக்கினர். மாணவர்கள் காடு, நீர் ஆகியவற்றின் அவசியத்தை மேலும் உணர்ந்தனர். 
 
     மாணவர்கள், அட்டை வாசகங்களுடன் பொதுமக்களிடம் இவற்றின் அவசியத்தை விளம்பரப்படுத்தினர். மொத்தம் 30 கி.மீ. பயணம் மாலை 5.00 மணிக்கு முடிவுற்றது. மாணவர்களுக்கும் புது அனுபவமும் மகிழ்சியும் கிடைத்ததாக தெரிவித்தனர்.
 
அன்புடன்
கெ. முனுசாமி.
ஜெ.சி.போஸ் துளிர் இல்ல வழிகாட்டி ஆசிரியர்

ஏ பிச்சுக்கா...குப்பாச்சி எங்கே இருக்கே?





'ஏ குருவி, சிட்டுக் குருவி...எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு....'என்று போகிற (அண்மையில் மறைந்துவிட்ட அற்புதப் பாடகர் மலேசியா வாசுதேவன் குரலில்..) முதல் மரியாதை திரைப்படப் பாடலை யார்தான் கேட்டு ரசித்திருக்க மாட்டோம்?  இளமைப் பருவங்களில் இயற்கையின் தோழர்களாகத் தொடங்கும் மனிதர்களின் வாழ்வில் பறவைகள் முக்கியமானவை.  கண்ணுக்கும், கைக்கும் அடக்கமான செல்லப் பிஞ்சுக் குட்டியாகக் காட்சியளிக்கும் குருவிகள் வசீகரமானவை.
உலகின் தேர்ந்த சிற்பி செதுக்கிய கழுத்தும், மகத்தான ஓவியரின் தூரிகை தேர்ந்தெடுத்த வண்ணங்களும் ஒயிலான சிறகு மடிப்பும், ஓர் இராணுவ அதிகாரி கற்றுக் கொடுத்தது மாதிரியான மிடுக்கான கம்பீரமும், அதிலிருந்து ஒளிச் சிதறலான பார்வையும், திருவிழாக் கடைத்தெருவில் இதை வாங்கிக் கொடு, அதை வாங்கிக் கொடு என்று ஓயாமல் சிணுங்கிக் கவனத்தை ஈர்த்துவிடுகிற குழந்தை மாதிரியான கீச்சொலியுமாய் எப்படி மறக்க இயலும் குருவிகளின் உலகத்தை....
பறவை மனிதர் என்று பார் அறியப் புகழ் வாழ்வு வாழ்ந்து மறைந்த டாக்டர் சலீம் அலி அவர்களது இளைமைக் காலத்தில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி, பறவைகளின் தோழனாய் அவரை வடிவமைத்த பெருமை, அவரது விளையாட்டு துப்பாக்கியின் கல் தோட்டாவிற்கு பலியான குருவியைத் தான் சாரும்.  டபிள்யூ எஸ் வில்லார்ட் என்ற பறவை நிபுணரிடம் பின்னர் அவர் கேட்டறிந்த அந்தப் பறவையின் பெயர் மஞ்சள் கழுத்துக் குருவி. அவரிடம் பறவைகள் குறித்த ஞானத்தின் பால படத்தைக் கற்ற சலீம் அலி, இந்தியா நெடுக பறவைகள் சரணாலயம் அமையவும், மனிதர்கள் இயற்கையைக் கொண்டாட வேண்டிய அருமையைப் புரிந்து கொள்ளவும் தமது வாழ்வை அர்ப்பணித்தவர்.

இப்படியான பறவைகளைத் தான் நமது நவீன வாழ்வுச் சூழல் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.  இன்ன காரணம் என்று வரையறுக்க முடியவில்லை என்றாலும், நமது உணவு முறை, குருவிகளுக்கு ஒரு கூடு கட்டிக் கொள்ள இடம் தராத நவீன அடுக்ககங்களின் வடிவமைப்பு, குருவி போன்ற பறவைகளின் முக்கிய உணவான பூச்சி, புழுக்களின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துவருவது., கான்கிரீட் உலகம் வெளியேற்றிக் கொண்டிருக்கும் புல் தரைகள், பூந்தோட்டங்கள், தலையில் தட்டிக் குறுக்கி வளர்க்கப்படும் தாவரங்களால் விடைபெற்றுப் போகும் நீண்ட நெடிய மரங்கள்....என பறவைகளுக்கு ஒவ்வாத புறவுலகில் தான் நாம் நம்மைக் குடியமர்த்திக் கொண்டு வருகிறோம்.

அலைபேசி தொடர்புக்காக அமைக்கப்படும் கோபுரங்கள் கூட, அவற்றின் அலைவீச்சு கூட குருவிகளின் இனப்பெருக்கத்திற்கு எதிராக இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.  நகர வாழ்விலும், நமது வேளாண்மையிலும் மிகையாகிக் கொண்டு வரும் வேதியல் பொருள்களும் ஒரு காரணம்.  இந்த காரணங்களைச் சொல்லும் ஹிந்து நாளேட்டின் சிறுவர்களுக்கான யங் வேர்ல்ட் இணைப்பில் அண்மையில் வந்திருக்கும் கட்டுரையில், ஈயம் பிரிக்கப்பட்ட பெட்ரோல் பயன்பாட்டினால் வெளிவரும் புகையில் இருக்கும் மீதில் நைட்ரைட் கூட குருவிகளின் உணவான புழுக்களை ஒழித்துக் கட்டிவிடுகின்றன என்று சொல்கிறது.  குருவிகள் இனத்தைக் காக்க வேண்டியது இப்போது விரிவான விவாதப் பொருளாகி வருகிறது.

உலகு முழுக்க இயற்கை நேயர்கள், மார்ச் இருபதாம் தேதியை, குருவிகள் தினமாக அனுசரிக்கக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழில் நாம் குருவி என்று வாய் நிறைய விளித்து மகிழும் இந்தச் செல்லச் சிட்டுக்கு, தெலுங்கில் என்ன பெயர் தெரியுமா, பிச்சுக்கா!கன்னடத்தில்? குப்பாச்சி.  இந்தி மொழியில் கொரையா.   குஜாராத்தி மக்கள் சாக்லி என்று அழைத்தால், மகாராஷ்டிர மாநிலத்தில் இதன் பெயர் சிமானி.  மேற்கு வங்கத்தில் சராய் பகி, உருது மொழியில் சிரியா, சிந்தியில் ஜிர்க்கி.  நமக்கு, குழந்தையின் உதடுகளைக் குவித்து ஒயிலாகச் சொல்லும் குருவி...

வீட்டுச் சமையலுக்கே காணாத தானியங்களை எடுத்து, காக்கை குருவி எங்கள் சாதி..என்று மகாகவி, பறவைகளுக்காக இறைத்து வைப்பாராம். எளிய தோட்டம், சிறிய நீர்த்தொட்டி, சிந்திக் கிடக்கும் தானிய மணிகள், குறைத்துக் கொள்ளப்படும் வேதியல் பயன்பாடு...என நாமும் பறவைகளின் காதலர்களாக  எத்தனையோ சாத்தியங்களைக் கண்டுபிடிக்க முடியும்.

குஞ்சுகளைக் காப்பதில் தாய்க் குருவியும், தகப்பன் குருவியும் ஒன்று போல் ஆசையாயிருக்குமாம்.  குருவிகளைக் காப்பதில் மனித சமூகம் மட்டும் அலட்சியம் காட்டினால் எப்படி? பறவைகளுக்கு அந்நியமாகிவிட்ட மண்ணில், மனித இனம் மட்டும் தழைத்துவிட முடியுமா என்ன!  மார்ச் இருபது, மானுட தினம் என்றே கொள்ள வேண்டும்.  சலீம் அலி இதைப் புரிந்து வைத்திருந்தார் என்றே தோன்றுகிறது.
- எஸ்.வி.வேணுகோபாலன்

MARCH-19-இன்று உலகக் குருவிகள் தினம்!

எங்க போச்சு?



தொடர்ந்த வேலைகளுக்கிடையேயும் அலுவலகத்தில் அம்மாவின் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது அவனுக்கு. நான்கைந்து வருடங்களாக வராத அம்மா நேற்று வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களை சம்மதிக்க வைத்து இந்த நகரத்திற்கு அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமையானபடியால் கூடவே இருந்து அம்மாவை கவனித்துக் கொள்ள முடிந்தது. இன்று அவனும், அவளும் அவரவர் அலுவலகங்களுக்கு கிளம்ப, குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டிருந்தனர். வீட்டைப் பூட்டிக்கொள்ளவும், சமைத்திருந்த மதிய உணவையும், ஃபிளாஸ்கில் போட்டு வைத்திருந்த டீயைப் பற்றியும் அம்மாவிடம்  சொல்லப்பட்டு இருந்தது. ரிமோட்டை இயக்கி எப்படி டி.வி பார்ப்பது என்றும், எந்தெந்த நம்பர்களில் எந்தெந்த சானல் என்றும் கூட விளக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் தவிப்பாய் இருந்தது. வீட்டில் போன் இருந்தாலாவது அம்மாவிடம் இரண்டு வார்த்தை பேசிக் கொள்ளலாம் எனத் தோன்றியது. ஊரில் பேசவும், பழகவும் வீடுசுற்றி மனிதர்கள் இருப்பார்கள். தனியாய், உள்ளே பூட்டிக்கொண்ட வீட்டில் அம்மா என்ன செய்வார்களோ என உறுத்திக் கொண்டே இருந்தது.
சாயங்காலம் அலுவலகம் முடிந்ததும், நேரே வீட்டிற்கு போனான். குழந்தைகள் வந்திருந்தனர். அம்மா வாசலருகே சேர் போட்டு உட்கார்ந்திருந்தார்கள். எதையும் காட்டிக்கொள்ளாமல் “என்னம்மா, எப்படியிருந்தீங்க.... என்ன சீரியல் பாத்தீங்க” என்றான் சிரித்தவாறு.
“எய்யா... முன்னால் எல்லாம் ஒங்க வீட்டுல எவ்வளவு சிட்டுக்குருவி உண்டு. ஜன்னல் வழியா அதுபாட்டுக்கு உள்ளே வந்து போகும். துணிக் காயப்போட்டு இருக்குற கொடியில வரிசையா உக்காந்து கத்தும். இந்த புங்க மரத்துல எப்பப் பாத்தாலும் அடைஞ்சு கிடக்கும். இப்ப ஒன்னையும் காணம். எங்க போச்சு?” என்றார்கள் வருத்தமாக.

Mar 20, 2011

இந்த உலகம் நமக்கு முன்பும் இருந்தது...

இந்த உலகம் நமக்கு முன்பும் இருந்தது. நமக்குப் பிறகும் இருக்கும். அப்படியிருக்க நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் இந்த உலகை நாளை நம் குழந்தைகள் கையிலும் பேரப்பிள்ளைகள் கையிலும் எப்படி ஒப்படைக்கவிருக்கிறோம். இயற்கைச் சமநிலையைப் பற்றி,, சுற்றுச்சுழல் சீர்கேட்டைப் பற்றி,, இயற்கையின் மார்பறுத்து இரத்தம் உறிஞ்சும் மனிதனின் இலாப வேட்டை பற்றி,, சிறிதும் கவலைகொள்ளாத நாம் எதைச்சேர்த்து வைக்க நாளும் ஓடுகிறோம்?

2011 ஆம் ஆண்டை சர்வதேச காடுகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. உலக அளவில் காடுகளின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 33%மாக இருந்த இந்தியக் காடுகள் தற்போது 19.5%மாக குறைந்திருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. உயிர்வளி உற்பத்தித் தொழிற்சாலைகளான காடுகளை அழித்து விட்டு எத்தகைய தொழிற்புரட்சிக்கு வித்திடப்போகிறான் மனிதன் என்பது புரிந்தபாடில்லை.

காடுகள் பாதுகாப்பு என்றவுடன் நம்மில் பெரும்பாலானோர் மரங்களைத் தாண்டி சிந்திக்க மறந்துவிடுகிறோம். காட்டுயிர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சியினங்கள் என காடுகளுக்குள் இருக்கும் ஒரு உயிர்ப்பின்னலை நாம் நினைத்துப்பார்ப்பதில்லை. சொல்லப்போனால் காடுகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த உயிர்ப்பின்னல்தான். எனவே காடுகள் பாதுகாப்பு என்பதில் மேற்குறிப்பிட்ட உயிர்ப்பின்னலை பாதுகாப்பது குறித்தும் கட்டாயம் பேசியாக வேண்டும்.

கல்வாரியா என்னும் ஒரு வகை மரம் தற்போது இல்லை. டோட்டோ எனும் ஒரு வகை பறவை இனமும் தற்போது இல்லை. (மனுசப் பய அழிச்சுட்டானப்பா அப்படின்றத தான் இப்படி சுத்தி வளச்சு சொல்ல வேண்டியிருக்கு). இவ்விரு அழிவுகளுக்கும் தொடர்பு உண்டு. கல்வாரியா மர விதைகளின் உறையானது கடினமானது. இம்மரத்தின் பழங்களை டோட்டோ பறைவைகள் உண்ணும். திறன் மிகுந்த அப்பறவையின் ஜீரண மண்டலம் அவ்விதையின் உறையை சிதைத்து விடும். பின்னர் கழிவோடு விதை வெளியேறும் போது புதிய கல்வாரியா மரம் முளைக்கத் துவங்கும். எனவே இம் மரங்களின் உற்பத்தியானது டோட்டோ பறவையைச் சார்ந்தே இருந்தது. டோட்டோ பறவையின் அழிவுக்குப் பிறகு கல்வாரியா மரங்களின் உற்பத்தியும் முடிவுக்கு வந்தது. மனிதனை நம்பி அல்லது சார்ந்து எந்த உயிரினமும் இல்லை ஆனால் எல்லா உயிரினங்களையும் சார்ந்தே மனிதன் இருக்கிறான். இந்த உண்மையை மனித இனத்திற்குப் புரியும் படி ஊதும் வி

கடந்த 60 ஆண்களுக்கு முன் 40,000 புலிகள் இருந்த இந்தியாவில் இன்று வெறும் 2,000 புலிகள் மட்டுமே உள்ளன. காடுகள் என்றாலே சிங்கம் புலி எல்லாம் ஒன்றாக இருக்கும் என நினைக்கும் நமக்கு இந்தியாவில் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே சிங்கங்கள் உள்ளன அதுவும் வெறும் 300 சிங்கங்களே உள்ளன என்ற தகவல் அதிர்வைத் தரும் செய்தியாக இருக்கிறது. 1948க்குப் பிறகு சீட்டா (சிவிங்கிப் புலி) இந்தியாவிலிருந்து முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு விட்டது. அழிந்து வரும் உயிரினங்களின் பெயர்கள் இடம்பெறும் Red Date Bookல் இந்திய உயிரினங்களின் பெய்ர்ப்படியல் நீண்டுகொண்டே செல்கிறது.

மனிதர்களின் பெருக்கத்திற்கேற்ப நகரங்கள் விரிவுசெய்யப்படுகின்றன. அதே போல் காடுகள் விரிவுசெய்யப்படுகின்றனவா. ஒரு யானைக்குட்டி புதிதாகப் பிறந்தால் 1 ஏக்கர் பரப்பளவுள்ள காடு கூடுதலாக தேவை என்று காட்டுயிர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நடைமுறை அப்படி இல்லையே. அதனால் தான் உணவு தேடி அலையும் போது கூட்டம் கூட்டமாக இரயில் தண்டவாளங்களில் அடிபட்டும் காடுகளில் போதுமான உணவின்றியும் யானைகள் அதிக அளவில் இறக்கின்றன.

 

 இவ்வாறான உதாரணங்களும் புள்ளி விவரங்களும் நிறைய உண்டு. நிற்க. திண்ண சோறு செரிமானம் ஆகல போல அதான் கூவுறான் என்பது போலத்தான் இயற்கையைப் பற்றி காடுகளைப் பற்றி பேசுபவர்களை இன்று நம் தமிழ்ச் சமூகம் வேடிக்கை பார்க்கிறது. ச.முகமது அலி, தியோடர் பாஸ்கரன் உள்ளிட்ட விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சிலர் தான் இயற்கைச் சிந்தனையாளர்களாகவும் அதை மையப்படுத்தி எழுதும் எழுத்தாளர்களாகவும் உள்ளனர். என்னுடைய நாவல் தமிழ்நாட்டிலேயே நாலு பேருக்குத்தான் புரியுதாம்னு பாராட்டு விழா மேடைகளில் பேசிக்கொள்ளும் கலை இலக்கிய அதிஅற்புத அறிவுஜீவி எழுத்தாளர்கள் எவரும் நம் பக்கம் நிற்கவோ நம் செயல்களில் களப்பணிகளில் துணைநிற்கவோ தயாரில்லை.

காட்டுயிர்களையும் அதன் வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு நம் காலத்தில் விதைக்கப்பட வேண்டும். நம் பிள்ளைகளிடம்,, நம் உறவினர்களிடம்,, நம் குடும்பத்தில்,, நாம் இது குறித்துப் பேசத் துவங்குவோம். வகுப்பறைகளை இதற்கான களமாக பயன்படுத்துவது சமுகத்தின் மேல் அக்கறை கொண்ட ஒவ்வொரு ஆசிரியரின் கடைமையாகும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாணவர்களிடையேயும் மக்களிடையேயும் பல்வேறு செயல்பாடுகளின் மூலமாக காடுகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி மக்கள் இயக்கங்களை நடத்தி வருகிறது. நாளைய தலைமுறை குறித்து கவலையோடு சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் அறிவியல் இயக்கச் செயல்பாடுகளில் தன்னை அர்பணிப்போம்.,,

Mar 19, 2011

கடந்த 300 ஆண்டுகளில் 134 பறவை இனங்கள் அழிவு

 

கடந்த 300 ஆண்டுகளில் 

134 பறவை இனங்கள் முற்றிலுமாக அழிந்துபோயுள்ளன. பிரிட்டனைச் 

சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இவைகளில் 27 பறவை இனங்கள் 18-ம் நூற்றாண்டிலும், 51 பறவைபறவைபறவை இனங்கள் முற்றிலுமாக அழிந்து போயுள்ளன. மேலும் 625 பறவை இனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்போது உள்ள பறவை இனங்களில்பறவை இனங்கள் ஜப்பான் நாட்டில் உள்ளன. இந்தியாவில் வல்லூறு, நீர்பறவை போன்றவை அழிந்துவரும் பறவைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் 225 பறவை இனங்கள் அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளன. அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த 32 பறவை இனங்களில் இனங்கள் 19-ம் நூற்றாண்டிலும், 56 இனங்கள் 20-ம் நூற்றாண்டிலும் அழிந்துபோயுள்ளன. இந்த நூற்றாண்டில் இதுவரை 3 அதிகபட்சமாக 1226

எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளன. இதுபோல பறவைகள் இடம் பெயர்வது அதிகரித்துள்ளது. ஆசிய – பசிபிக் பகுதிகளில் வசித்து வந்த பல பறவைகள் இடம் பெயர்ந்துள்ளன. வாழ்வதற்கு போதிய சூழ்நிலை இல்லாததே பல நூறாண்டுகளாக வாழ்ந்துவந்த இடத்திலிருந்து பறவைகள் இடம்பெயரக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

விழிப்புணர்வு கருத்தரங்கம்

தினமலர்:

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2011,23:37

கூடலூர்:தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கூடலூர் வ.உ.சி.,நடுநிலைப்பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் தலைமை ஆசிரியை வனிதாமணி தலைமையில் நடந்தது. அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் வரவேற்றார். "வனவளம் காப்போம்' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. துளிர் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கவிஞர் ஓவியா தனசேகர் பரிசு வழங்கி பேசினார். அறிவியல் இயக்க
மாவட்ட செயலர் சுந்தர், ஆசிரியர்கள் பிரகலாதன், சிவமூர்த்தி, மாணவர்கள் கலந்து கொண்டனர்.