முதல் பக்கம்

Aug 23, 2012

மணங்களின். ராணி.. ஏலம்..

ஏல டீ..வேண்டுமா? ஏலம் போட வேண்டுமா?

ஏலக்காய் டீ!..இனிய அற்புதமான மாலை வேளை.. லேசாக மழை தூறிக் கொண்டு இருக்கிறது. குளிர் தென்றல் நம் உடலைத் தீண்ட தீண்ட. மனம் சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகிறது. அட இந்த நேரத்தில் சூடா ஒரு கப் டீ இருந்தா இன்னும் கொஞ்சம் சூப்பரா இருக்குமே. ! மனம் லேசா இதை எண்ணி அசைபோடும். இது வீட்டில் என்றால், அக்கா சூப்பரா ஒரு ஏலக்கா டீ போடேன்.! இந்த குளிருக்கு இதமா இருக்கும். ஆர்டர் பறக்கும். ஒனக்கு வேற வேலையே இல்லடா என்று சொல்லிக்கொண்டே அந்த அருமைத் தமக்கை தம்பிக்கு, சொன்ன வாய் மூடுமுன்னே, அவனுக்குப் பிடித்த ஏலம் கமகமக்கும் டீத்தண்ணி யுடன் நிற்பார். அந்த டீயை அனுபவித்து குடித்திருக்கிறீர்கள ? அட அட எப்படி இருக்கும்கிர்றிங்க ,. சூப்பர்பா !ஏலக்காய் டீ நன்றாகவே இருக்கும். ! இதெல்லாம் நெசந்தான். ஏலக்காயின் மகிமை அப்படி!.ஏலக்காய் மணம் நம்மை கிறங்க அடிக்கும் நண்பா! ரெண்டு ஏலக்காய் விதையை வாயில் போட்டு சுவைத்து இருக்கிறீர்களா..? அனுபவித்து பாருங்கள் நண்பரே..! அதுவும் சாப்பிட்டு முடித்ததும் ரெண்டு ஏல விதையை வாயில் போட்டு மென்று பாருங்களேன் அட..அட அந்த ஆனந்தமே தனிதான்.

மணங்களின் .. ராணி..!

ஏல விதைக்குஅதன் சொக்கவைக்கும் மணத்தை முன்னிட்டு, அதற்கு, " சொர்க்கத்தின் தானியம் / சொர்க்கத்தின் வாசனைப்பொருள் " என்ற புனை பெயர் ஒன்றும் உண்டு. ரொம்ப பொருத்தமான பெயர்தான். ஏலம் வாசனைகளின் ராணி எனவும் மதிப்புடன் அழைக்கப்படுகிறது. அதன் வாசனையும் சுவையுமே அலாதியானது. ஏலத்தின் மணத்தை மிஞ்ச,இந்த உலகில் வேறு மணமே கிடையாது நண்பா !. அதனால்தான் அனைத்து இனிப்பு வகை உணவிலும், ஏலம் கலக்கப்படுகிறது. ஒரு பொருளில் ஏலத்தைக் கலந்தாலே அதன் வாசனையே அப்படியே அலாக்காக ஆளைத் தூக்கிவிடும். பொதுவாக, ஏலம் இல்லாத இனிப்பு வகையே இல்லை எனலாம். . உலகிலேயே விலை உயர்ந்த வாசனைப் பொருள்களில் குங்குமப்பூவிற்கு அடுத்தபடியாக கருதப் படுவது வாசனை ராணியான ஏலக்காய்தான். விலைதான் குங்கும்ப்பூவை விட குறைவே தவிர மணத்தில் குங்குமப்பூவை தூக்கி சாப்பிட்டு விடுவார் ஏலம்.


பழம் பெருமை பேசும் ஏலம்.!


உலகின் மிகப் பழமையான வாசனைப் பொருள்களில் ஒன்று ஏலம். இதன் வயதைக் கேட்டால் மயக்கம் போட்டுவிடுவோம்.. வரலாற்றைத் தோண்டிப் பார்த்தால்,இதன் சரித்திரம் சுமார் 5,000௦௦௦ ஆண்டுகளைக் கடந்தது..ஏலத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் ஆதி கால வரலாறுடன் தொடர்புடையது. அன்று இருந்த ஏராளமான் வாசனைப் பொருட்களில், வாசனையுடன் மருத்துவ குணத்திலும், சமையல் பயன்பாட்டிலும், உடலுக்குப் பயன்படுத்தும் நறுமண தைலங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது. இதன் மதிப்பும் மரியாதையும் அதிகமோ அதிகம்தான். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய சரித்திரத்தில், அதன் பாப்பிரஸ் மரப்பட்டைகளில் ஏலம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அது எப்பர்ஸ் பாப்பிரசில் (Ebers Papyrus) குறித்து வைக்கப்பட்டுள்ளது. அதுதான் எகிப்தியர்களின் மருத்துவம் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துள்ள தகவல் களஞ்சியம். எகிப்திய பதிவுகளில் பழமையானதும், முக்கியமான மருத்துவக் குறிப்புகள் அடங்கியுள்ளதும் இதுதான். ஏற்கனவே சுமார் 5000 ஆண்டுகுகளுக்கு முற்பட்ட தகவல்களை எடுத்து மீண்டும் இந்த பாப்பிரஸ் பட்டையில் ஹீராடிக் எழுத்தில் எழுதியுள்ளார்கள் , இந்த பாப்பிரஸ் சுருள் 110 பக்கங்கள் கொண்டது. 20 மீட்டர் நீளம் உள்ளது.இதில் சுமார் 700 அற்புதமான மருத்துவக் குறிப்புகள் எழுதி வைக்கப் பட்டுள்ளன. ஏலத்தை அன்று எகிப்தியர்கள் நறுமணப் பொருளாக பயன்படுத்தியதுடன், உடல் வலி போக்கும் மருந்தாகவும், மம்மிகளைப் பதப்படுத்தும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகவும்,, மதரீதியான சடங்குகளுக்கும் ஏலத்தை அதிகம் பயன் படுத்தினர்.

நாட்டுக்குள் வந்த காட்டு ராணி ஏலம்..!

ஏலம் முதலில் காட்டு செடியாகவே இருந்தது. ஏலத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் ஆதி கால வரலாறுடன் தொடர்புடையது.ஏலத்தின் தாயகம் கேரளத்தின் மலைப்பாங்கான பூமிதான் என்று சொல்லப் பட்டாலும் கூட, சுமார், 5 ,000 ஆண்டுகளுக்கு முன்பே இதனை, பெர்சியா, மெசபடோமியா, சீன போன்ற நாடுகளில், இதன் மருத்துவ குணத்துக்காகவும் , சமையலிலும், அதைவிட முக்கியமாக, கடவுள் தொடர்பான சடங்குகளிலும் ஏலத்தைப் பயன்படுத்தினர். கி.மு, 721 ல் பாபிலோனிய அரசனின் தோட்டத்தில், ஏலம் வளர்க்கப் பட்டதாம்.மேலும் கி.பி 176 -180 ல் பேரரசர் அலெக்சாண்டரின் வரிப் பட்டியலில், வாசனைப் பொருளான ஏலத்தின் பெயரும் காணப் பட்டதாம். மத்திய தரைக் கடல் வழியே பயணம் செய்த வணிகர்கள், மணம் மிகுந்த மனதைக் கொள்ளையிடும் ஏலத்தை கான்ஸ்டாண்டி நோபிளிருந்து ஸ்காண்டிநேவியாவுக்கு கொண்டு வந்தனர். இன்றும் கூட அங்கு இதன் பெருமை குன்றாமல் இருக்கிறது. இன்றும் கூட இங்கு பாஸ்திரி, கறி உருண்டை மற்றும் ஒயினில் மணமிக்க ஏலத்தை கலக்கின்றனர்.அனைத்துப் பொருள்களிளும் ஏலக் கலப்புதான். அங்கே ஏலத்தை வாயில் போட்டு சுவைப்பதன் மூலம் வாயின் துர்நாற்றம் போக்கவும், பல்லின் வெண்மைக்கும் இன்றும் ஏலம் பயன்படுகிறது.கிரேக்கர்களும், ரோமானியர்களும் அன்று ஏலத்தை நறுமணத் தைலங்களிலும், களிம்புகளிலும்,வாசனை எண்ணெய்களிலும்,பயன்படுத்தினர். ரோமானியர்கள் மேலும் இதனை உடலின் மணப்பொருள் தயாரிக்கும்போதும், வாயின் கெட்ட வாசனை போகவும், அதைவிட முக்கியமாக, உடலுறவைத் தூண்டும் மருந்தாகவும் பயன்படுத்தினர்.


இந்தியாவின் ஏலம்.!


ஏலம் கடந்த 2000 ஆண்டுகளாக, இந்திய வணிகர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்பும் கூட இதனை பற்றி இந்திய வரலாற்றில் பதிவு உள்ளது. கி.மு 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே, ஏலத்தை இந்தியர்கள் சமையல், வாசனைப் பொருள் மற்றும் மருத்துவத்தில் பயன் படுத்தினர் என்ற குறிப்பு காணப்படுகிறது.இந்தியாவில் 11 ம் நூற்றாண்டிலிருந்து எல்லம் நடமாடுகிறத். அப்பொது பஞ்சமுக தாம்பூலத்தில், எலக்காயின்பட்டியல் உள்ளது.ஏலத்தின் தாயகம், தென்னிந்தியாவின், மேற்குத்தொடர்ச்சி மலையின் அடர்ந்த பசுமை வளம் கொழிக்கும் மழைக்காடுகள் நிறைந்த கேரளம்தான். இதைதவிர, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இது காணப்படுகிறது.ஏலம் இந்தியாவிலும், மலேசியாவிலும் அக்டோபர் மாதம் ஏலம் அறுவடை செய்யப்படுகிறது.பின்னர் அந்த காய் முழுவதையும் சூரிய ஒளியில் வைத்தே வெயிலில் காயப்போட்டு உலர்த் துவார். அதன் நிறத்துக்கு ஏற்றாப்போல தெரிவு செய்யப்பட்டு அதன் மணம் அறிவிக்கின்றனர். இந்த ஏலத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பச்சை ஏலம். அடுத்து கருப்பு ஏலம். அவை பச்சை நிறத்தில இருந்து கருஞ்சிவப்பு /வெள்ளை கூட இருக்கிறது. ஏலத்தின் விதை பச்சை வண்ணத்திலிருந்து, மஞ்சள், சாம்பல் வரை. இருக்கும்


ஏலத்தின் மணம் முழுவதும், ஏல விதைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனை உடைத்து பொடி செய்துவிட்டால் மணம் காலப்போக்கில் குறைந்து போகும். ஏலத்தின் அருமையான மணம் மனித மனங்களை,சுண்டி இழுக்கிறது.ஏலத்தை உலர்த்திய பிறகுதான் முழு மணமும் கிடைக்கிறது. ,தென்னிந்தியாவின் அடர்ந்த மழைக்காடுகளில் ஏலம் உருவானது என்றும் சொல்லப்படுகிறது. பின்னர் அது இன்று இலங்கை, கவுதமாலா ,இந்தோ-சீன மற்றும் டான்செனியா விலும் பயிரிடப்படுகிறது . இந்தியாவில்தான் ஏராளமான ஏலம் விளைந்தாலும், இங்கிருந்து குறைவாகவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. காரணம் தனக்கு மிஞ்சி தானே தான தர்மம். அதன் விளைவுதான். நாமே எல்லாவற்றையும் பயன்படுத்திவிடுகிறோம். உலகிலேயே அதிகம் ஏலம் ஏற்றுமதி செய்யும் நாடு கவுதமாலாதான்.ஆனால் இங்கே சுமார் 100 ஆண்டுக்கு முன்னர்தான் ஏலம் அறிமுகமாயிற்று.


பெயர் சூடும் சூடாமணி..!


ஏலத்திற்கு கார்டமன் (Cardamon)என்ற பெயர் பெர்சிய விலிருந்து வந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.இந்த புதிய பெயரான ஏலேட்டரிய என்பது தெற்காசிய நாவிலிருந்து பிறந்திருக்க வேண்டும். இந்தி, பஞ்சாபி யிலும் இது எலாச்சிதான்.இதன் பொருள் பச்சை ஏலம் என்பதே. ஆனால் சில மொழிகளில்கருப்பு ஏலம் என்றும் போருல்படியாகவும் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதனை ஏலா/எல்லாகா என்கின்றனர். எல்லாம் திராவிடிய மொழியிலிருந்து வந்துள்ளது. ஆனால் ஏலம் என்பது முடிவாக தமிழ் எல்லை என்பத தெரிகிறது. தமிழ் மலையாளம், கன்னடம், இது ஏலக்காய் தான் தெலுங்கில் மட்டும் இதன் பெயர் ஏலகுலு .


வேதத்திலும்..கிரேக்கத்திலும்.. ஏலம்.!.

ஆதிகால வேத புத்தகத்திலும் ஏலத்தை பற்றி எழுதி வைத்துள்ளனர் முதலாம் , இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சரகர் மற்றும் சுஸ்ருதா என்ற இந்திய மருத்துவர்கள், பல நோய்களை குணப்படுத்த ஏலக்காயை பயன்படுத்தியாதாக குறிப்பிட்டு உள்ளனர். ..கிரேக்க மருத்துவத்தில், கி.மு 5 ம் நூற்றாண்டில், ஏலம் பற்றிய தகவல்கள் காணப் படுகின்றன. அரிஸ்டாட்டிலுக்குப் பின் வாழ்ந்த தியோபிரஸ்டேட்ஸ் என்ற கிரேக்க மருத்துவ அறிஞன் கி.மு 4 ம் நூற்றாண்டில் ஏலம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.அது மட்டுமல்ல. அதே கால கட்டத்தில், இந்திய ஆயுர்வேத மருத்துவத்திலும், கிரேக்க, ரோமானிய நிபுணர்களும், ஏலக்காய் இந்தியாவிலிருந்து வந்தது என்றும் குறிப்பிட்டு அதன் மருத்துவ குணங்களையும் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் ஏலத்தை வாயில் போட்டு மென்று அதன் மணத்தையும், சுவையையும் அனுபவித்தனராம்.


ஏலத்தின்.. மணத்தில்..சொக்கிய,, உலகப் பேரழகி..!

போருக்கு வந்து நாட்டைக் கையகப்படுத்த வந்த மாவீரன் அலெக்சாண்டரின் போர்வீரர்கள், இங்கு இந்தியாவில் தங்கி இருந்தபோது இலக்காயால் ஈர்க்கப்பட்டனர். அதன் மணத்தில் மயங்கிய போர் வீரர்கள், மறக்காம ல் , தங்கள் ஊருக்குத் திரும்புமோது, கி.மு 325 ல் இந்தியாவிலிருந்து அப்படியே ஏலக்காயையும்,ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றனாராம். அப்படிப்பட்ட பெருமை உடையது ஏலம். கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஏலத்தை மருந்தாக மட்டுமின்றி, வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தினர். ஒரு சுவையான செய்தி ! கி.மு. 27 ம ஆண்டுகளில் வாழ்ந்த ,கிரேக்க சாம்ராஜ்யத்தின் உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கு ஏல மணத்தின் மீது கொள்ளைப் பிரியமாம். கிளியோபாட்ரா தான் குளிக்கும் நீரில் ஏலத்தை அரைத்து கலக்கச் சொல்லியே குளிப்பாராம். . அதன் வாசனையில் அவள் கிறங்கிப் போவாராம். அது மட்டுமா ? தன் காதலன் மார்க் ஆண்டனியின் வருகையை எதிர்பார்க்கும்போதேல்லாம், தனது அரண்மனையை, உண்மையிலேயே, நெஞ்சை சொக்க வைக்கும் ஏலத்தின்புகை மணத்தில் மூழ்க வைப்பாராம். எப்போதும் அவரை சுற்றி ஏலத்தின் மணம் கமழுமாம்.


பைபிளிலும் ... சொர்க்கத்தின்.. மகனுக்கும்.. ஏலம்...!.

இங்கிலாந்து நாட்டினருக்கு நார்வேனியர் மூலம்தான், கி.பி. 11 ம் நூற்றாண்டில்தான் ஏலம் அறிமுகம் செய்யப்பட்டது.இருந்தாலும் கூட, ஐரோப்பாவுக்கு,கி.பி 17 ம் நூற்றாண்டு வரை, டச்சு , போர்த்துகீஸ் மற்றும் ஆங்கிலேயர்களின் கடல் வாணிபம் மூலம்தான், ஏலம் இறக்குமதியானது. கிறித்துவ புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டில், இதனை குற்றமற்ற என்ற பொருள் தரும்படியான கிரேக்க வார்த்தையில் "அமோமன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 1,000 ஆண்டுகளில் சீன அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், தங்களின் பேரரசரிடம் நிற்கும் முன், வாயில் ஏலத்தின் விதையை போட்டுமெல்ல கொண்டுதான பேரரசர்களைச் சந்திக்க வேண்டுமாம். அரசர்கள் முன் இவர்கள் வாய் நாற்றத்துடன் பேசிவிடக்கூடாதல்லவா? அதான். ஏனெனில், சொர்க்கத்தின் மகன்களான பேரரசர்கள் முன்னே மணம் பரப்பும் வாசனை காற்றை அவர்கள் விட வேண்டுமாம். இது எப்படி இருக்கு,? ஒண்ணுமில்லேப்பா.! அதிகாரியின், வாய் நாறாமல் இருப்பதற்குத்தான் இந்தபந்தவான படாடோபமான ஏற்பாடெல்லாம்..!வாய் நாறினால் பின் எப்படி பேச...! அதான் இது.


நாங்க..இஞ்சி..குடும்பம்தாங்க..!


இப்படி பார் புகழும் ஏலக்காய் இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. இது வருடம் முழுவதும் காய்க்ககூடியது. வேர்ப்பகுதியில்தான் இதன் பூவும், காயும் காணப்படும். பொதுவாக இது வெப்ப நாடுகளின் நறுமணப் பொருளாக இருந்தாலும், இதற்கு, ஏராளமான மழையும், 22 டிகிரி வெப்பமும் தேவை. அடர்வான மரங்களின் நிழலிலேய இதனை வளர்க்க முடியும்.ஏல செடி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 , 000-15 , 000 மீ உயரத்திலேயே ஈரப்பாங்கான பகுதிகளில் வளரும் பயிரிட்டு 4 ஆண்டுகள் ஆன செடிதான் காய்க்கும்.சுமார் 20 காய்கள் வந்த பின் இதனைப் பறித்து சூரிய வெப்பத்தில் உலர வைப்பர்.காய்கள் அழகான இளம்பச்சை நிறத்தில் இருக்கும். நன்கு முதிர்ந்த காயில் 10 -20 விதைகள். காணப்படும்.இவை கருப்பாகவும் பிசுக்குத் தன்மையுடனும் இருக்கும். நல்ல தரமான விதைகள் நல்ல கருப்பாக இருக்கும். இன்று ஏலம் இந்தியா தவிர, இலங்கை, தாய்லாந்து, மத்திய அமெரிககா,தமிழ் நாடு மற்றும் கர்நாடகத்திலும் பயிரிடப் படுகிறது. ஆனாலும்கூட, இந்திய ஏலம்தான் இதன் ,மணம், தரம், அளவு, எண்ணெய் மற்றும் நிறத்துக்காக உலக சந்தையில் பெயர் பெற்றுள்ளது. மேலும் உலகின் 90 % ஏலம் இந்தியாவிலிருந்தே ஏற்றுமதியாகிறது. அந்நிய செலாவணியைத் தரும் மிக முக்கியமான் பொருள்

அரேபியரின்.. உபசரிப்பு.. ஏலத்தின்,, மதிப்பு...!

ஏலக்காய். கிழக்கிந்தியர்கள், ஸ்காண்டிநேவியர்கள் , அரேபியர்கள், மற்றும் மத்திய ஆப்பிரிக்கர்கள் தான் ஏலக்காயை அடிக்கடி தங்களின் உணவில் பயன்படுத்து கின்றனர்.அரேபியர்கள் காபியில் எலாம் கலந்து தருவதை உபசரிப்பின் உச்சபட்ச மரியாதை என்று நினைக்கின்றனர் . அரேபியர்களின் காபியில் ஏலத்தின் மணம் கட்டாயம் கலந்து அருமையாய் இருக்கும். அவர்களின் காபியில் ஏலப் பொடியோ முழு விதையோ நிச்சயமாய் இருக்கும். , ஏனெனில், அவர்கள், விருந்தினரின் முன், ஏலவிதையை, காபி கொடுக்கு முன் காண்பிப்பதை பாரம்பரிய வழக்கமாகவும், அவர்களுக்கு தரும் உயர்ந்த பட்ச மரியாதை என்றும் கருதுகின்றனர்.அரேபியர்கள் மாமிசத்திலும் , அரிசி சோற்றிலும் ஏலம் போடுவார். இன்றும் கூட முகமதியர்கள் வீட்டில் சாதம் சமைக்கும் போது அரிசியுடன் ஏல அரிசியும் கலந்து போட்டே சமைக்கின்றனர். இந்திய உணவில் ஏலம் கலப்பது சாதாரணமான ஒன்றுதான். . புலவு, மசாலா, ஆட்டுக் கறி பாயசம், அல்வா, குலாப் ஜாமூன்,உப்புமா என அனைத்துப் பொருளகளிலும் மற்றும் பிற இனிப்புகளில்மும் ஏலத்தின் வாசனை தூள் கிளப்பும்! எதியோபியாவிலும் இதே கதைதான். அவர்களும் விதம் விதமாக ஏலத்தை காபியில் கலந்து பரிமாறுவார்கள்.மத்திய ஆசியாவிலும், உஸ்ப்கிச்தானிலும் அரிசி, கறி மற்றும் இனிப்பில் என அனைத்துப் பொருள்களிலும் சும்மா சகட்டு மேனிக்கு கலந்து உண்கின்றனர் . உலகில் அதிக அளவில் ஏலம் பயபடுத்துவதில் முதல் பரிசுதான் அரேபியாவுக்கு.

மருத்துவ ..குணம் கொண்ட.. ஏலக்காய்...!

ஏலம் பல வகைகளில் தனிச் சிறப்பு வாய்ந்தது. இதில் அற்புதமான உணவு மதிப்பு கொண்டது. இதில் மிகக் குறைந்த கொழுப்பும், அதிக புரதமும், முக்கிய வைட்டமின்களாகிய A ,B& C உள்ளன. 10% ஆவியாகக்கூடிய எண்ணெய் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான, அரேபியா,துருக்கி போன்றவைதான் உலகின் அதிகமான ஏலம் உட்கொள்பவர்கள். வடஇந்திய கிராமிய பாடல்களிலும் கூட, வெற்றிலை பாக்கில் ஏலம் கலப்பது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஏலம், குடல், சிறுநீர், நரம்பு மற்றும் இனப்பெருக்க உறுப்பு தொடர்பான நோய்களை நிவாரணம் செய்யுமாம், ஏலம் இருமலை சரி செய்யும் மருந்தாகவும், உணவு தூண்டுவதாகவும், உடலின் சூட்டைத் தக்கவைக்கவும், எதிர் உயிரியாகவும், எதிர் பூஞ்சைக்காலன் பொருளாகவும், , டானிக்காகவும்,வயிற்றை சரிச்ய்யும் மருந்தாகவும், உடல்வலியைக் குறைக்கும் மருந்தாகவும் இருக்கிறது. 100 கிராம் ஏலத்தில் உள்ள சத்துப் பொருள்கள் :மேலும் வயிற்றுப் போக்கு மலமிளக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் கொண்டது இது. வயிற்றுப் பிரச்சினை உள்ளவர்கள் இதனைக் கட்டாயம் வா உன்ன வேண்டும். நெஞ்சு சளிக்கும் இது நல்லது. பொதுவாக கருவுற்ற பெண்கள் இதனை உண்ணக்கூடாது.

See the table below for in depth analysis of nutrients:


Cardamom, Nutritional value per 100 g.(Source: USDA National Nutrient data base) PrincipleNutrient ValuePercentage of RDAEnergy 311 Kcal 15.5% Carbohydrates 68.47 g 52.5% Protein 10.76 g 19% Total Fat 6.7 g 23% Cholesterol 0 mg 0% Dietary Fiber 28 g 70% VitaminsNiacin 1.102 mg 7% Pyridoxine 0.230 mg 18% Riboflavin 0.182 mg 14% Thiamin 0.198 mg 16.5% Vitamin A 0 IU 0% Vitamin C 21 mg 35% ElectrolytesSodium 18 mg 1% Potassium 1119 mg 24% MineralsCalcium 383 mg 38% Copper 0.383 mg 42.5% Iron 13.97 mg 175% Magnesium 229 mg 57% Manganese 28 mg 1217% Phosphorus 178 mg 25% Zinc 7.47 mg 68%


Cardamom Tea Recipe

Ingredients: (makes 2 cups)

2 cups water8-10 green cardamom pods2 green tea bags (optional)1 tbsp grated orange rind (or fresh orange juice)Honey or agave nectar (optional)

tbsp = tablespoon

Directions:

Add the water to a saucepan and bring to the boil, then reduce to a simmer. Crack open the green pods and add to the saucepan and simmer for 2-3 minutes. The seeds will dissolve in their pods.

Turn off the heat and, if using, add the teabags and the orange rind (or juice) and let steep for 5-10 minutes.

Remove the teabags and pods, and, if you like a bit of sweetness, add the honey or agave and serve.

Honey and Cardamom Ice Cream

The following recipe is from Food Fit for Pharaohs by Michelle Berriedale-Johnson

2 cups whole milk

1 level teaspoon arrowroot

2/3 cup double or heavy whipping cream

10 cardamom pods bruised with a rolling pin

2 tablespoons honey

1 tablespoons orange flower water

½ tsp crushed mastic (if available)

Mix a little of the milk into the arrowroot to make a smooth cream.

Add this to the rest of the milk and the cream. Transfer to a saucepan with the cardamom and honey and bring slowly to a boil. Cook very gently, stirring continuously until mixture thickens slightly. Add orange flower water and crushed mastic (if using) and continue to cook a few more minutes. Remove from heat, cover and allow to cool completely.

When quite cold, put into an ice-cream maker and churn-freeze until frozen, but not frozen hard. Serve at once if possible. If not, freeze hard, but before serving remove from the freezer and allow to soften in the fridge at least 30 minutes. Serve with fresh fruit or a macerated fruit salad.

How to make cardamom chai tea
?

Serves: 4

  • Cardamom chai tea ingredients
  • 2 teaspoon of loose black tea leaves
  •  3 pods of green cardamom
  • 1’’ piece of ginger
  • 2 cups of milk
  • 3 cups of water
  • A pinch of cinnamon powder (optional)
  • A pinch of freshly ground cardamom powder
  • Sugar to taste.
  • Method:
  • Put the seeds from the green cardamoms in a mortar and pound it with a pestle to turn it into fine powder
  • Clean and peel the ginger, cut it into thin slices and crush it in a mortar separately.
  • Boil the water in a medium sized pan along with the freshly crushed spices for few minutes.
  • Turn off the flame, cover it with a lid and let the spices infuse their flavour into the boiled water.
  • Now add the milk, sugar and tea leaves to it, bring it to boil 2-3 times but don’t let the mixture boil over.
  • Turn down the heat and let the blend simmer for 5 minutes.
  • Remove from heat and strain it into serving cups.
  • Sprinkle a pinch of cardamom powder and cinnamon powder (if available) and serve piping hot.
  • note: You can also turn this simple recipe into a latte. All you have to do is top your chai with milk directly from the espresso machine instead of boiling it with the tea leaves. This will confer a delicious frothy quality to your chai. This chai can also be relished cold. Add a sumptuous scoop of vanilla ice cream to your chilled elaichi chai tea instead of milk or top it up with a swirl of whipped cream to transform this spicy tea into a pleasant summer drink.


தங்கத்தில்.. குளித்த.. ஏலக்காய்...!.


கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும், தைத்திரிய சம்ஹிதாவிலும் திருவிழா காலத்திலும், சடங்குகளிலும் ஏலம் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அதைவிட ஒரு சுவாரசியமான தகவல். இந்தியர்கள், தங்களின் விருந்தினர்களுக்கு மிகுந்த மரியாதை செய்வதற்காக, ஏலக்காயை தங்கத்தில் முக்கி எடுத்து அதனை, இனிப்பின் மீது வைத்து பரிமாறுவார்களாம். இது எப்படி இருக்கு நண்பா! இன்று அதனை தங்கம் விற்கும் நிலையில் நினைத்துக் கூடப்பர்ர்க்க முடியுமா? 1801 ல் இந்தியாவிலிருந்து, கிழக்கிந்திய கம்பெனியால் , இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப் பட்ட தங்கத தகடு போர்த்திக் கொண்ட ஏலக்காய்கள் இவை. இவற்றை இந்தியா அருங்காட்சியம் என்ற பெயரில் இந்தியா இயற்கைப் பொருள்களை இங்கிலாந்தில் . வைத்திருந்தனர். . 1879 , ல் அங்கிருந்த அருங்காட்சியகம் மூடப்பட்டதால், அதனை லண்டன் அருங்காட்சியகத்துக்கும், ராயல் தாவர தோட்டத்திற்கும் மாற்றப்பட்டது. பின்னர், இவை தென் ஆசியா கடந்து, சீனா தாண்டி உலகம் முழுமைக்கும் விரவிக் கிடக்கிறது. பிற நாட்டு முதலாளிகள் எம் சொத்து கொள்ளை கொண்டு போகவோ என்று நாம் அலறவேண்டிய்துதான். வேறென்ன செய்ய?
-PROF.S.MOHANA






















Aug 21, 2012

நாகையில் துளிர், ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டி


First Published : 19 Aug 2012 01:34:35 PM IST

நாகப்பட்டினம், ஆக. 18: தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகை மாவட்டக் கிளை சார்பில் மாவட்ட அளவிலான துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டிகள் நாகை, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.

அறிவியல் இயக்க பொதுச் செயலர் எம்.எஸ். ஸ்டீபன்நாதன், மாவட்டத் துணைச் செயலர் ஆவராணி ஆனந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.பள்ளித் தலைமை ஆசிரியை (பொ) மீனா, அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் இரா. பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றியப் போட்டிகளில் முதல் 2 இடங்களில் தேர்ச்சி பெற்ற 65 பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்டச் செயலர் சந்திரசேகரன், செயற்குழு உறுப்பினர் செங்குட்டுவன், ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

துளிர் அறிவியல் போட்டியில் வென்ற பள்ளிகள்: 6, 7, 8 வகுப்பு: புஷ்பவனம் உதவிபெறும் பள்ளி, குத்தாலம் கணபதி தேசியப்பள்ளி, ஓரடியம்பலம் ஊராட்சி ஒன்றியப்பள்ளி. 9,10-ம் வகுப்பு: வலிவலம் தேசிகர் பள்ளி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பள்ளி,புறாகிராமம் அரசுப்பள்ளி. 11, 12-ம் வகுப்பு: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைபள்ளி, வலிவலம் தேசிகர் பள்ளி, ஆயக்காரன்புலம் நடேசனார் அரசுப்பள்ளி.

ஜந்தர் மந்தர் வினாடி வினா:6, 7, 8-ம் வகுப்பு: சீர்காழி எஸ்.எம்.எச். மெட்ரிக் பள்ளி, தோப்புத்துறை காயிதே மில்லத் மெட்ரிக் பள்ளி, நாகை நகராட்சி மகளிர் பள்ளி. 9,10-ம் வகுப்பு: நாகை நகராட்சி மகளிர் பள்ளி, சீர்காழி எஸ்.எம்.எச் மெட்ரிக் பள்ளி, நாகை தூய அந்தோனியார் பள்ளி. 11, 12-ம் வகுப்பு: நாகை தேசிய பள்ளி, சீர்காழி எஸ்.எம்.எச் மெட்ரிக் பள்ளி, தோப்புத்துறை காயிதே மில்லத் மெட்ரிக் பள்ளி.

போட்டிகளில் வென்றோருக்கு, மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மார்த்தாள் பிரபாவதி சுழற்கேடயங்களை வழங்கினார்.பள்ளித் துணை ஆய்வாளர் ராமநாதன், நாகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராமலிங்கம், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மணிவண்ணன், கீழ்வேளூர் உதவி தொடக்கக் கல்வி அலுவர் மணிகண்டன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

நன்றி: தினமணி

வினாடி, வினா : மாதம்பட்டி பள்ளி மாணவர்கள் அசத்தல்

பதிவு செய்த நேரம்:2012-08-13 10:01:37

தொண்டாமுத்தூர்,: கோவை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி, வினா போட்டி எஸ்என்ஆர் கல்லூரியில் நடந்தது. தொண்டாமுத்தூர் ஒன்றிய அளவிலும், கோவை மாவட்ட அளவிலும் 6,7,8 நடுநிலைபள்ளி பிரிவில், 9 மற்றும் 10 வகுப்புகள் பிரிவில் மாதம்பட்டி பள்ளிகள் முதலிடம் பெற்றன. இதை தொடர்ந்து 6 மாணவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள வினாடி, வினா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் புரட்சிதம்பி பரிசு வழங்கினார். விழாவில், தென்கரை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் குருபுத்திரன், தலைமை ஆசிரியர் சுகந்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினகரன்

தேவகோட்டையில் விநாடி வினா

First Published : 13 Aug 2012 10:06:18 AM IST


  தேவகோட்டை, ஆக. 12: தேவகோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், துளிர் விநாடி வினா போட்டிகள் லோட்டஸ் வெங்கடாச்சலம் செட்டியார் பள்ளியில் நடைபெற்றன.  மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 29 பள்ளிகளைச் சேர்ந்த 105 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜசேகரன், ரேணுகா, ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் நடுவர்களாக பணிபுரிந்தனர்.

இதில் 6,7,8 வகுப்பு பிரிவில் நானாக்குடி ஆர்.சி நடுநிலைப்பள்ளி முதலிடமும், தேவகோட்டை முத்தாத்தாள் பள்ளி இரண்டாமிடமும், 9,10 வகுப்பு பிரிவில் நகரத்தார் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், ஜமீன்தார் உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.  11, 12 வகுப்பு பிரிவில் பெத்தாள் ஆச்சி பெண்கள் பள்ளி முதலிடமும், நகரத்தார் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.

வெற்றி பெற்றவர்களுக்கு அறிவியல் இயக்க கிளைத் தலைவர் முனைவர் குமரப்பன் தலமைமையில் செயலாளர் எட்வின், பள்ளி முதல்வர் ராஜீ, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பீட்டர் லெமாயூ ஆகியோர் வழங்கினர். இதில் முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.

மூலம்: தினமணி

துளிர் வினாடி-வினா போட்டி விவேகானந்தா பள்ளி அசத்தல்

ஆகஸ்ட் 14,2012,00:12

பல்லடம் : பல்லடத்தில் நடந்த துளிர் வினாடி-வினா போட்டியில், மூன்று பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து சுவாமி விவேகானந்தா பள்ளி வெற்றி பெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பல்லடம் ஒன்றிய அளவிலான துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் வினாடி-வினா போட்டி நடந்தது.

30 பள்ளிகளை சேர்ந்த 90 மாணவர்கள் பங்கேற்றனர். இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

மூன்று பிரிவுகளிலும், பல்லடம் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்து அசத்தினர். வெற்றி பெற்ற மாணவர்கள் ஸ்ரீரஞ்சனா, பிளெஸ்ஸி மோனிசா, அண்ணாமலை, விக்னேஷ், அனீஸ் கார்த்திக், மோகன் சுந்தர், கவிபிரியன், நர்மதா, இந்துபிரியா ஆகியோரை தாளாளர் முத்துக்குமார், பள்ளி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.


நன்றி: தினமலர்

Aug 11, 2012

ஹிரோஷிமா-நாகசாகி தினநிகழ்ச்சிகள் -2012

கடந்த 1945 ஆம் ஆண்டில் ஆகஸ்ட்,6,9 தேதிகளில் அமெரிக்கா  ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி நகரங்களின் மீது நடத்திய  நிகழ்ந்த அணுகுண்டுத் தாக்குதலால் 3 இலட்சத்திற்கும் மேலான அப்பாவி மக்கள் பலியானார்கள். ஹிபாகுஷாக்கள் என்ற தனி இனமே உருவானது. அதன் தாக்கம் இன்றுவரை ஜப்பானிய மக்களிடையே இருந்துகொண்டுதான் இருக்கிறது. அனாலும்  இன்றும் உலகின் பல  பகுதிகளில்  போர்களும் பலிகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

எனவே தான் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகஸ்ட், 6,9 தேதிகளை போர்களுக்கு எதிரான தினமாக அனுசரித்து அறிவியல் அமைதிக்கே, அறிவியல் ஒற்றுமைக்கே, அறிவியல் உலக சமாதானத்திற்கே என்கின்ற முழக்கங்களை முன்வைத்து குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஓவியம், கட்டுரை, கவிதை எனப் பல்வேறு போட்டிகளையும் பேரணி, மனிதச்சங்கிலி, கருத்தரங்குகள் போன்ற பல நிகழ்ச்சிகளையும் கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் விபரம் பின்வருமாறு:

பெரியகுளம்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்  ஆகஸ்ட்,10 காலை 11 மணிக்கு பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் ஹிரோஷிமா-நாகசாகி  நினைவுதினக் கருத்தரங்கம் நடைபெற்றது. வட்டாரத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் எஸ்.ராம்சங்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் கருத்துரை வழங்கினார். ஆசிரியர் தங்க.பாண்டியராஜன் நன்றி கூறினார். ரஹீம் சகோதரர்கள் நடுநிலைப்பள்ளி, சரஸ்வதி நடுநிலைப்பள்ளி, நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

போடி: போடிநாயக்கனூர் ஒன்றியம் முந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று காலை 11 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் வி.கஸ்தூரி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் எம்.கலா கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்துப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் கருத்துரை வழங்கினார். பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட சுமார் 120 பேர் கலந்துகொண்டனர்.

தேனி: தேனி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று மாலை 3 மணிக்கு ஹிரோஷிமா-நாகசாகி நினைவுதினக் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் மீனாட்சி தலைமை வகித்தார். அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி பொறுப்புத் தலைமையாசிரியர் சாந்தி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சேசுராஜ் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் கருத்துரை வழங்கினார். இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர்கள் காமுத்தாய், கலைச்செல்வி, மலைச்சாமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

கம்பம்: கம்பம் ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று காலை 11 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. சி.எஸ்.ஐ. பள்ளித் தலைமை ஆசிரியர் ஜீவா தலைமை வகித்தார். அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு பேரணியைத் தொடங்கிவைத்தார். இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க கம்பம் வட்டாரச் செயலாளர் க.முத்துக்கண்ணன் ஒருங்கிணைத்தார்.

கம்பம் ஒன்றியம் கருநாக்கமுத்தன் பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று காலை 11.30 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சந்திரா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் அணு ஆயுத எதிர்ப்புக் கருத்துரை வழங்கினார். மாணவர்கள் ஹிரோஷிமா நினைவு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஆசிரியர்கள் முருகன், கணேசன், ராஜன், அழகுசித்ரா, ஜெயலட்சுமி உள்ளிட்டு சுமார் 150 மாணவர்களும் கலந்துகொண்டனர்.

கம்பம் ஒன்றியம் சுருளிப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று மதியம் 12 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ரெஜினாள் தொடங்கிவைத்தார். 2 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன், அறிவியல் இயக்க முன்னாள் செயலாளர் க.மா.சிவாஜி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிச் செயலாளர் ஜி.இரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அறிவியல் இயக்க கம்பம் கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் ஒருங்கிணைத்தார்.

மனிதச் சங்கிலி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கம்பம் நகரில் இன்று மாலை 3 மணிக்கு அணு ஆயுத எதிர்ப்பு மனிதச் சங்கிலி இயக்கம் நடைபெற்றது. கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகா நடுநிலைப்பள்ளி, ஸ்ரீமுத்தையாபிள்ளை உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 700பேர் கலந்துகொண்டனர். காந்திசிலை முதல் அரசமரம் வரை மாணவர்கள் சாலையின் இருபுறமும் கைகோர்த்து அணிவகுத்து நின்றனர். அறிவியல் ஆக்கத்திற்கே, அறிவியல் ஒற்றுமைக்கே, அறிவியல் சுயசார்புக்கே, அழிவிற்கல்ல அழிவிற்கல்ல அணுவின் சக்தி அழிவிற்கல்ல, நிலவட்டும் நிலவட்டும் அமைதி எங்கும் நிலவட்டும், பரவட்டும் பரவட்டும் சமாதானம் பரவட்டும் என்கின்ற முழக்கங்களை உரத்தகுரலில் எழுப்பினர். பள்ளித்தலைமை ஆசிரியர் கணேசன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.இளங்கோவன், வி.வெங்கட்ராமன், கம்பம் கிளைத்தலைவர் மா.சிவக்குமார், கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன், கம்பம் கிளைப்பொறுப்பாளர்கள் சி.பிரபாகரன், பாண்டி, அய்யப்பன் உள்ளிட்ட அறிவியல் இயக்க நண்பர்களும் 15க்கும் மேற்பட்ட ஆசிரிய நண்பர்களும் கலந்துகொண்டனர்.


--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI



--

Aug 7, 2012

ஹிரோஷிமா-நாகசாகி தின போட்டிகள்-2012



அன்புடையீர்,

வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகம் முழுவதும் மக்களிடையே கல்லாமையைப் போக்குவதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்களின் பங்களிப்போடு அறிவொளி இயக்கத்தை ஒருங்கிணைத்தது முதலாக குழந்தைகள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் கருத்தரங்குகள், குழந்தைகள் அறிவியல் திருவிழாக்கள் என ஏராளமான அறிவியல் விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

கடந்த 1945ஆம் ஆண்டில் ஆகஸ்ட், 6,9 தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி நகரங்களில் நிகழ்ந்த அணுகுண்டுத் தாக்குதலால் இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள். அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு ஹிபாகுஷாக்கள் என்ற தனி இனமே உருவானது. இன்றும் உலகின் பல பகுதிகளில் போர்களும் பலிகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

எனவே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இக்கொடுரத் தாக்குதல் நடைபெற்ற தினங்களைப் போர்களுக்கு எதிரான தினமாக அனுசரித்து அமைதியை வலியுறுத்தியும் அறிவியல் அமைதிக்கே, அறிவியல் ஒற்றுமைக்கே, அறிவியல் உலக சமாதானத்திற்கே என்பதை வலியுறுத்தியும் குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே போட்டிகளையும் பள்ளி மாணவர்களின் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி இயக்கத்தையும் கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.. இவ்விழிப்புணர்வு இயக்க நிகழ்வுகளில் தங்கள் பள்ளியின் சார்பில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
போட்டிகளின் விபரம் பின்வருமாறு:
பிரிவு
வகுப்பு
தலைப்பு
அளவு
ஓவியம்
6,7,8
போரில்லாத பூமி
30*45செ.மீ.சார்ட்
கட்டுரை
9,10,11,12
அணு-நேற்று இன்று நாளை
4 பக்க அளவில்
கவிதை
கல்லூரி
உயிர் பொசுங்கும் வாடை வீசுதே
25 வரிகளில்
கட்டுரை
ஆசிரியர்/ஆர்வலர்
அணு இன்றி அமையாதா உலகு
4 பக்க அளவில்
மேற்காணும் மாவட்ட அலுவலகத்திற்கு 
 தங்களின் தெளிவான முகவரியுடன்
படைப்புக்களை அனுப்பவேண்டிய கடைசி தேதி: ஆகஸ்ட்,21,2012
:9488011128

ஹிரோஷிமா, நாகசாகி தினம் - ஆகஸ்ட் 6, & 9.

ஹிரோஷிமா தினம்

உலக சமாதனம், சமத்துவம், நிலைத்தகு வளர்ச்சி.
என்றென்றும் நினைவில்: ஹிரோஷிமா..

 

ஆகஸ்ட் 6, 1947. அன்று காலை இனிமையான காலைப் பொழுதாகத் தான் உதயமாகியது. மேகங்கள் அற்ற தெளிவான வானம். இளம் தென்றல் காற்று, வசந்தத்தில் பூத்த மலர்கள் கொண்ட மரங்கள்.. என அன்றைய தினம் வரப்போகும் அவலத்தை அறியாமல் துவங்கியது.

காலை எட்டு மணி. அன்று காலை வழமை போன்றே ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது. எல்லோரும் காலை பரபரப்பில் இருந்த நேரம். பிள்ளைகள் பள்ளிக்கு போக தயார் நிலையில்; அப்பா, சில வீட்டில் அம்மாவும், வேலைக்கு போக தயார் நிலையில். தாய்மார்கள் மதிய உணவும் காலை உணவும் தயாரிக்கும் மும்முரத்தில்.

தீடிர் என ஒலித்தது சைரன். எதிரி விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை. விமானம் எங்கு குண்டுபோடுமோ, யார் யார் மடிவர்களோ என்ற அச்சமும் பீதியும் அனைவரையும் வாட்டியது.

விமானத்திலிருந்து குண்டு விழும்; பெரும் சப்தம் கேட்கும் என எதிர்பார்ப்புடன் இருந்த அனைவரும் சற்றே வியப்பில் ஆழ்ந்தனர். தலைக்கு மேலே இரண்டு விமானங்கள் பறந்தன. எங்கு குண்டு போதுமோ என அச்சப்பட்டு அண்ணாந்து பார்த்தவர் வியப்பில் ஆழ்ந்தனர். முதலில் வந்த விமானம் பூசணிக்காய் போன்ற ஏதோ ஒன்றைப் பாராசூட்டின் மூலம் கீழே போட்டுவிட்டுச் சென்று விட்டது. இரண்டாவது விமானம் அங்கேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. சிலர் விமானத்திலிருந்து ஏதோ விழுகிறதே என வேடிக்கை பார்த்து நின்றனர் ... அடுத்து ஏற்படப்போகும் அவலத்தை அறியாமல்.

விமானம் இட்ட குண்டு வெடிக்கவில்லை; பெரும் சப்தம் எதுவும் எழுப்பவில்லை. அனால் எங்கும் பரவியது பெரும் ஓளி. கண்ணை கூசும் ஒளி. ஒளியின் பிரகாசம் அவ்வளவு அதிகமாக இருந்ததால் நிழல் கூட ஏற்ப்படவில்லை. ஒன்றன பின் ஒன்றாக இரண்டு ஒளி வீச்சு. ஒளி வீச்சிற்கு பிறகு சுமார் 20000 அடி உயர்ந்த புகை தூசு மண்டலம் தென்பட்டது. வானம் இருண்டது; அதுவரை தெளிவாக இருந்த வண்ணம் முற்றிலும் தூசு படிந்து இரவு போல் ஆகியது.

ஒளிவீச்சில் பட்டவர்கள் தீடிர் என உணர்த்தனர்; அவர்களது ஆடைகள் எரிந்து போயிருந்தன. சுற்றும் முற்றும் வீடுகள் இடிந்து போயிருந்தன. கண்ணாடி உடைந்து சிதறி பலர் காயம் அடைந்தனர். அந்த நகரமே அழிந்து போயிருந்தது. எல்லாம் ஒரு சில வினாடிகளில். ஒளி வீச்சு அடங்கியதும் எங்கும் பரவியது பெரும் தீ. சற்று நேரத்தில் நகரின் மையப்பகுதி பெரும் தீயில். எரிகின்ற பொருட்கள் எல்லாம் தாமே எரியதுவங்கின; மனிதர்களின் தோல் கூட அணலில் வெந்து உரிந்து.

குண்டு வீச்சின் மையப்பகுதில் கன நேரத்தில் ஆயிரக் கணக்கானோர் சட்டென்று பஸ்பமகினர். அவர்களது எலும்பு கூட மிஞ்சவில்லை. எல்லாம் கன நொடியில் எரிந்தது; சம்பல் கூட மிஞ்சாமல் போயிற்று. அவ்வாறு மடிந்தவர்கள் பெரும் வேதனையும் வலியும் இல்லாமல் இறந்து போயினர். அனால் குண்டு வீச்சின் மையப்பகுதியிற்கு சற்றே விலகி இருந்தவர்கள் தீயிலும் இடிபாடுகளிலும் பட்டு வலி வேதனையுடன் மடிந்தனர். எங்கும் அவலக்குரல். காப்பாற்ற, உதவிக்கரம் நீட்ட ஒரு ஆள் கூட மிஞ்சவில்லை.

ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டுக்கு பிறகு அடுத்த சில நாட்களில், ஆகஸ்ட் 9 அன்று நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டு போடப்பட்டது. இந்த அணுகுண்டு வெடிப்பில் சுமார் ஒரு லட்சம் பேர் மடிந்தனர். ஹிரோஷிமா மீது வீசிய அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (LITTLE BOY) என்பதாகும் மூன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது போடப்பட்ட அனுகுண்டிற்கு மனிதன்’ (FAT MAN) என்று பெயர் சூட்டினர்.

அன்று ஹிரோஷிமாவில் இருந்தவர்களுக்கு தெரியாது தமது நகரத்தின் மீது விழுந்தது அணுகுண்டு என்று. அணுகுண்டு வீச்சுக்கு உள்ளான முதல் நகரம் ஹிரோஷிமா. நகரின் மொத்த மக்கள்தொகையான 3,50,000 நபர்களில் சுமார் 70,000 அந்த சில நிமிடங்களில் மடிந்தனர்; இந்த குண்டு வீச்சு காரணமாக மேலும் 70,000 அடுத்த சில நாட்களில் மடிந்தனர் இதே போல நாகசாகியில் சுமார் 74,000 மக்கள் மடிந்தனர்.. இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.
குழந்தைகள், பொது மக்கள், முப்படைந்தோர் என பலயிரக்கனக்க்னோர் மடிந்த ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடிப்பில் மடிந்தவற்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் “இனி எப்போதும் இப்படிப்பட்ட கொடூரத்தை நடக்க விட மாட்டோம்’ என பொறிக்கப்பட்டுள்ளது. ஆம்; இனி இதுபோன்ற கொடூரம் எங்கும் நடைபெறக்கூடாது.

மால்கம் எக்ஸ் எனும் அமெரிக்க கருப்பின தலைவர் “சமதானத்தை விடுதலையிலிருந்து பிரித்துப் பார்க்க கூடாது ஏன் எனில் விடுதலையில்லாத எவரும் சமாதானமாக இருக்க மாட்டார்கள்” என கூறியதை நினைவு கொள்ளுதல் வேண்டும். உலக சமாதானம் மானுட விடுதலையிலிருந்து பிரிக்க முடியாது.

உலகளாவிய அளவில் மானுட விடுதலைக்கு அச்சுறுத்தலாக அணுகுண்டுகள் மட்டுமல்ல உலக வெப்பமடைதல் பிரச்சனையும் எழுந்துள்ளது. இந்த ஹிரோஷிமா தினத்தில் இவை குறித்து மீள்பார்வை செய்வது பொருத்தமாக இருக்கும்.

அணுகுண்டின் அவலம்

ஹிரோஷிமாவில் குண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 28 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கல்லையும் மண்ணையும் தவிர, எரியக்கூடிய பொருட்கள் அனைத்தும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சாம்பலாகி இருந்தன. அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவு 300000 (மூன்று லட்சம்) டிகிரி செல்சியஸ். அடுத்த ஒரு வினாடியில் 280 மீட்டர் சுற்றளவுக்குப் பரவிய வெப்பத்தின் அளவு 5000 (ஐந்தாயிரம்) டிகிரி செல்சியஸ். நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டங்கள் தரைமட்டமாயின. குண்டு வெடித்த சில நிமிடங்களில், கனத்த புழுதி மேகங்களும் புகையும் வானில் நிரம்பி, பகல் இருண்டது.

ஹிரோஷிமா நகரை அணைத்துக்கொண்டு இரண்டு ஆறுகள் ஓடின, அணுகுண்டு வெடித்தவுடன் ஏற்பட்ட வெப்பத்தைத் தணிக்க இந்த ஆறுகளுக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரும் ஆழத்தைப் பற்றிய பயமே இல்லாமல் சரமாரியாகக் குதிக்க ஆரம்பித்தனர். ஆணா, பெண்ணா, உடலில் துணி இருக்கிறதா, இல்லையா, தனக்கு அடியில் இருக்கும் உடலில் உயிர் இருக்கிறதா, இல்லையா, யாருக்கும் எந்த நினைப்பும் இல்லை. வெப்பத்தை எப்படியாவது குறைத்தால் போதும் என்று எண்ணி, தொங்கிக் கொண்டிருக்கும் சதைகளுடன் ஆற்றில் குதித்த பிறகுதான் தெரிந்தது, ஆற்று நீரும் கொதித்துக் கொண்டிருக்கிறது என்று. சில மீட்டர்கள் தொலைவில் ஐந்தாயிரம் டிகிரி வெப்பம் பரவியபோது, நீர் கொதிக்கத் தொடங்கியதில் வியப்பில்லைதானே!

தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. சற்று நேரத்தில் மழை பொழியத்துவங்கியது. ஆகா, வெப்பத்தைத் தணிக்க மழையாவது பெய்கிறதே என மகிழ்ந்து மழையில் நனைந்தவர்கள் எல்லாம் முட்டாள் ஆகினர். பெய்தது கருநிற அமிலமழை. மழைத்துளிகளில் கதிரியக்கத் துகள்கள் இருந்ததுதான் அமிலமழைக்குக் காரணம். மழை பட்டவர்கள் உடல் அமிலத்தில் அழிந்து மடிந்தனர். இந்த மழைநீர் விழுந்த குளத்திலிருந்த மீன்களும் செத்து மிதந்தன. குண்டால் ஏற்பட்ட ஒரு கறுப்பு மழை காலை 9 மணிமுதல் மாலை வரை நகரின் மேற்குப்பகுதிகளில் விழுந்துகொண்டிருந்தது. வெடிப்பிஹலிருந்து கதிரியக்கத்தை இந்த மழை தரைக்குக் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருந்தது. வெடிப்பினால் உண்டான வினோத வானிலையினால் ஏற்பட்ட வன்மையான சூறைக்காற்று நடுப்பகல் முதல் நான்கு மணிநேரம் நகரை மேலும் தாக்கியது.

நற்புரமும் பரவிய அதிவலை காரணமாக வீடுகள் இடிந்து வழிந்தன. கண்ணாடி வெடித்து சிதறியது. . நகரிலிருந்தவற்றில் அறுபத்தெட்டு சதவீதக் கட்டிடங்கள் முற்றிலும் அழிந்தோ, செப்பனிட இயலாத அளவு சேதமடைந்தோ போயின. நகரின் மையப்பகுதி கற்கள் பரவிய தட்டைப்பரப்பாகி விட்டது. வலுவான கட்டிடங்களின் இடிபாடுகள் அங்குமிங்கும் சிதறிக் கிடந்தன.

இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டு வெளியே வரவும் முடியாமல், முழுதாக உயிரும் போகாமல் பலர் அவலமாக மடிந்தனர். இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த அங்கு சென்ற பார்வையாளர்கள் “சாமதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என குறிப்பிட்டுள்ளனர். எத்தனை மனிதர்கள் இறந்தார்கள் என்பதுகூடத் துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை. சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்துக் காணாமல் போனவர்களைக் கணக்கெடுத்து, அதிலிருந்து இத்தனை பேர் இறந்திருக்கக்கூடும் எனக் கணித்தனர். சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’

அந்த குண்டு வெடிப்பிற்கு பிறகு அவலத்தை கண்ட பொதுமக்களின் விவரிப்பு நமது மனதை உலுக்கி விடும். நகரெங்கிலும், பெற்றோர்கள் தங்களின் காயம்பட்ட அல்லது உயிரிழந்த குழந்தைகளைக் கண்டெடுத்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் தங்களுடைய காயம்பட்ட அல்லது இறந்த பெற்றோர்களைக் கண்டுபிடித்துக் கொண் டிருந்தனர். கருவுற்றிருந்த ஒரு பெண் இறந்து போயிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் மூன்று வயதுள்ள அவள் மகள் ஒரு காலிக்கோப்பையில் தண்ணீர் எடுத்து வந்து தன் தாய்க்கு ஊட்ட முயன்று கொண்டிருந்தாள். ஒரு தாய் தன் குழந்தையைத் தேடித் தேடிப் பாதிப் பைத்தியமான நிலையில் குழந்தையின் பெயரைக் கூவிக் கொண்டிருந்தாள். கடைசியில் குழந்தை கிடைத்தான். அவன் தலை, வேகவைத்த அக்டோபஸ்போலக் காணப்பட்டது. அவன் கண்கள் பாதி மூடியிருந்தன. அவன் வாய் வெளுத்து, உப்பி, வீங்கியிருந்தது.

அவர்களின் முன்புறத்தைப் பார்க்கிறீர்களா, பின்புறத்தைப் பார்க்கிறீர்களா என்று சொல்லமுடியாத அளவில் மக்களின் காயங்கள் இருந்தன. காயமடைந்ததோடு மட்டுமல்லாமல் பலர் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தனர். கதிரியக்க நோயின் ஆரம்ப அறிகுறி அது. உள்ளபடியே, அணுகுண்டு வீச்சின் பின் உடனேயே மடிந்தவர் அதிர்ஷ்டசாலிகள்; அணுகுண்டின் கதிர்வீச்சு தாக்கி அதன் காரணமாக புற்றுநோய் உட்பட பல விதமான அவல நோய்க்கு உள்ளாகினர். நோயினால் துன்பமுற்று வலியில் அவதியுற்று மாதக் கணக்காக, வருடக்கணக்காக குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தவர் துன்பம் சோழ முடிய சோகம்.

குண்டு விழுந்து சில வாரங்கள் ஆனதும் பிழைத்தவர்களின் தோலில் ரத்தக் கசிவால் சிறு புண்கள் தோன்றியிருந்தன. இது இரண்டாம் கட்டம் தோல் வழியே ரத்தம் கசிந்தது. கதிரியக்க நோயின் கடுமையான கட்டம் வந்துவிட்டதற்கு இதுதான் வழக்கமான அறிகுறி. முதல் கட்டத்தில் அடிக்கடி வாந்தி வரும். காய்ச்சல் அடிக்கும். அதீதத் தாகம் எடுக்கும். செல்களின் பெருக்கப் பணியைக் கதிரியக்கம் தாக்குகிறது. ஆகவே, அடிக்கடி பெருகும் செல்கள் மிகவும் தாக்குண்டு போகின்றன. ரத்த செல்கள் அடிக்கடி பெருகும். ஆதலினால் தான் ரத்த தானம் செய்தாலும் சில நாட்களில் புதிய ரத்தம் உருவாகிறது. கதிரியக்கத்தால் பாதிக்கப்பட ரத்த செல்கள் இயல்பான வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இயலாது போகும். வெள்ளை ரத்த அணுக்கள் குறைவு காரணமாக தொற்று நோய்க்கு எதிரான பாதுகாப்பு அற்று நோய்த்தாக்குதலுக்கு உள்ளாவர். மேலும், கதிரியக்க தாக்குதலால் ரத்த உறைவுக்குத் துணையாகிற கூறுகளும் பதிக்கப் படும். எனவே, ரத்தக் கசிவு ஏற்ப்பட்டால் இயல்பு போல ரத்தம் உறைந்துவிடாது; கசியும்.

இறுதிக் கட்டமான மூன்றாவது கட்டத்தில் பாதிக்கப்பட்டவரின் தலைமயிர் உதிர்கிறது. பேதி ஏற்படுகிறது. குடல், வாய் மற்றும் பிற பாகங்களில் ரத்தப் போக்கு ஏற்படுகிறது. முடிவில் அவர் அவலமாக மடிவார்.

அதிக கதிரியக்க தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உடனே, சில வாரங்களில் மடிந்தனர். குறைவானவ கதிரியக்க தாக்குதலுக்கு உள்ளானவர்கள் காலபோக்கில் நோய்ப்பட்டனர். ஆண்டுகள் செல்லச் செல்ல, கண்படலம், ரத்தப் புற்றுநோய், மற்ற வகைப் புற்றுநோய்கள் ஆகியவை வழக்கமான அளவைவிட அதிகமாக மக்களிடையே தோன்றலாயின. அவர்கள் குண்டுவெடிப்புக்கு எவ்வளவு அருகிலிருந்தனர் என்பதற்கேற்ப அவர்களின் நோய் இருந்தது. கருப்பையிலிருந்த கருக்கள் இயற்கைக்கு மாறான தன்மைகளையும் வளர்ச்சியற்ற நிலைகளையும் அடைந்தன. பிறந்த குழந்தைகள் உடல்-மன வளர்ச்சி குன்றிப் பிறந்தன. ‘1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளீப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.

அணுகுண்டின் அரசியல்

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இந்த குண்டுகள் வீசப்பட்டன. ஐரோப்பாவில் போரில் நேச நாடுகள் வெற்றி வாகை சூடிய நேரம் அது. ஜெர்மனி தோல்வியுற்ற நிலை. ஜப்பானுடன் மட்டும் போர் நீடித்த நிலை. போர் முடிவுறும் தருவாயில் அணுகுண்டு போடப்படத்தின்
அமெரிக்க தான் இந்த குண்டை வீசியது. ஏன் இந்த குண்டுகள் விசப்பட்டன; அதுவும் சாதாரண மக்கள் மீது? போர் நெறிமுறையில் போர் வீரர்களை தாக்குவது புரிந்துகொள்ளமுடியும்; ராணுவ முகம், அலுவலகம் முதலிய தாக்குவதும் விளங்க முடியும். அனால் இந்த அணுகுண்டு கொன்றது சாதாரண மக்களை. ஹிரோஷிமா ஒன்றும் அப்படிப்பட்ட ராணுவ நகரம் இல்லை. அப்படியிருந்தும் இந்த நகரம் தேர்வு செய்யப்பட்டதின் காரணம் என்ன?

அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதகப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.

முதன்முறையாக அணுஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியளாலர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டுமுயற்சியாலும், இரண்டாம் உலகபோரின்போது Manhattan Project என்ற பெயரில் நடந்த இரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது. முதல் அணுஆயுதம் ஜெர்மானிய நாசிகளுடன் எற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டது

உள்ளபடியே வரலாற்று ஆவணகள் அமெரிக்க தான் அணுகுண்டு தயாரித்து சோதனை செய்த உடனேயே இந்த குண்டினை போட்டு பார்த்துவிடுவது என முடிவு செய்தது என்பதை தெளிவு படுத்துகின்றன. இதற்காக, ஓஸகா, கியோத்தோ மற்றும் டோக்கியோ உட்பட, 17 நகரங்கள் பட்டியலிடப்பட்டன. பின்னர், ஒவ்வொரு நகரத்தின் மக்கள்தொகை மற்றும் ஏற்படப்போகும் பாதிப்புகளின் அடிப்படையில், அதிலிருந்து ஹிரோஷிமா கொக்கூரா, நீகத்தா மற்றும் நாகசாகி ஆகிய நான்கு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 1944 முதல் ஜப்பானின் மீது தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வந்த அமெரிக்கா, தலை நகர டோகியோ மீது மீட்டருக்கு ஒரு குண்டு வீதம் குண்டு மழை பெய்த அமெரிக்க இந்த நான்கு நகரங்கள் மீது மட்டும் விமானம் கொண்டு குண்டு வீசவில்லை. ஏன் தெரியுமா? அணுகுண்டின் பாதிப்புகளைத் துல்லியமாகக் கணக்கிட, இந்த நான்கு இடங்களின் மீது மட்டும் குண்டு வீச்சை நிறுத்தி வைத்தது. மக்கள் நெருக்கம் மிகுந்த நகரம் வேண்டும், பதிப்புகள் குறித்து அறிய வேண்டும் என்பதால் நான்கில் முதல் இலக்காக ஹிரோஷிமா தேர்வானது.

இரண்டாம் உலகப்போர் நடைபெறும் சமயம் எனினும், பல நிபுணர்கள் இந்த குண்டு வீசப்படவேண்டியது இல்லை; எதிரி ஜெர்மனி சரணடைந்து விட்டது; ஜப்பான் தோல்வியை தழுவும் காலம் வெகு தூரமில்லை எனவே அணுகுண்டு எனும் பெரும் அழிவை ஏற்படுத்தும் போர் கருவி பயன்பாடு முறையல்ல என்றும் கூறினார்கள். பிரபல விஞ்ஞானி அல்பிரட் ஐன்ஸ்டீன் அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதினர். தனது கடிதத்தில் அவர், இந்த குண்டினை எங்காவது ஒரு பாலை வனத்தில் வெடித்துக்காட்டி எதிரி நாடுகளை சரணடைய செய்யலாம். இந்த போர் கருவி ராணுவ வீரர்களை மட்டுமல்ல உள்ளபடியே சாதாரண மக்களை தான் பெரும் அளவில் பாதிக்கும் எனவும் வாதிட்டார். இவைகளை பொருட்படுத்தாத அமெரிக்க தனது மேலாண்மையை நிறுவ இந்த குண்டுகளை ஒரு நகரத்தின் மெது மட்டுமல்ல இரண்டு நகரத்தின் மீது போட்டு தம்மை வலியவராக காட்டிக்கொண்டது. ஒரே குண்டில் நாடு நகரங்களை அழித்துவிடுவேன் என அனைவரையும் அச்சுறுத்தவே இந்த குண்டு பயன்படுத்தப்பட்டது என ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.

ஆயினும் அமெரிக்க அனுகுண்டினை ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்தியது. தனது வலிமை உலகில் பறைசாற்ற வேண்டும்; இரண்டாம் உலகப் போருக்கு பிறகு தான் ஒரு வல்லரசு ஆகவேண்டும் என்பதே குறிக்கோள். உலக வரலாற்றில் இரண்டு முறை அணுகுண்டு போருக்காக உபயோகபடுத்த பட்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் இறுதிக் கட்டத்தில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட குண்டுகள் தாம் இவை. இது வரை போருக்காக பயன்படுத்தப்பட நிகழ்வு இவைகள் தான். ஆயினும் அணுகுண்டுகள் சர்வதேச அரங்கில் மற்றவர்களை அச்சுறுத்த பயன்பட்டு வருகிறது.

பாரபட்ச அணுஆயுத பரவல் தடுப்பு ஓப்பந்தம் 

ஹிரோஷிமா நாகசாகி குண்டு வீச்சுகளுக்கு பிறகு, இன்றுவரை சுமார் இரண்டாயிரம் தடவைகள் சோதனைகளுககாக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கபட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு சோவியத் யூனியண் தனது முதல் அணுஆயுதத்தை சோதனையைச் செய்தது. அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த கடும் ஆயுத போட்டியின் விளைவாக, 1950களில் ஹைட்ரஜன் அணுகுண்டு கண்டுபிடிக்கபட்டது. 1960களில் எற்பட்ட ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியினால், அணுஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு மேலை நாடுகள் வளரும் நாடுகளை அச்சுறுத்த அணுஆயுதங்களை பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்க, இரசியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வட கொரியா ஆகியவை அணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகள். பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற ஐயம் உள்ளது: உதாரணமாக, இஸ்ரேல். தென் ஆப்ரிக்கா வெள்ளை ஆதிக்கத்தில் இருந்தபோது அணுஆயுதத்தை செய்தது; கருப்பின மக்கள் விடுதலைக்கு பிறகு, நெல்சன் மண்டேலா தனது நாடு அணுஆயுதங்களை ஒழித்து அனுஆயுதமற்ற நாடக மாறும் என அறிவித்தார்.

அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா உலகில் முதலாவது இடத்தில் இருக்கிறது. ஆயினும், சில நாடுகளை நம்ப முடியாது; அவர்கள் அணுஆயுதத்தை வைத்திருப்பது ஆபத்து எனக்கூறி அமெரிக்க சில நாடுகளை குறிப்பாக தாக்கி வருகிறது. அண்மைகாலமாக, ஈரான் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாற்றுகிறது. இது போன்று ஆதாரமே இன்றி குற்றம் சுமதி தான் ஈராக் மீது அமெரிக்க படை எடுத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சர்வதேச அரங்கில் நாடுகளிடையே ஏற்ற தாழ்வுகளை உருவாகவும் அணுஆயுத அரசியல் பயன் படுத்தப்படுகிறது. சர்வதேச அளவில் அணுஆயுத நாடுகள் அணுஆயுத அற்ற நாடுகள் என பிரிவு படுத்தி நாடுகளிடையே பாரபட்சம் உருவாக்கியது அமெரிக்க. அணுஆயுத மேலை நாடுகள் தமது ராணுவ பலத்தினை கொண்டு ஏனைய நாடுகள் மீது தமது மேலாண்மையை நிலைநாட்ட முயல்கிறது.

ஐந்து அணுஆயுத நாடுகள் இணைந்து அணுஆயுத பரவலை தடுக்க வழிசெய்யும் ஓர் ஓப்பந்ததை (NPT) உருவாக்கி, மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்துகின்றன. அணுஆயுத பரவல் தடுப்பு ஓப்பந்ததில் சரத்துகள் விவாதத்துகுரியவையாக; பரபட்சமனவை. அணுஆயுத ஒழிப்பு குறித்து எவ்வித தீர்மானமான வாக்குறுதிகளும் இல்லை. அனால் வேறு நாடுகள் அனுஆயுதத்தினை வைத்திருக்க கூடாது என்கிறது இந்த அணுஆயுத பரவல் தடை சட்டம். எனவே இந்திய உட்பட சில நாடுகள் இந்த ஒப்ந்தத்தை ஏற்க்க முடியாது என நிலைப்பாடு எடுத்தன. இதன் காரணமாக இந்தியாவின் அணு ஆற்றல் உற்பத்திக்கு உதவமுடியாது என அமெரிக்க மறுத்ததோடு அல்லாமல், வேறு நாடுகளும் உதவக்கூடாது என வற்புருத்திவருகிறது. தான் மட்டும் அணுகுண்டுகளை தேக்கி வைக்கலாம், அனால் ஏனைய நாடுகளுக்கு அந்த உரிமை இல்லை என்பது ஏற்கமுடியாது என இந்திய தார்மிக நிலைப்பாடு எடுத்துவந்துள்ளது. அணுஆயுதங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்; அதற்கான சர்வதேச ஒப்பந்தம் வேண்டும் எனவும் இந்திய கூறி வருகிறது.

1990 களின் தொடக்கத்தில், பனிப்போர் முடிவுற்ற சூழ்நிலையில, அமெரிக்காவும், ரஷ்ய கூட்டமைப்பும், தம் அணுஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வதாக அறிவித்தன. அனால் நடைமுறையில் இது செயல்பாட்டில் வரவில்லை என்பது மட்டுமல்ல புதுப்புது ஆயுதங்கள், விண்வெளியில் போர் கருவிகள் என ஆயுதத்குவிப்பை அமெரிக்க செய்துவருகிறது. கியூபாவுடனான போர் முதற்கொண்டு, நேரடியாகவும் சூசகமாகவும் அமெரிக்க தனது அணுஆயுதங்களை பயன் படுத்துவேன் என அச்சுறுத்தி வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அணுகுண்டு – போர் குற்றம்

இந்த அணுகுண்டு வீச்சினால் உலகம் இதுவரை சந்தித்திராத அழிவு; அவலம் ஏற்பட்டது. குழந்தைகள், பெண்கள், முப்படைந்தோர் என எவ்வித பாரபட்சமும் இன்றி, எந்த நெறிமுறையும் இன்றி அணுகுண்டு கூட்டுக் கொலை செய்தது. இந்த குண்டு வெடிப்பு மனித நேயம் உள்ளவர் அனைவரின் மனசாட்சியை உலுக்கி எழுப்பியது. போரே மனித நேயத்திற்கு விரோதமானது என்றாலும், குறிப்பாக அணுஆயுத பயன்பாடு மனிதகுலத்திற்கு எதிரான குற்ற செயல் என சர்வதேச அரங்கில் கருத்து உருவானது. போரில் பொதுவாக போர்வீரர்களை மட்டும் தான் தக்க வேண்டும் என்ற போர் நெறி உண்டு. பொது மக்களை தக்க கூடாது என்பது விதி. போரின் நடுவே தப்பிதமாக பட்டுவிட்ட பொது மக்கள் குண்டு வீச்சில் மடியலாம்; அனால் வேண்டும் என்றே குறிவைத்து பொது மக்களை; ஆயுதம் எந்தாத மக்களை கொள்வது போர் குற்றம் என சர்வ தேச சட்டம் கூறுகிறது. அனுஆயுததினால் போர்வீரர்களை விட பல மடங்கு பொது மக்கள் மடிவர்; ஒரு நகரமே அழிந்துபோகும். எனவே அணுகுண்டு பயன் படுத்துவது, பயன்படுத்துவதாக அச்சுறுத்துவது எல்லாமே போர்குற்றம் என சர்வதேச நீதிமன்றம் (பெரும்பான்மை நீதிபதிகள் முடிவு) அறிவித்துள்ளது. ஆயினும் இந்து உலகம் முழுமையும் உலகை ஒரு முறை என்ன பல முறை அழிக்க தேவையான அணுஆயுதங்கள் குவிந்து கிடக்கின்றன. அணுஆயுதங்களை விடாப்பிடியாக வைத்திருக்கும் மேலை நாடுகள், குறிப்பாக அமெரிக்க, உலக அரங்கில் தாதாவாக செயல்பட்டு மற்ற எல்லா நாடுகளின் மீதும் தமது மேலாண்மையை திணிக்க வேண்டும் என்ற நோக்கம் தான் இதில் தென்படுகிறது.

சர்வதேச உறவுகளில் போரின் பயன்பாடு

போர் என்பதை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் நாடுகள் தங்களுக்கிடையான பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பது சர்வதேச விதிமுறை. ஆனால் போர் என்பதை தனது ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்தி வந்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஈரானில் உருகுவேயில் கிரேக்க நாட்டில், சீனாவில் பிலிப்பைன்ஸ் புர்டோ ரிகோ, கொரியா, ஈரான், வியத்னாம், கவுத்தமால, எகிப்து, லெபனான், லாவுஸ், கியூபா, இந்தோனேசிய, டொமினிக்கன் ரிபப்ளிக், கிரெனடா, நிகராகுவா, ஹைடி என பற்பல நாடுகளில் தனது ராணுவ வீரர்களை இறக்கி போரிட்டுள்ளது; இராணுவ புரட்சிக்கு வழிவகுத்துள்ளது. சமிபத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது அமெரிக்க போர் நாம் அனைவரும் அறிந்ததே. அமெரிக்க உலகின் ஒரே வல்லரசு. தனது ஆயுத பலத்தால் ஏனைய நாடுகளை தனக்கு அடங்கி நடக்க நிர்பந்திக்கிறது. இதன் தொடர்ச்சியே போர்கள். போர் வழி தீர்வு கிடைக்காது. சமாதானம் ஏற்படாது. இன்று முடிசூட மன்னனாக தன்னை கருதிக்கொள்ளும்

புவி வெப்பமடைதல்

புவி வெப்பமடைதல் (global warming) இன்று உலகை அச்சுறுத்தும் உலகளாவிய பிரச்சினையாகும். உள்ளபடியே சூரியனிலிருந்து 1460 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நமது பூமி சராசரி பதினேழு டிகிரி வெப்ப (குளிரான !!!) நிலையில் தான் இருக்க வேண்டும். காஷ்மீர் போல; ஆனால் புவியின் சராசரி வெப்ப நிலை சுமார் முப்பத்தியிரண்டு டிகிரி ஆகும். அதாவது பதினைந்து டிகிரி அதிக வெப்பம். புவியின் சராசரி வெப்ப நிலை வெறும் பதினேழு டிகிரி என இருந்திருந்தால் இங்கு உயிர் தோன்றியிருக்குமா என்பதே கேள்விக்குறி. உறை குளிர் நிலையிலிருந்து வாழ்வுக்கு உகந்த முப்பத்திரண்டு டிகிரி வெப்பம் எப்படி ஏற்படுகிறது?

கிரீன் ஹவுஸ் எபக்ட் (Green house effect) எனப்படும் பசுங்கூட விளைவுதான் இதற்கு காரணம். பசுங்கூட விளைவு என்பது என்ன? மலை பகுதி மற்றும் குளிர் பிரதேசங்களில் தாவரங்களை வளர்க்க சிக்கல் இருக்கும். போதுமான வெப்பம் இல்லாமல் குளிரில் தாவரங்கள் பட்டுப்போகும். தாவரங்களை வளர்க்க இந்த பகுதிகளில் பசுங்க்கூடம் (Green house) என்ற அமைப்பை விவசாயிகள் ஏற்படுத்துவர். இந்த பசுங்க்கூடங்களில் சுற்றுப்புற வெப்ப நிலையை விட சற்று அதிக வெப்ப நிலைஇருக்கும். முன்பு இந்த பசுங்க்கூடங்கள் கண்ணாடி கொண்டு வேய்ந்த கூரை, கண்ணாடி சுவர் என கண்ணாடி வீடு (கிளாஸ் ஹவுஸ்- glass house) போல அமைக்கப் பட்டிருந்தன. கண்ணாடிக் கூரையின் வழி அறையின் உள்ளே சூரிய ஒளி பரவும். பரவிய சூரிய ஒளி தரையில் பட்டு தெறிக்கும். தரையில் படும் ஒளியில் ஒரு பகுதி தரையில் உள்ள பொருட்களால் உட்கவரப் படும். உட்கவரப்பட்ட ஒளி பின்னர் மறுபடி வெளி உமிழப்படும். வெளியே உமிழப்படும் ஆற்றல் பார்வைக்கு புலப்படும் ஒளியாக இருக்காது. தரையில் பட்ட ஒளி மாற்றம் அடைந்து அக சிவப்பு கதிர் (Infra red rays) என வெளிப்படும். கண்ணாடி வழியே ஒளி ஊடுருவும். ஆனால் அக சிவப்பு கதிர் கண்ணாடி வழியே ஊடுருவி பாய முடியாது. செங்கல் சுவற்றின் வழி ஒளி ஊடுருவ முடியாது அல்லவா?; செங்கல் சுவர் ஒளி புக பொருள். அதுபோல, கண்ணாடி ஒளி புகும் பொருளாக இருந்தபோதிலும் அக சிவப்பு கதிர்களுக்கு புகா பொருள். எனவே தரையில் பட்டு தெறிக்கும் ஒளி மறுபடி நிலத்திலிருந்து ஆகாயத்திற்கு பிரதிபலிக்கும்.ஆனால் ஒளியின் ஒரு பகுதி அக சிவப்பு கதிராக மாறி கண்ணாடி அறையில் சிறை பட்டு கிடக்கும். (வெயிலில் நிறுத்தி வைத்திருக்கும் காரின் உள்ளே பெரும் வெப்பநிலை ஏற்படுவதும் இதன் காரணமாக தான். சூரிய ஒளி தோற்றுவிக்கும் அக சிவப்பு கதிர் காரின் மூடப்பட்ட கண்ணாடி ஜன்னல் வழியே வெளியேற முடியாது. ஆகவே உள்ளே வெப்ப நிலை உயரும்)

அக சிவப்பு கதிர் வீச்சு தான் உள்ள படியே வெப்ப கதிர்கள் (thermal radiation). நெருப்புக்கு அருகே இருக்கும் பொது அனல் அடிக்கும் உணர்வு அக சிவப்பு கதிர்கள் நம்மை தாக்குவதால் தான். எனவே கண்ணாடி அறையினில் சிறை பட்ட அக சிவப்பு கதிரின் காரணமாக அந்த அறை சற்றே வெப்பமடையும். மலை பகுதிகளில் மற்றும் குளிர் பிரதேசங்களில் உள்ள குளிர் நிலையில் இந்த கண்ணாடி வீட்டில் வெப்ப நிலை அதிகமாக அமைவதால் தாவரங்கள் எளிதில் வளரும். இன்றும் இவ்வாறு பசுங்கூடங்களை அமைக்கிறார்கள். ஆனால் கண்ணாடி கொண்டு அல்ல. பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஒளி புகும் ஆனால் அக சிவப்பு கதிர் ஊடுருவது என்ற தன்மையுள்ள எந்த பொருளும் பசுங்கூடம் அமைக்க ஏதுவானது.

உள்ளபடியே நமது பூமியை சுற்றி படர்ந்துள்ள வளிமண்டலமும் பசுங்கூட விளைவை ஏற்படுத்தகூடியது. நமது வளிமண்டலம் அடுக்கு அடுக்காக அமைந்துள்ளது. பார்வைக்கு பெரிய விரிந்த ஆகசமாக தெரிந்தாலும், உள்ளபடியே நமது வளிமண்டலம் புவியின் மீது படர்ந்த மெல்லிய போர்வை அவ்வளவே. புவியினை ஆப்பிள் அளவு சுருக்கினால் ஆப்பிள் தொல் அளவு தான் வளிமண்டலம். ஆயினும் இந்த மண்டலம் புவியின் கால நிலை மற்றும் தட்பவெப்ப நிலையை உருவாக்குவதில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.

சூரிய கதிர்கள் அனைத்தும் நேராக வளிமண்டலத்தை ஊடுருவி பாய்ந்து புவித்தரையை அடைந்துவிடமுடியது. தரைக்கு அருகே டீரோப்போஸ்பியர் எனப்படும் அடிவளிமண்டலம் அதற்கு மேல அமைந்துள்ள இடை மண்டல மிசோஸ்பியர் எனப்படும் மீ வளிமண்டலம் முதலிய ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. ஒரு சில கதிர்கள் மட்டுமே புவியின் வளிமண்டலத்திணை ஊடுருவ முடியும். மாவு சலிக்கும் சல்லடையில் ஓட்டையின் அளவிற்கு ஏற்ப மாவு சலிக்கப் பட்டு, போடி மாவு கீழே விழும்; பொடியாத மாவு சல்லடையில் தாங்கும். அதுபோல, சூரிய ஒளியை சல்லடை போல சலித்து ஒரு சில கதிர்களை மட்டுமே நமது வளிமண்டலம் புவியின் நிலம் நோக்கி கடத்துகிறது. எல்லாக் கதிர்களும் புவித்தரையை அடையமுடியாது.

சூரியனிலிருந்து வெறும் ஒளி மட்டுமல்ல, புறஉதாக்கதிர், எக்ஸ்ஸ் கதிர் என பற்பல கதிர்களும் பூமியை வந்தடைகின்றன. இவை ஆபத்து விளைவிக்கதக்கவை ஆகும். புவியின் மீ வளிமண்டல அடுக்கு இத்தகைய கதிர்களை தடுத்து நிறுத்துகிறது. இரண்டே இரண்டு ஜன்னல்கள் மட்டுமே திறந்து சூரிய ஒளியின் இரண்டு பகுதிகள் மட்டும் புவியை அடைகிறது. ஒரு ஜன்னலின் வழி நமது கண்கள் காணும் ஒளி; சிறிது புற ஊத கதிர் கசிகிறது. இரண்டாவது ஜன்னலின் வழி ரேடியோ அலைகள் புகுந்து புவிதரையை அடைகின்றான. ஏனைய கதிர்கள் வளிமண்டல அடுக்கினால் தடுத்து நிறுத்தப்படுகிறது. சூரிய ஒளி படர்ந்து புவி ஒளிர்வதும்; ரேடியோ அலைகள் புகுந்து அதன் வழி நாம் புவியில் இருந்தபடிக்கு பிரபஞ்சத்தை ஆராய முடிவதும் இதன் வழி தான்.

நமது வளிமண்டலம் நம்மை பதிப்பு தரும் கதிர்களிடமிருந்து காப்பாற்றும் போர்வை கவசமாக உள்ளது. புற உதா கதிர் மனிதர்களிடோயே தோல் புற்று நோய் ஏற்படுத்தும். உயிர் தோற்றத்தின் போது இந்த கதிர் மிகுந்து இருந்திருந்தால் முதல் உயிரே கூட தோன்ற முயடியாமல் போயிருக்கும். எக்ஸ்ஸ் கதிர்கள் ஆபத்து; மைக்ரோ மிகு அளவில், வேவ் எனப்படும் நுன் அலைகள் பாதுகாப்பானது இல்லை. இவை எல்லாம் புவியின் வளிமண்டலம் வடிகட்டி விடுகிறது என்பது சிறப்பு. மேலும் மேல் அடுக்கு மண்டலமான மீ வளிமண்டலம் சூரியனிலிருந்து எச்சமாக வரும் அக சிவப்பு கதிரை வடிகட்டி விடுகிறது. ஆதலினால் சூரியனிடமிருந்து அக சிவப்பு வெப்ப கதிர்கள் புவியின் தரையை அடைவதில்லை. சூரியனின் சுட்டெரிக்கும் அனல் உள்ளபடியே நேரடியாக சூரியனின் அனல் அல்ல! அப்படியாகின் வெய்யில் காலத்திலும், நாடு உச்சி நண்பகலிலும் அனலாக உணருவது எப்படி?

புவியின் தரையில் ஏற்படும் வெப்ப கதிர்கள் சூரிய ஒளியிலிருந்து தான் வருகிறது. சூரிய ஒளி புவி தரையில் படும் போது சிறிதளவு ஒளி அக சிவப்பு கதிர் என உருமாற்றம் பெறுகிறது. இந்த அக சிவப்பு கதிர் நிலத்திலிருந்து அனலாக பரவுகிறது. கால் பாவ முடியாத படிக்கு நிலம் வெப்பமடைவது இதன்வழி தான்.

இந்த அக சிவப்பு கதிர் மறுபடி ஆகாயம் நோக்கி படரும் போது முதலில் புவிப்பரப்பின் மேல் உள்ள அடி வளிமண்டலத்தில் பாய்கிறது. அடி வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளது. இந்த கார்பன் டை ஆக்சைடு அக சிவப்பு கதிர்களை உறிஞ்சும் தன்மை கொண்டது. புவியிலிருந்து மேல் நோக்கி, விண்வெளி திசையில் படரும் அக சிவப்பு கதிர்களை கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சிவிடுகிறது. அக சிவப்பு கதிர்களை உறிஞ்சிய கார்பன் டை ஆக்சைடு அணு தூண்டப்பட்ட நிலையில் அமையும். தூண்டப்பட்ட இந்த அணு மறுபடி அக சிவப்பு கதிர்களை வெளியிடும். இவ்வாறு தூண்டப்பட்ட கார்பன் டை ஆக்சைடு உமிழும் அக சிவப்பு கதிர் நாற்புறமும் வீசும் என்பதை சொல்ல தேவையில்லை. உமிழப்பட அக சிவப்பு கதிரில் ஒரு பகுதி விண்வெளி நோக்கி வீசப்பட்டு விடும். ஆனால் ஒரு பகுதி மறுபடி புவிதரை நோக்கி பாயும். இவ்வாறு புவிதரை நோக்கி பாயும். எல்லா திசைகளிலும் அக சிவப்பு கதிர் பரவும். இவ்வாறு பரவும் அக சிவப்பு கதிரில் ஒரி பகுதி மறுபடி பூமி நோக்கி பாயும். அக சிவப்பு கதிரையே ‘சூரியன்’ தரும் அனல் என நாம் உணர்கிறோம்! கவிஞர்கள் சுட்டெரிக்கும் சூரியன் என கவிதை பாடுவது எல்லாம் அறிவியல் நோக்கில் சரியில்லை. பாவம், சூரியன். அதனை பழிப்பது சரியல்ல.

பசுங்கூட வாயுக்கள்

கார்பன் டை ஆக்சைடு குறித்து இங்கு நாம் கூறினோம். ஆயினும், கார்பன் டை ஆக்சைடு தவிர, கார்பன், நீராவி, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன், கிளோரோபோரோகார்பன் (Cloroforocarbon- CFC) முதலிய வாயுக்கள் எல்லாம் இந்த பணியை செய்யும் திறன் வாய்ந்தவை. இவை எல்லாம் அக சிவப்பு கதிரை உறிஞ்சி மறுபடி நாற்புறமும் அக சிவப்பு கதிரை உமிழக்கூடியவை. இவ்வாறு அக சிவப்பு கதிரை உறிஞ்சி உமிழும் வாயுக்களை பசுங்கூட வாயுக்கள் என்பார்கள்.

கடுகு சிறுத்தாலும் கராம் குறையாது என்பார்கள்; சிறிய கடையாணி பெரிய குடைவண்டியை குடைசாய்க்க வல்லது. உள்ளபடியே நமது வளிமண்டலத்தில் இந்த பசுங்கூட வாயுக்களின் அளவு மிக மிக சொற்பமே ஆகும். மொத்த வளிமண்டலத்தில் நைடிரஜனின் அளவு 78% ஆக்சிஜனின் அளவு 21%. ஏன் ஆர்கான் கூட 1% அளவு. ஆனால் பசுங்கூட விளைவு ஏற்படுத்தி நமது பூமியை வாழ்க்கைக்கு உகந்ததாக மற்றும் கார்பன் வெறும் 0.0390 அளவு தான்! நீராவி 0.4% அளவு. ஏனைய பசுங்கூட வாயுக்கள் எல்லாம் சேர்த்து 0.01% அளவு தான்.

மூர்த்தி சிறியது கீர்த்தி பெரியது என்பது போல கார்பன் முதலிய பசுங்கூட வாயுக்கள் சதவிகித கணக்கில் மிக சொற்பமாக இருந்தாலும் புவியின் உயிர் கோளத்திற்கு அச்சாணி; கடையாணி. இந்த பசுங்கூட வாயுக்கள் அளவு சிறுது மாறுபட்டாலும் புவியின் தட்ப வெட்ப நிலை பெரிதும் மாறும்.

நீராவி, மீதேன் என பற்பல பசுங்கூட வாயுக்கள் இருந்தாலும், கார்பன் குறித்துதான் அறிவியலாளர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். சர்க்கரை நீரில் கரையும் தான்; ஆனால் எவ்வளவு சர்க்கரையை வேண்டுமென்றாலும் நீரில் கரைக்க முடியாது அல்லவா? குறிப்பிட்ட நிலைக்கு பிறகு சர்க்கரை கரைக்க முடியாது. நீரின் அடியில் தங்கிவிடும். அதுபோல குறிப்பிட வெப்ப நிலையில் காற்றில் குறிப்பிட்ட ஈரப்பதம் தான் இருக்க முடியும். அதாவது நினைத்தபடிக்கு நீராவியின் அளவை கூட்டியும் குறைக்கவும் முடியாது. ஆனால் கார்பன் அளவினை கூட்ட முடியும்; குறைக்க முடியும்.

கார்பன் போன்ற பசுங்கூட வாயுக்களின் அளவு குறைந்தால் என்னவாகும்? கார்பன் அளவு குறையகுறைய நிலத்திலிருந்து விண்வெளி நோக்கி பரவும் அக சிவப்பு கதிர் உறிஞ்சப்படுவது குறையும். பெருமளவு அக சிவப்பு கதிர் விண்வெளிக்கு பிரதிபலிக்கப் பட்டபின் புவியின் வெப்ப நிலை குறையும். புவியில் படரும் அக சிவப்பு கதிர் குறைந்து போவதால் புவி குளிரும். புவி குளிர்ந்து பனி கோளமாக மாறும். புவியில் பனியுகம் உருவாகும். கார்பன் அளவு கூடினால் இதற்கு நேர்மாறாக புவி வெப்ப நிலை உயரும். அதாவது வளிமண்டலத்தில் கார்பன் அளவிற்கு ஏற்ப புவியின் காலநிலை மாற்றம் காணும்.

வளிமண்டலத்தில் கார்பன் அளவு

பொதுவாக வளிமண்டலத்தில் கார்பன் அளவு சதவிகித கணக்கில் அளவிடுவதில்லை. இரண்டு ஊருக்கு இடையே தொலைவை கிலோமீட்டர் என்ற அளவையில் அளந்தாலும், ஆடை தைக்க துணி மீட்டர் கணக்கில் தான் அளவிடுகிறோம். அதுபோல சொற்ப அளவில் உள்ள கார்பன் அளவிட பத்து லட்சத்தில் பங்கு என பொருள் தரும் ppmv (பார்ட்ஸ் பெர் மில்லியன் முகத்தல் அளவையில்) என்ற அளவை பயன்படுத்தபடுகிறது. அதாவது குறிப்பிட வளிமண்டலத்தை பத்து லட்சம் துண்டுகளாக பிரித்தால் அதில் கார்பன் பங்கு எத்துனை பங்கு என்பதுதான் இந்த அளவை. இன்று வளிமண்டலத்தில் கார்பன் அளவு 385 ppm

வளிமண்டலத்தில் கார்பன் அளவு 200 ppm க்கு குறைந்தால் புவி குளிர்ந்து உறைந்து போய் பனியுகம் உருவாகும். கார்பன் அளவு 250 ppm க்கு மேல் உயர்ந்தால் புவி சற்றே வெப்பமடைந்து வேனில் யுக காலநிலை ஏற்படும். உள்ளபடியே புவி பெரும்பாலும் பனி யுகத்தில் தான் இருக்கும். சில பத்தாயிரம் ஆண்டுகள் தான் இரண்டு பனி யுகங்களுக்கு இடையில் வேனில் யுக பூமி உருவாகும். பனி விலகி தாவரங்கள் செழித்து வளரும். பல்வேறு உயரிகள் பல்கிபெருகும். இன்று நாம் இரண்டு பனி யுகங்களுக்கிடைலான வேனில் யுகத்தில் உள்ளோம். கடந்த சுமார் 10000 ஆண்டுகளாக இந்த வேனில் யுகம் புவியில் நிலவுகிறது. நடப்பில் உள்ள வேனில் யுகத்தை ஹோலோசேன் (Holocene) யுகம் என அழைக்கின்றனர். அதற்கு முன்பு ** என்ற பனி யுகம் இருந்தது. உடல் முழுவதும் மயிர் நிறைந்த மமூத் எனும் பெரும் உருவு கொண்ட யானை இந்த பனி யுகத்தில் வாழ்ந்தது. பனி யுகம் முடியும் தருவாயில், மனிதர்களால் வேட்டையாடப்பட்டு இந்த மமூத் எனும் வகை யானை அழிந்துபட்டது. சுமார் 1,25,000 ஆண்டுகள் முன்பு எமியன் (Eaminan) என்ற வேனில் யுகம் இருந்தது. கடந்த 7,00,000 ஆண்டுகளில் ஏழு முறை பனியுகம் / வேனில் யுகம் என மாறி மாறி வந்துள்ளது. பொதுவே வேனில் யுகம் சுமார் 12000-13000 ஆண்டுகள் தான் நீடிக்கும். மீதமுள்ள காலம் பனி யுகம் தான்.

இந்த பனி யுகத்திற்கு முன்பும் வேனில் யுகம் வந்தது. அந்த சமயத்தில் புவியில் அதிகபட்சமாக வெறும் 280 ppm அளவு கார்பன் தான் இருந்ததது. அதாவது இன்று வளிமண்டலத்தில் உள்ள கார்பன் -385 ppm - இதற்கு முன்பு இருந்த கார்பன் அளவைவிட வெகு அதிகம். கடந்த 4,50,000 ஆண்டுகளில் புவி சந்தித்துள்ள வளிமண்டல கார்பன் அளவை விட இன்று உள்ள கார்பன் அளவு வெகுவாக உயர்ந்துள்ளது என்ற செய்திதான் அறிவியலாளர்களை அதிர்சிக்குள்ளகியுள்ளது. கடந்த 4,50,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கார்பன் இன்று உள்ளது. 180 ppm முதல் அதிகபட்சமாக 280 ppm வரை தான் இருந்துள்ளது.

1850 களில் தொழிற்புரட்சிக்கு பிறகு தான் வளிமண்டல கார்பன் அளவு உயரத்துவங்கியது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 18590ல் 280ppm என இருந்த கார்பன் அளவு 1998ல் 364 என உயர்ந்தது. 2006ல் 380 என இருந்தது. இது உயர்ந்து 2009ல் 385 ppm என்ற நிலையை எட்டியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக உலக வெப்ப நிலை சுமார் ஒரு டிகிரி அளவு கூடியுள்ளதாக கருதப்படுகிறது. கார்பன் அளவு 450 ppm என கூடினால் உலக வெப்ப நிலை சுமார் 2- 3 டிகிரி உயர்ந்து போகும். கடந்த பணியுகத்திர்க்கும் வேனில் யுகத்திற்கும் இடையே வெறும் ஐந்து டிகிரி தான் வேறுபாடு. எனவே சுமார் நான்கு ஐந்து டிகிரி வெப்ப நிலை உயர்ந்தால் புவியின் சுற்றுச்சுழல் அழியும் என விஞ்ஞானிகள் அச்சப்படுகின்றனர். எனவே தான் 450 ppm என்பதை அதிகபட்ச எல்லை என கருதுகின்றனர். இந்த லட்சுமன் கோட்டை தாண்டினால் உலக கால நிலை தாறுமாறு அடையும் எனவும் கருதுகிறார்கள்.
உள்ளபடியே காலம் தோறும் வளிமண்டல கார்பன் அளவு குறைந்தும் கூடியும் வந்துள்ளது. இது இயற்கை போக்கு. மற்றம் என்பதுதானே இயற்கை நியதி. கடலியல் சுழற்சி; பனிப்பாறை மாற்றம்; புவித் தட்டு நகர்வுகள்; எரிமலைச்சீற்றங்கள் போன்ற செயல்கள் வளிமண்டல கார்பன் அளவை மற்றும். இதன் காரணமாக கால நிலை மற்றம் ஏற்படும். பனி யுகம்; வேனில் யுகம் என மாறி மாறி அமையும். சூரிய ஒளிச்செறிவு, சூரிய சுழற்சி; புவி மைய வேறுபாடுகள் முதலியவையும் காலநிலை மாற்றத்திற்கு காரணமாகலாம். இருப்பினும் இது போன்ற இயற்கை நிகழ்வுகள் வழி நிகழும் காலநிலை மாற்றம் மிக மெல்ல மெல்ல மெதுவாக பற்பல நூற்றாண்டுகள் கொண்டு மாறும். தீடிர் மாற்றமாக இராது.

ஆனால், சமீப ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ள எச்சரிக்கை சமிக்கைகள் தெரிவிப்பது. வேகமான புவி வெப்பமடைதலுக்கு காரணம் இயற்கை நிகழ்வுகள் அல்ல இவை மனித நடவடிக்கைகளால் நிகழ்பவை என்பதாகும். 1988-ல், உலக வானிலை மையமும் (WMO) ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் திட்டமும் (UNEP) இணைந்து மனித செயல்களினால் உண்டாக்கப்படும், காலநிலை மாறுபாடுகள் குறித்த ஆபத்தினை ஆய்வு செய்வதற்கு காலநிலை மாற்றம் மீதான அரசாங்கங்களுக் கிடையேயான குழுமத்தை ஏற்படுத்தியது. 1990-ல், ஐக்கிய நாடுகள் சபை, காலநிலை மாறுபாடு குறித்த உடன்படிக்கை வடிவத்திற்கான சர்வதேச குழுவை (UNFCCC) உருவாக்கியது. இந்த உடன்படிக்கைக்கான வரையறையானது, சமகால காலநிலை மாறுபாட்டுக்கு மனித செயல்பாடுகளே தோற்றுவாய் என்று விளக்குகிறது.
.
புவி வெப்பமடைதல்- அரசியல் 

மனித செயல்பாடு தான் புவி வெப்பமடைதலுக்கு கரணம் என்பது இன்று வெறும் அறிவியல் கருதுகோள் அல்ல; உறுதியான முடிவு. ஆண்டுதோறும் மேலும் மேலும் அதிக கார்பன் மாசினை நாம் வளிமண்டலத்தில் புகுத்திக்கொண்டிருக்கிறோம். பெருகி வரும் தொழில்மய நடவடிக்கைகளும் அதனால் விளையும் பெருங்கழிவுகளும் (அனல் மின் திட்டங்கள்,துறைமுகங்கள், சுரங்க நடவடிக்கைகள், உரக்கழிவுகளை அதிகரிக்கும் விவசாயத் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்கள், நகர்மயமாதலால் விளையும் கழிவுகள், பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்தும் போக்குவரத்து வாகன அதிகரிப்பு, போன்றவை) வெப்ப நிலை அதிகரிப்பிற்குக் காரணாமாக உள்ளன. இதன் தொடர் விளைவாக புவியின் கால நிலை மாற்றம் அடைந்துவிடலாம் என புவி காலநிலையியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அச்சப்படுகின்றனர். ஆகையால் புவியில் ஆண்டுதோறும் ஏற்படும் மாசின் அளவு குறைக்கப்படவேண்டும்; உடனடியாக இன்று உள்ள அளவிலாவது கட்டுப்படுத்ததப் படவேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.. என்ன செய்வது. யார் தான் பூனைக்கு மணி கட்டுவது?

முதலில் அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகள் மனித செயல்களால் புவி வெப்பமடைகின்றது என்கிற போக்கையே ஏற்க மறுத்தனர். இயற்கை போக்கில் வளிமண்டல கார்பன் அளவு மாறுதலடைகிறது எனவும், இதற்கு மனிதர்கள் பொறுப்பில்லை எனவும் கூறிவந்தனர். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்பது போல சிக்கல்-பிரச்சினையே இல்லை என்று ஒதுக்கிவிட்டனர்.

ஆனால் காலபோக்கில் புவி வெப்பமடைதல் மெய் என்பது உறுதியானதும் தமது நிலைபாட்டை மாற்றிக்கொண்டனர். ஊர் கூடி தேர் இழுப்போம் என்கின்றனர். உலகில் எல்லா நாடுகளும் சமமாக பொறுப்பு ஏற்க வேண்டும் என அமெரிக்க வாதாடத்துவங்கியது . அசப்பில் இது நியாயமானது போன்று தோன்றலாம்.

இந்தியாவை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் இன்றும் (2001 கணக்குப்படி) 112401 கிராமங்கள் மின் வசதி இல்லாத கிராமங்கள். சுமார் 56.48% கிராமப்புற வீடுகளில் மின் வசதி இல்லை. உலகில் மின்வசதி இல்லாதவர்களில் 35% இந்தியர்கள். எனவே தான் சீனாவோடு ஒப்பிட்டு பார்த்தல் நமது கார்பன் மாசு குறைவாக இருக்கிறது. இதுகுறித்து பெருமிதமல்ல கவலை கொள்ளவேண்டும்.

இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருக வேண்டுமெனில் தொழில் வளர்ச்சி வேண்டும். பல தொழிற்சாலைகள் திறக்கப்படவேண்டும். அவ்வாறு தொழிற்சாலைகள் திறக்கப் பட்டால்; இந்திய குடி மக்களுக்கு அடிப்படை வசதிகள்- குடிநீர், மின் வசதி முதலிய – உள்ளபடியே அளிக்கப்பட்டால் இந்திய மென்மேலும் மின்சாரம் முதலிய உற்பத்தி சாய வேண்டும். இதன் காரணமாக கார்பன் மாசு அதிகரிக்கும். முன்பு இருந்ததை விட இந்தியா அதிக கார்பன் மாசு செய்ய வேண்டிவரும்.

சராசரி இந்தியர் நபருக்கு ஆண்டுக்கு 1.3 டன் கார்பன் மாசு ஏற்படுகிறது; அதே சமயம் சராசரி அமெரிக்கர் ஆண்டுதோறும் 20 டன் கார்பன் மாசு செய்கிறார். இதை மறைத்து, இந்திய மொத்தமாக வெளியிடும் கார்பன் மாசு 161 கோடி டன் கார்பன் அமெரிக்க வெளியிடும் மாசு 583 கோடி டன் கார்பன் எனக்கூறி இரண்டு தரப்பாரும் சமமான பொறுப்பு ஏற்க்க வேண்டும் என அமெரிக்கா வாதிடுகிறது. ஜெர்மனி 78 கோடி டன் கார்பன் மாசு செய்கிறது; ஆனால் சராசரி ஜெர்மானியர் வேயளியிடும் மாசு 9.5 டன்; சீனா வெளியிடும் மாசு 653 கோடி டன் கார்பன்; சராசரி சீனர் வெளியிடும் மாசு 4.3 டன் அகவே இந்திய சீனா போன்ற வளரும் நாடுகள் அமெரிக்கா அல்லது ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கு சமமாக பொறுப்பு ஏற்க வற்புறுத்துவது முறையாகாது.

இன்று சராசரி அமெரிக்கர் இந்தியரை போல பத்து ஆயிரம் மடங்கு அதிக மின் ஆற்றலை பயன் படுத்துகிறார். மின் வசதியே இல்லாத; இரவில் மின் விளக்கு வசதி இல்லாத இந்தியாவையும், மிகு அதிக அளவில் மின் ஆற்றலை பயன் படுத்தும் அமெரிக்கரரையும் ஒரே தட்டில் வைத்து நிறுத்து பார்க்க முடியாது. ஆகவே இந்தியா போன்ற வளரும் நாடுகளும், ஏற்கனவே வளர்ந்த நாடுகளும் ஒரே அளவு பொறுப்பு ஏற்க கூறுவது பொருத்தமாக இராது; நியாயம் கிடையாது.

அதுமட்டுமல்ல. இன்று உள்ள பிரச்சினை கடந்த நூறு இருநூறு ஆண்டுகளாக ஏற்ப்பட்ட ஒன்று. தொழிற்புரட்சியிலிருந்தே வளர்ந்த மேலை நாடுகள் வளிமண்டலத்தை மாசு படுத்தி வருகின்றன. இன்று உள்ள மொத்த கார்பன் மாசில் 29% அமெரிக்க செய்த மாசு; 45% இங்கிலாந்து போன்ற வளர்ந்த மேலை நாடுகள் செய்த மாசு. வரலாற்று மாசில் இந்தியாவின் பங்கு வெறும் 3% தான்; சீனாவின் பங்கு 10% தான். அமெரிக்காவின் மொத்த மக்கட் தொகையை வைத்துப்பார்த்தால் அது வெறும் 5% மாசு தான் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்துள்ளதோ 29% மாசு. இதுவரை செய்கின்ற மாசை எல்லாம் செய்துவிட்டு இன்று இந்திய சீனா போன்ற நாடுகளை சமமான பொறுப்பு ஆக்குகிறது அமெரிக்கா.

வளிமண்டலத்தில் 450ppm அளவு கார்பன் இருக்கலாம்; அதுவே எல்லை எனக்கொண்டால், அந்த அளவு வரை கார்பனை வளிமண்டலத்தில் சேர்க்கலாம். உலகம் முழுமையும் உள்ள மக்களின் பொது சொத்து இது; வளிமண்டல காற்று போல; நீர் போல பொது சொத்து. இந்த சொத்தை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது போல அமெரிக்காவும் மேலை நாடுகளும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, வளரும் நாடுகளையும், பின்தங்கிய நாடுகளையும் வயிற்றில் பெல்டை இறுக்கி கட்டிகொள்ளுங்கள் எனக் கூறுகின்றன.

இந்த வாதம் இன்று செல்லுபடியாகவில்லை. வளரும் நாடுகள் தமது கோரிக்கையை வலியுருத்த வளர்ந்த நாடுகள் வேறு வழியில்லாமல் சற்றேனும் ஏற்க வேண்டி வந்துள்ளது. இந்த நிலையில் தான் சர்வதேச ஏகாதிபத்தியம் குறுக்கு வழி கண்டுபிடித்துள்ளது. அது தான் கார்பன் வியாபாரம். கார்பன் சந்தை.
கார்பன் சந்தை
இது என்ன சந்தை; வியாபாரம்? எடுத்துகாட்டாக ஒரு தொழிற்சாலைக்கு குறிப்பிட கார்பன் மாசு செய்ய அனுமதி உள்ளது. ஆனால் அவர்களின் தேவை ஒதுக்கப்பட்டதிற்கு மேல் கார்பன் மாசு அவசியம் உள்ளது எனக்கொள்வோம். வேறு ஒரு தொழிற்சாலை அவர்கள் மேற்கொண்ட மாசு கட்டுப்பாடு காரணமாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதை விட குறைவான கார்பன் மாசினை தான் செய்கிறார்கள் எனக்கொள்வோம். இந்த இரண்டாவது தொழிற்சாலை தமது சேமிப்பு மாசினை முதலாவது தொழிற்சாலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டலாம். இது போல ஒரு நாடு தனக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட மாசு அளவில் குறைவான அளவே பயன் படுத்தினால் மீதமுள்ள மாசு வாய்ப்பை வேறு ஒரு நாட்டிற்க்கு விற்கலாம். அதுமட்டுமல்ல காடுகள் வளிமண்டல கார்பனை உறிஞ்சி தனக்குள் செமித்துவிடும். இவ்வாறு வளிமண்டல கார்பனை உறிஞ்சி எடுப்பதும் ஒருவகையில் சேமிப்பு அல்லவா? இந்த சேமிப்பையும் விற்பனை செய்யல்லாம்; அல்லது அதற்கு ஈடாக அதிக மாசு செய்துகொள்ளலாம். இதுவே கார்பன் விற்பனை; சந்தை. (உள்ளபடியே காடு வளர்ப்பு என்பது தற்காலிக தீர்வு தான்; காடுகள் வளரும் வரை தான் அவை கார்பனை தன்னுள் வைத்திருக்கும். காடுகள் வளர்ந்த பின்னர், அவை உதிர்க்கும் இலை முதலிய மறுபடி கார்பனை வளிமண்டலத்தில் சேர்க்கும்.)
இதில் எனென்ன பிரச்சனைகள்? முதலாவதாக, இந்த அமைப்பில் மாசின் அளவு குறைவதில்லை; விற்பனை செய்வதால் எல்லாவித மாசு கட்டுப்படும் இறுதியில் வீண்; மொத்த மாசு அளவு அதே அளவு தான் இருக்கும். இது சுற்றுச்சுழலுக்கு உகந்த திட்டம் இல்லை; வியாபார நோக்கு தான் மேலோங்கி உள்ளது.

இரண்டாவதாக, இந்திய சீனா போன்ற நாடுகளை எடுத்துகொளுங்கள். இந்த நாடுகளில் எல்லாம் தமது சுழல் மாசு செய்யும் தொழிற்சாலைகளை மேலை நாடுகள் இடம் மாற்றி அமைத்துள்ளன. இந்த தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் பொருட்களை நுகர்வோர் மேலை நாடினர். ஆனால் இந்த தொழிற்சாலைகள் செய்யும் மாசு வளரும் நாடுகளின் அக்கௌன்ட் புஸ்தகத்தில். அரிசி அவர்களுக்கு; உமி நமக்கு. ஆக இந்த ஏற்பாட்டில் பாவம் ஒரு இடம், பழி ஒரு இடம் என அமைகிறது.

மூன்றாவதாக ஆப்ரிக்கா நாடுகள் போல சில நாடுகள் தமது கார்பன் மாசு ஒதுக்கிட்டை பெரும் தொகைக்கு மேலை நாட்டு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்துவிடல்லாம். இதனால் உள்ளூர் தொழில் வளராது; முன்னேற்றம் என்பது சாத்தியமில்லாது போகும்; ஏற்கனவே வறுமையில் வாடுவோர் அதிலிருந்து மீள வழி அடைபட்டு போகும். ஆப்ரிக்கா நாடுகள் மட்டுமல்ல, போதிய லாபமில்லை என்ற கணக்கில் எந்த தொழிற்சாலையும் தமது உற்பத்தியை குறைத்துக்கொண்டு, தமக்கு ஒதுக்கப்பட்ட கார்பன் மாசு ஒதுகிட்டை விற்பனை செய்து லாபம் பார்க்கலாம்; நழ்டமடைவது தொழிலாளியும் அந்த சமூகமும் தான்.

மாசு கட்டுப்படிற்கு கார்பன் சந்தை தவிர சந்தை பொருளாதாரம் கண்டுள்ள புது வழி மாசு வரி. மாசின் மீது வரி விதிப்பதன் வழி; குறிப்பிட்ட மாசிர்க்கு மேல் கூடுதலாக மாசு செய்தால் அபராதம் என வழி கூறப்படுகிறது. இத்தகைய வரிக, அபராதங்கள் யார் தாளில் விழும்? இவை பயனளிக்கும? 1991ல் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பெட்ரோலுக்கு பேரலுக்கு ஒரு டாலர் வரி விதித்தல் மொத்த உபயோகத்தில் 6.5% பயன்பாடு குறையும் என்பது தெரிய வந்தது. அதாவது வரி விதிப்பின் மூலம் பயன்பட்டு அளவை குறைத்துவிடலாம்; அதன் வழி மாசினை குறைக்கலாம் என்பதுவே இலக்கு. மொத்த பெட்ரோல் பயன்பாடு குறையும்; இந்த குறைப்பை செயப்போவது யார்? மக்கள் தொகையில் ஏழைகளாக உள்ள கடைநிலை 20% மக்கள் தமது ஆற்றல் வாங்கும் சக்தியில் 10\% இழப்பர் எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது சுழல் பாதுகாப்பு வரிசுமையால் திண்டடப்போவது ஏழைகளே.

கார்பன் சந்தைக்கு மாற்றாக சர்வதேச கட்டுப்பாடு; கார்பன் மாசினை படிப்படியாக குறைக்க சர்வதேச ஒப்பந்தம் என முற்போக்காளர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். முன்பு ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததும் சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு கிளோரோபோரோ கார்பன் என்கிற வேதிப் பொருள் தான் ஓசோன் ஓட்டை ஏற்படுத்துகிறது என்பதை கண்டுபிடித்து அதன் பயன்பாட்டின் மீது சர்வதேச கட்டுப்பாடுகள் விதித்தனர். மொன்டீரியல் சர்வதேச ஒப்பந்தம் என இது வழங்கப்படுகிறது. கிளோரோபோரோ கார்பன் பெருமளவில் குளிர்சாதன பெட்டியில் பயன்படுத்தப்பட்டது. கிளோரோபோரோ கார்பன்க்கு மாற்று கண்டுபிடித்து இன்று கிளோரோபோரோ கார்பன் இல்லாத சுழல் பாதுகாப்பான குளிர்சாதன பெட்டிகள் தாம் உலகம் முழுவதும் பயன் படுத்தப்படுகிறது. இந்த சர்வதேச ஒப்பந்தத்தின் படி நவீன தொழில் நுட்பம் வளரும் நாடுகளுக்கு தொழில் நுட்ப பரிமாற்றம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், வளரும் நாடுகள் தமது தொழில் துறையை நவீன படுத்தி, கிளோரோபோரோ கார்பன் பயன்பாட்டினை குறைத்தனர். இன்று கிளோரோபோரோ கார்பன் முற்றிலும் பயன்பாட்டில் இல்லை. ஓசோன் ஓட்டை இன்று அடைபட்டு சீராகிவருகிறது.

அதே போல நான்கு சக்கர வாகனங்களின் மாசு குறைப்பு. ஐரோப்பாவில் விதிக்கப்பட்ட மாசு கட்டுப்பாட்டை பல நாடுகள் ஏற்று தமது நாட்டில் படிப்படியாக அமல் படுத்திவருகின்றனர்.இங்கும் தொழில் நுட்ப பரிமாற்றம் உண்டு. இந்த மாசு கட்டுப்பாடு இல்லாத வண்டிகள் பதிவு செய்யப்படுவதில்லை. எனவே காலப்போக்கில் வாகன மாசு குறையும். முதலில் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் இருப்பார்கள்; ஆனால் காலபோக்கில் மீறுவதை விட ஒப்புவதே லாபம் என விளங்கி வழிக்கு வருவார்கள். இவ்வாறு சர்வதேச ஒப்பந்தம்; கட்டுப்பாடு முதலிய நடைமுறை பயன் தரும் என்பது நமது அனுபவம்.

கட்டுப்பாடுகள், சர்வதேச ஒப்பந்தம், தொழில் நுட்ப பரிமாற்றம் என்பதை விடுத்து கார்பன் சந்தை என்பது மோசடி. வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளும், பன்னாட்டு கம்பெனிகளும் லாபம் பார்க்கவே கார்பன் சந்தை பயன் தரும். உள்ளபடியே மாசு குறையாது; உள்ளவர்- இல்லாதோர் இடைவெளி குறையாது; அதிகரிக்கும்.

கட்டுப்பாடுகள், சர்வதேச ஒப்பந்தம் முதலிய ஒன்றும் புரட்சிகரமான அல்லது கம்யுனிச கொள்கையில்லை. ஆயினும் உலகமயமாக்கல், தரளமயமாக்கல் சந்தை பொருளாதாரம் முதலிய கொள்கை பிடியில் சிக்கியுள்ள உலக ஏகாதிபத்தியம் உலகினை அச்சுறுத்தும் புவி வெப்பமடைதல் பிரச்சினையிலும் சந்தை தீர்வு தான் தேடுகிறது. மாசு குறைப்பு; இயற்கை பாதுகாப்பு; சுழல் பாதுகாப்பு முதலிய பின்னுக்கு தள்ளப்பட்டு சந்தை மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகிறது. உலகம் அழிந்தாலும் கவலையில்லை லாபம் தான் இலக்கு என முதலாளித்துவம் செயல்படுகிறது. .

லாப வெறி மட்டுமே கண்களுக்கு தெரியும் முதலாளித்துவ அமைப்பில் இந்த சர்வதேச பிரச்சனைக்கு தீர்வு உண்டா? இன்று ஏற்படும் கார்பன் மாசின் கணிசமான பங்கு போக்குவரத்து- குறிப்பாக தனியார் போக்குவரத்தில் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படுகிறது. தனியார் போக்குவரத்து குறைந்து பொதுப் போக்குவரத்து ஏற்பட்டால் மாசின் அளவு வெகுவாக குறையும். இன்று லாப நோக்கில் திட்டமிட்ட முறையில் வழக்கொழிந்து போக செய்யும் உற்பத்தி முறையும் கார்பன் மாசுக்கு காரணம். ஒரு பொருள் குறைவான காலமே பயனளிக்கும் விதமாக வடிவமைப்பது; அதன் தொடர்ச்சியாக மக்கள் பழையதை ஒதுக்கி, அடிக்கடி புதிய பொருளை வாங்க செய்வது என்கிற இன்றைய பொருளுற்பத்தி முறை மூலப் பொருள் வீண் மட்டுமல்ல, தயாரிப்புக்கு செலவான ஆற்றல் மற்றும் பொருட்கள் வீணே கார்பன் மாசினை ஏற்ப்படுத்தியது என்பதும் பொருள்.

வளர்ந்த நாடுகள் பொருள் பயன்பாட்டில்; வளிமண்டல கார்பன் மாசு பயன்பாட்டை, தாம் மட்டும் அனுபவித்து ஏனைய நாடுகள் பின்தங்கிய நிலையிலேயே இருக்க வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமல்ல; நியாயமானதும் அல்ல.

சுற்றுச்சுழல் நெருக்கடிக்கு தீர்வு வேண்டுமெனில் இரண்டு முக்கிய சவால்களை சந்திக்கவேண்டும். வீண் செய்யும் பொருள் உற்பத்தி முறை மற்றும் பொருள் விநியோக முறை மாறவேண்டும்; இரண்டாவதாக நிலைத்தகு வளர்ச்சியுடைய சமுகம் ஏற்படவேண்டுமெனில் நாடுகளுக்கிடயிலும்; நாடுகளுக்குள்ளும் ஏற்ற தாழ்வான சமத்துவமற்ற நிலை மாறி சமத்துவம் வேண்டும். சந்தை பொருளாதாரம்; உலகமயமாக்கல் மற்றும் புதிய பொருளாதரக் கொள்கை இதற்கு தீர்வு தராது. எனவே இந்த பிரச்னைக்கு சந்தை பொருளாதாரத்திற்கு வெளியே தீர்வு அவசியம். மேலும் தீர்வு தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேசிய தீர்வாகவும் அமைதல் வேண்டும் என்பதும் தெளிவு.

சமுக ஏற்றத்தாழ்வுகள் அகல வேண்டுமென்றால் உற்பத்தி சக்தி வளர்ந்து பல்கிப்பெருகிய நிலை ஏற்பட வேண்டும். பற்றாக்குறை நிலையில் நிலைதகு சமத்துவம் சாத்தியமில்லை. உற்பத்தி சக்தி வளர்ந்து பெருகிய உற்பத்தியில் தேவையற்ற நுகர்வு இருக்காது. இது முரணாக தோன்றலாம். ஆனால் இதுவே மெய்ப்பாடு. எடுத்துக்காட்டாக தேவைக்கு அதிகமாக நீர் கிடைக்கும் நிலையில் மக்கள் ஓரளவுக்கு மேல் நீரை வீணடிப்பதில்லை. அல்லது நீரை பதுக்கி சேமித்து தனக்கு என ஒதுக்கிக்கொள்வதுமில்லை. இதுதானே நமது அனுபவம். அது போன்றே உணவு தட்டுப்பாடு இல்லாத சுழலில் யாரும் தேவைக்கு அதிகமாக வயிறு முட்ட உண்டு வீணடிப்பதில்லை. மாறாக பகுத்தறிவோடு உணவு நுகர்வு எற்படுகிறது. எனவே சுழல் கவலை கொள்ளும் அதே சமயம் எற்றத்தாழ்வுகளை குறைக்கும் வளர்ச்சி மீதும் அக்கறை வேண்டும். நவீன உலகமயமாக்கல் கொள்கை இதற்கு எதிர்; எற்றத்தாழ்வுகளை வளர்கிறது.

முடிவாக.....
ஒரு நாட்டிற்குள் பணமுதலைகள் அங்குள்ள ஏழை எளிய மக்களை சுரண்டுவது போல, வளர்ந்த மேலை நாடுகள் வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகளை எய்கின்றன. பின்தங்கிய நாடுகள், வளரும் நாடுகளின் வளங்களை சுரண்டி தமது நாட்டில் செல்வத்தை குவித்து அங்குள்ள மக்கள் எதிர்ப்பு குரல் எழுப்பாமல் பார்த்துக் கொள்கிறது மேலை நவீன சமுக அமைப்பு. உலக சமாதானம், உலக சமத்துவம், உலக சுழல் பாதுகாப்பு, நிலைத்தகு வளர்ச்சி முதலிய வலியுறுத்தி போராடுவது தான் இந்த ஹிரோஷிமா தினத்தில் நாம் மேற்கொள்ளவேண்டிய சபதம்.