முதல் பக்கம்

Aug 21, 2012

தேவகோட்டையில் விநாடி வினா

First Published : 13 Aug 2012 10:06:18 AM IST


  தேவகோட்டை, ஆக. 12: தேவகோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், துளிர் விநாடி வினா போட்டிகள் லோட்டஸ் வெங்கடாச்சலம் செட்டியார் பள்ளியில் நடைபெற்றன.  மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 29 பள்ளிகளைச் சேர்ந்த 105 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜசேகரன், ரேணுகா, ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் நடுவர்களாக பணிபுரிந்தனர்.

இதில் 6,7,8 வகுப்பு பிரிவில் நானாக்குடி ஆர்.சி நடுநிலைப்பள்ளி முதலிடமும், தேவகோட்டை முத்தாத்தாள் பள்ளி இரண்டாமிடமும், 9,10 வகுப்பு பிரிவில் நகரத்தார் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், ஜமீன்தார் உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.  11, 12 வகுப்பு பிரிவில் பெத்தாள் ஆச்சி பெண்கள் பள்ளி முதலிடமும், நகரத்தார் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.

வெற்றி பெற்றவர்களுக்கு அறிவியல் இயக்க கிளைத் தலைவர் முனைவர் குமரப்பன் தலமைமையில் செயலாளர் எட்வின், பள்ளி முதல்வர் ராஜீ, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பீட்டர் லெமாயூ ஆகியோர் வழங்கினர். இதில் முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.

மூலம்: தினமணி

No comments:

Post a Comment