முதல் பக்கம்

Mar 25, 2011

அன்றாட வாழ்வில் வேதியியல்

மார்ச்18, 2011 வெள்ளிக்கிழமையன்று
மாலை 3.30 மணிக்கு தேனி மாவட்டம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
கொண்டுராஜா நினைவு உயர்நிலைப்பள்ளியில்
கருத்தரங்கம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு.முருகன்
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச்
செயலாளர் திருமிகு தே.சுந்தர் வரவேற்றுப்
பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க
மாவட்டத் தலைவர் திருமிகு பா.செந்தில்குமரன்
அன்றாட வாழ்வில் வேதியியல் என்ற தலைப்பில்
கருத்துரை வழங்கினார். மாவட்டச் செயற்குழு
உறுப்பினர் திருமிகு க.முத்துக்கண்ணன்
துளிரின் உள்ளடக்கம் குறித்தும் அறிவியல்
இயக்க வெளியீடுகள் குறித்தும் பேசினார்.
பள்ளி ஆசிரியர் திருமிகு வேல்முருகன்
நன்றி கூறினார். சுமார் 250 மாணவ மாணவியர்
கலந்துகொண்டனர். புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.
செய்தி – தே.சுந்தர்
பதிவர் - ஓவியா

No comments:

Post a Comment