முதல் பக்கம்

Jan 28, 2013

அறிவியல் கல்வியின் அவசியம்-கருத்தரங்கம்:

டிசம்பர் 29 ம் தேதி தேனி மாவட்டம், லோயர்கேம்ப் அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி மாணவர்களுக்கான நாட்டு நலப் பணித்திட்ட முகாமில் அறிவியல் இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட துணைத் தலைவர் பேரா. முகமது சரீப் தலைமை தாங்கினார். ”அறிவியல் கல்வியின் அவசியம்எனும் தலைப்பில் அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைச் செயலாளர் .முத்துக்கண்ணன்   கருத்துரை வழங்கினார். புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட் ராமன் சில பயிற்சிகளை வழங்கினார்.  ஒரிகாமி பயிற்சிகள் உள்ளிட்ட பிற செயல்பாடுகள் நடத்தப்பட்டன. கல்லூரிப் பேராசிரியர்கள் முகமது  ராவுத்தர் , முகமது மீரான், பிலால் உட்பட 150 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

பளியன்குடியில் கல்வித்திருவிழா:

டிசம்பர் 26,27,28 ம் தேதிகளில் தேனி மாவட்டம் கூடலூர் -மலையடிவாரப் பகுதியான பளியன்குடி எனும் கிராமத்தில் உள்ள கம்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சார்பாக ஓர் கல்வித்திருவிழா நடைபெற்றது. அங்கு வசிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கான புத்தாக்கப்பயிற்சிக்காக இந்நிகழ்வு திட்டமிடப்பட்டு அங்குள்ள பொதுமக்களும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட வெற்றிகரமான திருவிழாவாகவே அமைந்து விட்டது. 
 
இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக பாடல்கள், கதைகள் , ஒரிகாமி பயிற்சிகள் போன்ற செயல்பாடுகள் நடத்தப்பட்டன. அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளை செயலாளர் க.முத்துக்கண்ணன், ராஜ்குமார் ஆகியோர் கருத்தாளராக பங்கேற்று பயிற்சிகளை வழங்கினர். அரையாண்டு விடுமுறையில் ஆசிரியர்களெல்லாம் பள்ளிகூடத்தை மறந்து களிப்பில் இருக்கும் தமிழக கல்விச்சுழலில் அப்பள்ளி சார்ந்தவர்களையெல்லாம் விடுமுறை தினத்திலும் ஒன்றிணைத்து பழங்குடியின மாணவர் நலனுக்காக ஒர் கல்வித்திருவிழாவை நடத்தியிருந்தார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட பொதுக்குழு உறுப்பினருமான ஜெ.முருகன் . அவருக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..
க.முத்துக்கண்ணன் 

Jan 12, 2013

உலகம் அழியும் என்ற வதந்தி குறித்து அறிவியல் இயக்கம் கூறுவது என்ன?

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். டிசம்பரில் உலகம் அழியுமென்று? 12-12-12 தேதியைச் சிலரும், 21-12-2012 யைச் சிலரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இப்பொழுது மட்டுமல்லாமல் உலகம் அழியும் என்று சில ஆண்டுகளுக்கு ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். நா°டர்டாம் என்பவர் இதில் பெரிய வல்லுநர் எனச்சொல்லி அவருடைய கணிப்பை அடிக்கடி சொல்லுவார்கள். அவருடைய கணிப்புகள் அனைத்தும் பொடீநுயாகிப்போயின. சமீபத்தில் இப்பொழுது நா°டர்டாம் காணாமல் போய் விட்டார். அதே போல் 2000மாவது ஆண்டில் அழிந்து விடுமெனவும் சொன்னார்கள். அதுவும் நடக்கவில்லை எதை வைத்துக்கொண்டு டிசம்பரில் அழியும் என்கிறார்கள்.? தென் அமெரிக்க நாட்டில் தற்போதைய கௌதமாலா நாட்டின் பழமையான மாயன் கலாச்சாரம் இருந்த போது மாயன் காலண்டர் வடிவமைக்கப்பட்டதாக சொல்லுகிறார்கள். அதனை அடிப்படையாக வைத்து உலகம் அழியும் என்கிறார்கள். மாயன் காலண்டர் என்பது என்ன?

நாம் கூறப்போகும் மாயன் காலண்டர் என்பது கி.மு.முதலாம் நூற்றாண்டு காலத்திற்குப்பின் உருவாக்கப்பட்டது. மாயன் கலாச்சாரம் என்பது கொலம்பிய நாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள மத்திய அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது ஆகும். தற்பொழுது கௌதமாலா நாட்டை மையப்படுத்தியதாகக் கூறலாம். மாயன் காலண்டர் பல காலங்களில் பல வகைகள் இருந்திருக்கின்றன.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது 260 நாட்கள் கொண்ட ஸோல்கின் காலண்டர், 365 நாட்கள் கொண்ட காப் (ழயயb) காலண்டர். முதலாவது வகை கிமு முதலாம் நூற்றாண்டிலும், இரண்டாவது வகை கிமு ஐந்தாம் நூற்றாண்டிலும் உருவாக்கப்பட்டது. வருடத்திற்கு 260 நாட்கள் கொண்ட ஸொல்கின் காலண்டர் 20 பருவங்கள் கொண்டு ஒவ்வொரு பருவத்திற்கும் 13 நாட்கள் கொண்டது. 365 நாட்கள் கொண்ட காப் காலண்டரில் 18 மாதங்களும் ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் கொண்டிருக்கும். ஆக மொத்தம் 360 நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் சமமாகவும் கடைசி 5நாட்கள் வருடத்தின் இறுதிப்பகுதியில் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளது.

இந்த இரண்டு காலண்டர்களும் ஒவ்வொரு 52 வருடத்திற்குஒரு முறை ஒரே குறிப்பிட்ட தேதியைக் கொண்டிருக்கும். அந்தத் தேதியை ஒரு காலண்டர் சுற்று என்கின்றனர். இதே போல் தான் காப் காலண்டரில் நாட்கள், நீண்ட கணக்குக் காலம் (டடிபே ஊடிரவே ஞநசiடின), நீண்ட கணக்கு அலகு (டுடிபே ஊடிரவே ருnவை) என மூன்று பிரிவுகள் உள்ளன. அதை நமது சூரிய வருடத்திற்கேற்ப ஒப்பீட்டுப் பார்க்கலாம். ஒரு நாளை நீண்ட கணக்கு அலகுப்படி ஒரு கின் என்கிறார்கள். 20 நாளை ஒரு வினல் என்றும் குறிப்பிடுகிறார்கள். 18 வினல்களை, 360 நாட்கள் கொண்டதை, ஒரு டுன் என்றும் (ஒரு வருடம்) 20 டுன்கள் ஒரு காட்டூன் (7200 ஆண்டுகள்) என்றும், 20 காட்டூன் ஒரு பக்டூன் (1,44,000 ஆண்டுகள்) ,20 பக்டூண்கள் ஒரு பிக்டூன்கள் (2,880, 000 ஆண்டுகள்) என்றும் இருபது இருபதாகப் பெருக்கிகொண்டே சென்று 23,040,000,000 ஆண்டுகள் கொணட அலடூன் வரை சென்றுள்ளானர். அதாவது நமது காலண்டர்படி 6,30,81,429 வருடங்கள். சுமார் ஆறு கோடியேமுப்பது வருடங்கள் வரை காலண்டர் செல்கிறது. இப்போது 21-12-2012யை ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.அந்த நாளன்று தான் இவர்கள் கணக்குப்படி 13 பக்டோன்கள் முடிந்து 14 வது பக்டோன் ஆரம்பம் ஆகிறது. அதாவது 1,44,000 ஆண்டுகள் முடிந்து அடுத்த 14வது பக்டூனுக்கு செல்லுகிறது. இந்த பக்டூன் முடிய 7200 ஆண்டுகள் தேவை. இது முடிந்து 15 வது பக்டூனுக்குச் செல்லும். 20 பக்டூன் வரை இந்த நீண்ட காலண்டர் சென்று பிக்டூன் வரை செல்லும். அது ஒரு குறியீடு ஆகும்.இப்பொழுது என்ன பிரச்சினை? மாயன் கலச்சாரப்படி 13வது பக்டூன் முடியும் பொழுது அதாவது 21-12-2012ல் கடவுளின் மூன்று படைப்பு முழுமை அடைந்து நான்காவது உலகம் படைக்கப்படுவதாக நம்புகின்றனர். எனவே இந்த பழமைக்கருத்தைப் பயன்படுத்திக்கொண்டு 21-12-2012ல் உலகம் அழிந்துவிடும் என்று கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர். டிசம்பர் 21 அன்று விண்கற்கள் கொட்டும் என்றும், தீப்பிளம்புகள் பூமியைத்தாக்கும் என்றும் எரிமலை வெடிப்புகள், ராட்சத சுனாமிகள் ஆகியன பூமியில் உருவாகி மனித இனமே பூண்டோடு அழிந்துவிடும் என்றும், சூரியக்குடும்பம், பால்வெளி மண்டலம், பிற கேலக்ஸிகள், அழிந்துவிடும் என்றும் மக்களைப் பயமுறுத்தி வருகின்றனர்.

மேற்கூறிய எதுவும் மாயன் கலாச்சார நம்பிக்கைகளில் இல்லை. நமது நவீன அறிவியல் தொழில்நுட்ப அறிவிலிகளால் பரப்பப்படும் வதந்திகள். அறிவியல் ரீதியாக எதுவுமே நடக்கப்போவதில்லை. உலகம் அழிவதற்கான வாய்ப்பு என்பது எப்பொழுதுமே குறைவுதான். அதாவது நமது பூமி, சூரியன் எரிந்து அழியும் தறுவாயில் நிச்சயமாக அழிந்துவிடும். அது நடப்பதற்கு சுமார் 450 கோடி வருடங்கள் உள்ளது. இதற்கிடையில் விண்கற்களால் பூமி அழிந்து போக பத்து லட்சத்தில் ஒரு பங்கும் எரிமலை பெரு வெடிப்பால் 50,000த்தில் ஒரு பங்கும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் உலகம் அழிந்து போவதற்கு 19 சதவீத வாய்ப்பு இருப்பதாக சில குழுவினர் கூறுகின்றனர்.மேலும் நமது பூமியின் அமைப்புப்படி பனிக்காலம் வரும் சுற்று நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்றும் 20000 வருடத்தில் அது மீண்டும் வரும் எனக்கணக்கிட்டு உள்ளனர். அந்த சவாலையும் நாம் நமது அறிவியல் தொழில் நுட்ப சாதனைகளால் முறியடிக்க முடியும். ஆனால் நமது பூமியில் நடைபெறும் பேராசை கொண்ட முதலாளித்துவ உற்பத்தி முறைகளினாலும் மனிதனின் பகாசூர நுகர்வு என்ற சுய நல நடவடிக்கைகளாலும் பூமி அழிவதற்கு வாய்ப்புக்கள் பெருகிக்கொண்டே போகிறது. 
உலக வெப்பமயமாதல். அணு யுத்தத் தயாரிப்பு, கிருமி யுத்தத் தயாரிப்பு, புது விதமான எயிட்° போன்ற நோய்க் கிருமிகள் உருவாதல் ஆகியன மனித குலத்தை அழிப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த மனித நடவடிக்கைகளைக் குறைப்பது, தடுப்பது எப்படி என்பதே நமது சிந்தனையாகவும் செயல்பாடாகவும் இருக்க வேண்டும். 
இதை அறிவியல் இயக்க ஆர்வலர்கள் கவனத்தில் கொண்டு கட்டுக்கதைகளை முறியடித்து அறிவியல் பிரச்சாரத்தை மேற்கொள்ளுங்கள். நமது பூமியை மனித குல அபாயகரமான நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்ற மக்களைத் திரட்டுங்கள்.

உலகம் அழிந்துவிடும்... குறித்த தகவல்கள்

2012 டிசமர் 21ல் உலகம் அழிந்துவிடும் என கட்டுக்கதைகள் பரப்ப்ப்பட்டு வருகிறது.இதற்கு எதிராக வலுவான பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.  

நாசாவின் வினா விடை விளக்க குறிப்புகள் :

இதற்கு உதவிய நண்பர் சி.வெங்கடேசன்,பார்த்தசாரதி மற்றும் இதை உடனடியாக மொழிபெயர்த்துக் கொடுத்த திருமிகு எல்.பிரபாகரன்,பாவலர் பொன்கருப்பையா ஆகியோருக்கு நன்றி. 

1)நிறைய ஊடகங்கள் 2012 டிச.21-ல் உலகம் அழியும் என்கின்றனவே.அப்படி ஏதேனும் அபாயம் உள்ளதா?
நமது பூமி 4பில்லியன் வருடங்களாக அருமையாக இயங்கி வருகிறது.உலகமுழுதும் உள்ள அறிவியல் அறிஞர்களுக்கு 2012-ல் எந்தவிதமான அபாயமுமில்லை என்று தெரியும்.

2)2012-ல் உலகம் அழியும் என்ற கருத்தின் மூலம் என்ன?
சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நிபிரு என்ற கிரகம் பூமியை நோக்கி நகருவதாக கிளப்பப்பட்ட கதையிலுருந்து துவங்கியதுதான் இது. முதலில் இது 2003 ல்  நிகழும் என்றார்கள்.பின்னர் அப்போது எதுவும் நடக்கவில்லை என்றதும் 2012க்கு அதை நகர்த்தி மாயன் நாட்காட்டியின் முடிவோடு தொடர்பு படுத்திவிட்டார்கள்.மாயன் நாட்காட்டி 21.12.2012ல் முடிவதால் அவர்கள் 21.12.2012 அன்று உலகின் இறுதி நாள் என்கிறார்கள்.

3) மாயன் நாட்காட்டி டிச.2012ல் முடிகிறதா?
நீங்கள் உங்கள் வீட்டு சமையலரையில் மாட்டியுள்ள நாட்காட்டி எப்படி டிச.31னுடன் முடிவடையாதோ அதே போல் மாயன் நாட்காட்டியும் 21.12.2012 டன்  முடிந்துவிடாது.இந்த நாள் மாயன் நாட்காட்டியின் ஒரு நீண்டகால அளவைக் குறிக்கிறது.ஆனால் நம்முடைய நாட்காட்டி எப்படி ஜனவரி 1ல் மீண்டும் துவங்குகிறதோ அதேபோல் அவர்களுடைய வருடமும்(நீண்ட கால அளவைக்கொண்டது) துவங்கிவிடும்.


4. நாசா டிசம்பர் 23 முதல் 25வரை ஒரு முழு இருள் சூழும் என்பதை அனுமானிக்கிறதா.? 
நிச்சயமாக இல்லை. நாசா மட்டுமல்ல வேறு எந்த அறிவியல் நிறுவனமும் அதை எதிர்நோக்கவில்லை.இதுபற்றிய தவறான கருத்துக்களை பரப்புவோர் நமது அண்டத்தில் ஒருவித ஒழுங்கமைப்பு ஏற்படுவதின் காரணமாக இந்த இருள் நேரப்போவதாக கூறுகிறார்கள். இந்த வதந்திகளை பரப்புவோர் நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன் தீவிர தயாரிப்போடு இருக்கச் சொன்னதாக கூறுகிறார்கள். இது தவறு.அவர் கூறியது பொதுவான தயார்நிலை பற்றியது. அதில் இந்த இருள் சூழல் பற்றி ஒருபோதும் தெரிவிக்கவில்லை.

5. கோள்களின் ஒழுங்கமைப்பு என்பது பூமியை தாக்க்கும் வகையில் அமையுமா?
அடுத்த சில பத்தாண்டுகளுக்கு கோள்களின் ஒழுங்கமைப்பு என்பது நிகழாது. அப்படி நிகழ்ந்தாலும் பூமியின்மேல் அதன் தாக்கம் என்பது அர்ப்பமாகத்தான் இருக்கும். இதுபோன்ற கோள்களின் ஒழுங்கமைப்பு 1962ல் ஒரு முறையும்,1982,2000 ஆகிய ஆண்டுகளில் இருமுறையும் ஏற்பட்டது.ஒவ்வொரு டிசம்பரின் போதும் பூமியும் சூரியனும் பால்வெளி மண்டலத்தின் மையத்துடன் நேர்கோட்டில் வருவதுண்டு. ஆனால் அது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு நிகழ்வாகும்.

6. நிபுரு அல்லது கோள் எக்ஸ் அல்லது ஏரிஸ் என்னும் கோள்கள் இருக்கிறதா ? அவை பூமியை நோக்கிவந்து அழிவை ஏற்படுத்த வாய்ப்புக்கள் உள்ளதா?
நிபுரு மற்றும் பிற கோள்களைப்பற்றிய கதைகள் அனைத்தும் ஒரு இணையதள ஏமாற்று. இந்த கூற்றுகளுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இந்த நிபுரு மற்றும் கோள் எக்ஸ் ஆகியவை உண்மையாக இருந்து அவை புவியை 2012ல் தாக்கவரும் என்கிற பட்சத்தில், நமது வானவியலாளர்கள் குறைந்தது கடந்த 10 ஆண்டுகளில் அவற்றை அறிந்திருப்பார்கள்.மேலும் அது சாதாரண கண்களுக்கு தெரியும் நிலையில் வந்திருக்கும் . ஆகையால் அது உண்மையானதாக இருக்க முடியாது. ஏரிஸ் என்பது  புளுட்டோவைப் போன்ற ஒரு குள்ளக்கிரகம். இது சூரிய குடும்பத்திற்கு வெளியில்தான் இருக்கும். அது பூமியை அதிகபட்சமாக 4 பில்லியன் கி.மீ தூரம் வரைதான் நெருங்கமுடியும்.

7. துருவ மாற்றக்கருத்துக்கொள்கை என்பது என்ன? பூமி இன்னும் சில நாட்களில் அல்லது மணிகளில் 180டிகிரி சுழற்சிக்கு உட்படும் என்பது உண்மையா?
பூமியின் சுழற்சியில் மாற்றம் என்பது நடக்க இயலாது.சில கண்டங்களில் சிறு நகர்வு ஏற்படலாம்.( உதாரணத்திற்கு அண்டார்டிகா நூற்றுக்கனக்கான பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்தது )ஆனால் அது துருவ சுழற்சி மாற்ற விசைகளுக்கு தொடர்புடையது எனும் கருத்து ஏற்புடையது அல்ல.
பெரும்பாலான அழிவுகுறித்த இணையதளங்கள் எப்படியோ வலைவிரித்து மக்களை முட்டாள் ஆக்குகின்றன. அவர்கள் பூமியின் காந்த துருவ சக்தியையும், சுழற்சியையும்(சீரற்ற முறையில்) சராசரியாக 4லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காந்த ஈர்ப்பு மாறுதல்களை ஒப்பிட்டு பேசுகிறார்கள். நமக்கு தெரிந்த வகையில் காந்த ஈர்ப்பு மாறுதல்கள் புவிக்கு எவ்வித கெடுதல்களையும் செய்யவில்லை. விஞ்ஞானிகள் அடுத்த சில மில்லியன் ஆண்டுகளில் இந்த காந்த ஈர்ப்பு மாற்றம் நிகழ வாய்ப்பில்லை என்கிறார்கள்.

8. 2012ல் புவி விண்கற்களால் தாக்கப்படும் ஆபத்து உள்ளதா?
பூமி எப்போதும் சிற்சில எரிவிண்மீன்களாலும்,விண்கற்களாலும் தாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.ஆனால் பெரிய அளவில் தாக்குவது என்பது மிகமிக அரிதானது.இதற்கு முன்னர் நடந்த பெரிய தாக்குதல் என்பது 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக நடந்துள்ளது.அதில்தான் டைனோசர் போன்ற அரிய விலங்குகள் அழிவைச் சந்தித்தன.
இன்று நாசா விண்வெளி ஆய்வாளர்கள் பூவியைத்தாக்கக்கூடிய பெரிய விண்கற்களை முன்கூட்டியே அரிய அண்டவெளி பாதுகாப்பு ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். நாம் ஏற்கனவே டைனோசர்களை அழித்தது போன்ற பெரிய விண்கற்களின் தாக்குதல்கள் ஏதுமில்லை என தீர்மானித்துவிட்டோம்.
இதுபற்றி புவி அருகு பொருள்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொருநாளும் நாசாவின் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது.எனவே 2012ல் புவியை எந்தப்பொருளும் தாக்கப்போவதில்லை என்பதை நாமே அறிந்துகொள்ளலாம்.

9. உலகம் 2012ல் முடிவுக்கு வருகிறது என்ற கூற்றினை நாசா எவ்வாறு பார்க்கிறது?
2012 ல் நடைபெறப்போவதாய் கூறப்படும் அழிவு மற்றும் கற்பனையான மாற்றங்களில் அறிவியல் எங்கே இருக்கிறது? ஆதாரங்கள் எங்கே இருக்கிறது? ஒன்றுமில்லை. இந்த கற்பனையான கூற்றுகள் புத்தகங்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் இணையதளங்களின் மூலம் சொல்லப்பட்டாலும் அவற்றை நாம் ஏற்கமுடியாது. டிசம்பர் 2012ல் நடைபெறப்போவதாக கூறப்படும் அசாதாரண நிகழ்வுகளுக்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஏதுமில்லை.

10. 2012ல் பெரும் சூரிய புயல் ஏற்படும் அபாயம் எதிர்பார்க்கப்படுகிறதா?
சூரியப்புயல் என்பது சுமார் 11ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வழக்கமான ஒன்றுதான். இந்த நடவடிக்கையின் உச்சத்தில் ஏற்படும் வெப்பம் செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளில் சிறு சிறு இடையூறுகளை விளைவிக்கலாம். ஆனால் நமது தொழில்நுட்ப வல்லுநர்கள் அதற்குமான காப்பு நடவடிக்கைகளை அரிய முனைந்துள்ளனர். எனவே 2012 டிசம்பரில் புவிக்கு எந்த குறிப்பிடத்தக்க பாதிப்பும் இல்லை.