முதல் பக்கம்

Jan 12, 2013

உலகம் அழியும் என்ற வதந்தி குறித்து அறிவியல் இயக்கம் கூறுவது என்ன?

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். டிசம்பரில் உலகம் அழியுமென்று? 12-12-12 தேதியைச் சிலரும், 21-12-2012 யைச் சிலரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இப்பொழுது மட்டுமல்லாமல் உலகம் அழியும் என்று சில ஆண்டுகளுக்கு ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். நா°டர்டாம் என்பவர் இதில் பெரிய வல்லுநர் எனச்சொல்லி அவருடைய கணிப்பை அடிக்கடி சொல்லுவார்கள். அவருடைய கணிப்புகள் அனைத்தும் பொடீநுயாகிப்போயின. சமீபத்தில் இப்பொழுது நா°டர்டாம் காணாமல் போய் விட்டார். அதே போல் 2000மாவது ஆண்டில் அழிந்து விடுமெனவும் சொன்னார்கள். அதுவும் நடக்கவில்லை எதை வைத்துக்கொண்டு டிசம்பரில் அழியும் என்கிறார்கள்.? தென் அமெரிக்க நாட்டில் தற்போதைய கௌதமாலா நாட்டின் பழமையான மாயன் கலாச்சாரம் இருந்த போது மாயன் காலண்டர் வடிவமைக்கப்பட்டதாக சொல்லுகிறார்கள். அதனை அடிப்படையாக வைத்து உலகம் அழியும் என்கிறார்கள். மாயன் காலண்டர் என்பது என்ன?

நாம் கூறப்போகும் மாயன் காலண்டர் என்பது கி.மு.முதலாம் நூற்றாண்டு காலத்திற்குப்பின் உருவாக்கப்பட்டது. மாயன் கலாச்சாரம் என்பது கொலம்பிய நாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள மத்திய அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது ஆகும். தற்பொழுது கௌதமாலா நாட்டை மையப்படுத்தியதாகக் கூறலாம். மாயன் காலண்டர் பல காலங்களில் பல வகைகள் இருந்திருக்கின்றன.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது 260 நாட்கள் கொண்ட ஸோல்கின் காலண்டர், 365 நாட்கள் கொண்ட காப் (ழயயb) காலண்டர். முதலாவது வகை கிமு முதலாம் நூற்றாண்டிலும், இரண்டாவது வகை கிமு ஐந்தாம் நூற்றாண்டிலும் உருவாக்கப்பட்டது. வருடத்திற்கு 260 நாட்கள் கொண்ட ஸொல்கின் காலண்டர் 20 பருவங்கள் கொண்டு ஒவ்வொரு பருவத்திற்கும் 13 நாட்கள் கொண்டது. 365 நாட்கள் கொண்ட காப் காலண்டரில் 18 மாதங்களும் ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் கொண்டிருக்கும். ஆக மொத்தம் 360 நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் சமமாகவும் கடைசி 5நாட்கள் வருடத்தின் இறுதிப்பகுதியில் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளது.

இந்த இரண்டு காலண்டர்களும் ஒவ்வொரு 52 வருடத்திற்குஒரு முறை ஒரே குறிப்பிட்ட தேதியைக் கொண்டிருக்கும். அந்தத் தேதியை ஒரு காலண்டர் சுற்று என்கின்றனர். இதே போல் தான் காப் காலண்டரில் நாட்கள், நீண்ட கணக்குக் காலம் (டடிபே ஊடிரவே ஞநசiடின), நீண்ட கணக்கு அலகு (டுடிபே ஊடிரவே ருnவை) என மூன்று பிரிவுகள் உள்ளன. அதை நமது சூரிய வருடத்திற்கேற்ப ஒப்பீட்டுப் பார்க்கலாம். ஒரு நாளை நீண்ட கணக்கு அலகுப்படி ஒரு கின் என்கிறார்கள். 20 நாளை ஒரு வினல் என்றும் குறிப்பிடுகிறார்கள். 18 வினல்களை, 360 நாட்கள் கொண்டதை, ஒரு டுன் என்றும் (ஒரு வருடம்) 20 டுன்கள் ஒரு காட்டூன் (7200 ஆண்டுகள்) என்றும், 20 காட்டூன் ஒரு பக்டூன் (1,44,000 ஆண்டுகள்) ,20 பக்டூண்கள் ஒரு பிக்டூன்கள் (2,880, 000 ஆண்டுகள்) என்றும் இருபது இருபதாகப் பெருக்கிகொண்டே சென்று 23,040,000,000 ஆண்டுகள் கொணட அலடூன் வரை சென்றுள்ளானர். அதாவது நமது காலண்டர்படி 6,30,81,429 வருடங்கள். சுமார் ஆறு கோடியேமுப்பது வருடங்கள் வரை காலண்டர் செல்கிறது. இப்போது 21-12-2012யை ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.அந்த நாளன்று தான் இவர்கள் கணக்குப்படி 13 பக்டோன்கள் முடிந்து 14 வது பக்டோன் ஆரம்பம் ஆகிறது. அதாவது 1,44,000 ஆண்டுகள் முடிந்து அடுத்த 14வது பக்டூனுக்கு செல்லுகிறது. இந்த பக்டூன் முடிய 7200 ஆண்டுகள் தேவை. இது முடிந்து 15 வது பக்டூனுக்குச் செல்லும். 20 பக்டூன் வரை இந்த நீண்ட காலண்டர் சென்று பிக்டூன் வரை செல்லும். அது ஒரு குறியீடு ஆகும்.இப்பொழுது என்ன பிரச்சினை? மாயன் கலச்சாரப்படி 13வது பக்டூன் முடியும் பொழுது அதாவது 21-12-2012ல் கடவுளின் மூன்று படைப்பு முழுமை அடைந்து நான்காவது உலகம் படைக்கப்படுவதாக நம்புகின்றனர். எனவே இந்த பழமைக்கருத்தைப் பயன்படுத்திக்கொண்டு 21-12-2012ல் உலகம் அழிந்துவிடும் என்று கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர். டிசம்பர் 21 அன்று விண்கற்கள் கொட்டும் என்றும், தீப்பிளம்புகள் பூமியைத்தாக்கும் என்றும் எரிமலை வெடிப்புகள், ராட்சத சுனாமிகள் ஆகியன பூமியில் உருவாகி மனித இனமே பூண்டோடு அழிந்துவிடும் என்றும், சூரியக்குடும்பம், பால்வெளி மண்டலம், பிற கேலக்ஸிகள், அழிந்துவிடும் என்றும் மக்களைப் பயமுறுத்தி வருகின்றனர்.

மேற்கூறிய எதுவும் மாயன் கலாச்சார நம்பிக்கைகளில் இல்லை. நமது நவீன அறிவியல் தொழில்நுட்ப அறிவிலிகளால் பரப்பப்படும் வதந்திகள். அறிவியல் ரீதியாக எதுவுமே நடக்கப்போவதில்லை. உலகம் அழிவதற்கான வாய்ப்பு என்பது எப்பொழுதுமே குறைவுதான். அதாவது நமது பூமி, சூரியன் எரிந்து அழியும் தறுவாயில் நிச்சயமாக அழிந்துவிடும். அது நடப்பதற்கு சுமார் 450 கோடி வருடங்கள் உள்ளது. இதற்கிடையில் விண்கற்களால் பூமி அழிந்து போக பத்து லட்சத்தில் ஒரு பங்கும் எரிமலை பெரு வெடிப்பால் 50,000த்தில் ஒரு பங்கும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் உலகம் அழிந்து போவதற்கு 19 சதவீத வாய்ப்பு இருப்பதாக சில குழுவினர் கூறுகின்றனர்.மேலும் நமது பூமியின் அமைப்புப்படி பனிக்காலம் வரும் சுற்று நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்றும் 20000 வருடத்தில் அது மீண்டும் வரும் எனக்கணக்கிட்டு உள்ளனர். அந்த சவாலையும் நாம் நமது அறிவியல் தொழில் நுட்ப சாதனைகளால் முறியடிக்க முடியும். ஆனால் நமது பூமியில் நடைபெறும் பேராசை கொண்ட முதலாளித்துவ உற்பத்தி முறைகளினாலும் மனிதனின் பகாசூர நுகர்வு என்ற சுய நல நடவடிக்கைகளாலும் பூமி அழிவதற்கு வாய்ப்புக்கள் பெருகிக்கொண்டே போகிறது. 
உலக வெப்பமயமாதல். அணு யுத்தத் தயாரிப்பு, கிருமி யுத்தத் தயாரிப்பு, புது விதமான எயிட்° போன்ற நோய்க் கிருமிகள் உருவாதல் ஆகியன மனித குலத்தை அழிப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த மனித நடவடிக்கைகளைக் குறைப்பது, தடுப்பது எப்படி என்பதே நமது சிந்தனையாகவும் செயல்பாடாகவும் இருக்க வேண்டும். 
இதை அறிவியல் இயக்க ஆர்வலர்கள் கவனத்தில் கொண்டு கட்டுக்கதைகளை முறியடித்து அறிவியல் பிரச்சாரத்தை மேற்கொள்ளுங்கள். நமது பூமியை மனித குல அபாயகரமான நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்ற மக்களைத் திரட்டுங்கள்.

No comments:

Post a Comment