முதல் பக்கம்

Mar 16, 2011

கடற்கரையோரம் ஒரு நடைப்பயணம் - த.வி.வெங்கடேஸ்வரன்


கடற்கரை என்பது புவியின் திறந்தவெளி ஆய்வுக்கூடமாகும். கிளிஞ்சல்கள், சிப்பிகள் முதல் நண்டுகள் வரை நம்மை கவரும் விஷயம் ஒன்றா இரண்டா. அப்படிப் பட்ட அந்த கடல்வெளியில் ஒரு குழந்தையாக நடந்து தேடி ஒரு விஞ்ஞானியாக பல விஷயங்களைப் பதிவு செய்து இந்தப் புத்ததகத்தை உருவாக்கி தந்துள்ளா£ர்
த.வி. வெங்கடேஸ்வரன்.
நூற்றுக்கணக்கான சிப்பிகள், சங்குகள், கிளிஞ்சல்கள், பர்னிக்கிள்கள், நட்சத்திரமீன்கள், கடல்முள்ளெலி, கூம்பு ஓடுகள், சோழிகள் ஸ்குய்டுகள், நண்டுகள் என ஓரு பிரம்மாண்ட உலகை வெறும் நாற்பது பக்கத்தில் அடைக்க முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
கணவாய் மீன்கள் என்று விரியும் ஆராய்ச்சி நாம் அதிகம் பார்திருத்திராத முள்ளம்பன்றி மீன் வரை விரிந்து ஒரு புதிய உலகையே நம்முன் நிறுத்தும் இந்த நூலை வாசிக்கும் இளம் விஞ்ஞானிகள் மறுமுறை கடற்கரைக்கு போகும் போது கட்டாயம் புதியதேடலை தொடங்கி வாழ்வின் புதிய சகாப்தத்திற்கு வழிகோலுவார்கள். விஞ்ஞானி ஃபிரட் பென் தந்து உதவியுள்ள படங்கள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அவசியம் மாணவ மாணவியர்கள் வாசித்து மகிழ வேண்டிய நூல் இது.
கடற்கரையோரம் ஒரு நடைப்பயணம்
த.வி.வெங்கடேஸ்வரன்
புக்ஃபார்சில்ரன், சென்னை - 18
பக்: 40 | ரூ. 10/-

No comments:

Post a Comment