முதல் பக்கம்

Mar 16, 2011

வேதியியல் கதைகள்

பேராசிரியை மோகனா அறிவியல் நூல்களை தமிழில் மிக எளிய மொழியில் அனைவரும் வாசிக்கமுடிந்த நேசமிக்க சொற்களால் படிப்பதில் கைதேர்ந்தவர். மிக சிக்கலான அறிவியலின் நெட்டி முறிக்கும் கோட் பாட்டியலைக் கூட மிக சாதாரணமாக நமது அன்றாட வாழ்வின் நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதி நாம் அனைவருமே எளிதில் அவற்றைப் படித்து பயன் பெற எழுதும் தோழமை கொண்ட எழுத்து  அவருடையது.
வேதியியல் என்றால் ஏதோ சமன்பாடுகள் குடுவைகள் தொழிற்சாலைவேலை, என நினைப்பதே இயல்பு ஆனால் வேதியியலையும் கதையாக தரமுடியும் என்பதை பார்க்கிறபோது வியப்பாக இருக்கிறது. களி மண் முதல் இன்றைய கூடங்குளம் வரை வேதியியலின் சுருக்கமான வரலாறு மூலம் தொடங்குகிறது. புத்தகம், வேதியியல் என்பது நாம் நுகரும் மணம், உண்ணும் உணவு சுவாசிக்கும் காற்று உடுத்தும் உடை... முகப்பூச்சு முதல் சோப்பு வரை எல்லாம் தான் அனைத்தின் ரகசியங்களையும் வேதியியல் கதைகள் புட்டுபுட்டு வைக்கின்றன.
நிலக்கரி, பாஸ்பரஸ், மத்தாப்பூ, பட்டாசு முதல் வைரம் வரை எதையுமே இந்தப்புத்தகம் விட்டுவைக்க வில்லை. அடுப்பங்கரையிலிருந்து அணுஉலை வரை 14000 பயன்பாடுகள் கொண்ட உப்பை அறிமுகம் செய்யும் விடுகதை பாணி குழந்தைகளை ஈர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பாராசெலஸ் துத்தநாகத்திற்கு ஸிங்க்என பெயரிட்டதிலிருந்து டீத்தண்ணியை நிறமாற்றும் அந்த எளிய சோதனை வரை இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் முக்கிய முயற்சி இந்தப்புத்தகம் வேதியியல் ஆசிரியர்கள் அவசியம் ஒரு பைபிளாக கருதி வாசிக்க வேண்டிய சிறுவர்களை சென்று அடையவேண்டிய பொக்கிஷம் இந்நூல் என்பதை இதை வாசிப்பவர்கள் கட்டாயம் ஒப்புக்கொள்வார்கள்.

பேரா. மோகனா
வெளியீடு புக்ஸ் ஃபார் சில்ரன்,
சென்னை-18 | பக்: 80 | ரூ. 35/-

-புத்தகம் பேசுது ஆசிரியர் குழு

No comments:

Post a Comment