முதல் பக்கம்

Dec 27, 2019

வளைய சூரிய கிரகணம்

 2019 டிசம்பர் 26ஆம் தேதி வளைய சூரிய கிரகண நிகழ்வை தேனி மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.. குறிப்பாக கம்பம் வ..சி. திடலில் பனியாரம் சாப்பிட்டுக் கொண்டே நூற்றுக்கும் மேற்பட்டோர் கிரகணம் கண்டு மகிழ்ந்தனர்.. மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சார இயக்கமாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.. மாநிலச் செயலாளர் சுந்தர் ஏற்பாடுகள் செய்திருந்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீராமன், பாண்டி ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.. தேனி முல்லை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்டு மகிழ்ந்தனர். மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன் ஒருங்கிணைப்பில் கிளை நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்டத்தில் தெளிவாக தெரிந்தது: சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

பதிவு: டிசம்பர் 27, 2019 03:45 AM
கம்பம்

தேனி மாவட்டத்தில் சூரிய கிரகணத்தையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேனி அருகே முல்லை நகர், கம்பம், போடி உள்ளிட்ட இடங்களில் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் நேற்று சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. இதனால் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.


முல்லைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர். சிறுவர், சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் பிரத்ேயக கண்ணாடி அணிந்து சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்தனர். கிரகணம் பார்க்க வந்த மக்களுக்கு அறிவியல் இயக்கம் சார்பில் பனியாரம் சிற்றுண்டியாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுந்தர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தேனி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் சூரிய கிரகணத்தையொட்டி தெருவில் உலக்கையை நிறுத்தி வைத்து பொதுமக்கள் சோதித்து பார்த்தனர். கிரகணம் நடந்த நேரத்தில் உலக்கை சரியாமல் நேராக நின்றது. இதை மக்கள் வியந்து பார்த்தனர்.

சூரிய கிரகண நேரத்தில் கோவில்களில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. கிரகண நேரம் முடிந்த பின்னரே கோவில் நடை திறக்கப்பட்டது. தேனியில் காலை 10.30 மணி வரை கிரகணம் தெளிவாக தெரிந்தது.

இதேபோல் கம்பம் வ.உ.சி. திடலில் சூரிய கிரகணத்தை பார்வையிட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோமநாதன், வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த தொலை நோக்கி மற்றும் பிரத்யேக கண்ணாடிகள் மூலம் சூரிய கிரகணத்தை பார்வையிட்டனர்.

Dec 26, 2019

சூரிய கிரகணம் பார்க்க அழைப்பு

கம்பத்தில் வளைய சூரிய கிரகணம் பார்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.இன்று காலை 8:06 மணி முதல் மதியம் 11:12 மணிவரை வானில் வளைய சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதனை சூரிய கண்ணாடிகள் மூலம் பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கம்பம் வ.உ.சி. திடலில் 'வாங்க கிரகணம் பார்க்கலாம். பார்த்துகிட்டே பணியாரம் சாப்பிடலாம். வளைய சூரிய கிரகணம் வானில் ஒரு நிழல் விளையாட்டு,' என, பிரசாரம் செய்து அழைப்பு விடுத்தனர்.

Dec 8, 2019

இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா

தேனி, டிச. 8- 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக தேனியில் ஜான் பென்னிகுயிக் படிப்பகத்தில் - மாநில அள வில் தேர்ச்சிபெற்ற நாளைய விஞ்ஞானிகள் - தேசிய அள வில் பங்குபெறும் இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா 29.11.2019 மாலை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க தேனி மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் மாநில செயலாளர் சுந்தர், மாவட்ட செயலாளர் தெய்வேந்திரன், தலைமை ஆசிரியர்கள் கே. ஜே.கோபிநாத் - வெங்கடேசன் - குப்புசாமி - கவிஞர்கள் கவிக் கருப்பையா கழகப் பொதுக் குழு உறுப்பினர் மு.அன்புக்கர சன் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

பெரியகுளம் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்: ரியாஜில்ராசித், சந்துரு இருவரும் தேசிய அளவில் பங்குபெறும் இளம் விஞ்ஞானிகள் மற்றும் பெரிய குளம் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கள் மற்றும் தேனி கம்மானுர் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள்: முகமது அப்துல்காதர் ஜெய் லானி, கார்த்திகேயன், ரூ.ஜர்ப்ரின், ப.ஸிரின், கே.பாண்டி மீனா, வி.ஸ்ரீபுவியா ஆகியோர் மாநில அளவில் தேர்ச்சிபெற்ற நாளைய விஞ்ஞானிகள் - அரிமா. பெரிய சாமி நினைவு பரிசுகள் வழங் கினார். செட் பவுண்டேஷன் நித்தியானந்தம் நன்றி கூறினார்.




Oct 31, 2019

மந்திரமா தந்திரமா?

அக்.2019ல் டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மந்திரமா தந்திரமா – அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் மா.மகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநிலக் கருத்தாளர் வீரையா மேஜிக் செயல்பாடுகளை செய்து காட்டினார். பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாணவ மாணவியர் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. இந்நிகழ்வு குறித்த செய்திகள் ஊடகங்களில் சிறப்பாக வெளியானது குறிப்பிடத்தக்கது.. 

அதே நாள் மாலை முல்லை நகரிலும் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் காளிதாஸ் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்..

Sep 30, 2019

துளிர் அறிவியல் திருவிழா

பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துளிர் அறிவியல் திருவிழா நடைபெற்றது.. பாடல், கதை, எளிய அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா என முழு நாள் நிகழ்வாகத் திட்டமிடப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது.. கருத்தாளர்களாக நண்பர்கள் வீரையா, முத்துக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள் மணிமேகலை, ஞானசுந்தரி ஆகியோர் செய்திருந்தனர். அவர்களுக்கு மாவட்ட மையத்தின் பாராட்டுகள்.. மாவட்ட, கிளை நிர்வாகிகள் பங்கேற்று இருக்க வேண்டும்.

Sep 20, 2019

பாவ்லோ பிரைரே பிறந்த நாள்

செப்.19 , மாற்றுக் கல்விச் சிந்தனையாளரான பாவ்லோ பிரைரே பிறந்த நாளை முன்னிட்டு பெரியகுளம் கிளை சார்பில் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நெல்லையப்பர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் ஞானசுந்தரி வரவேற்றுப் பேசினார். மாநிலச் செயலாளர் தே.சுந்தர் கருத்துரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், பொருளாளர் மணிமேகலை மற்றும் பெண் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். கிளைப் பொருளாளர் ராம்சங்கர் நன்றி கூறினார்.

Sep 8, 2019

புத்தகங்களுடன் தேநீர் விருந்து நிகழ்ச்சி..

செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் ஆசிரியர்கள் மத்தியில் கல்விசார்ந்த நூல்களை அறிமுகப்படுத்தும் பொருட்டும் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் பொருட்டும் மாநிலம் முழுவதும் புத்தகங்களுடன் தேநீர் விருந்து என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் கம்பம் கிளையின் சார்பில் செப்.5 அன்று மாலை ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாநிலச் செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார். பங்கேற்ற ஆசிரியர்கள் அவர்கள் வாசித்த நூல்களை அறிமுகப்படுத்திப் பேசினர். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார். கிளைச் செயலாளர் சுரேஷ் கண்ணன் ஒருங்கிணைத்தார்.
அதே நாள் தேனி முல்லை நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேனி கிளையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு தேனி கிளைத் தலைவர் தாழைக்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், இணைச் செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிளைச் செயலாளர் ராம்குமார் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
செப்.6 அன்று மாலை உத்தமபாளையம் கிளை சார்பில் ஞானம்மன்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளைத்தலைவர் இப்ராகிம் தலைமை வகித்தார். கிளைப் பொருளாளர் சத்யா வரவேற்றார். மாநிலச் செயலாளர் சுந்தர், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இணைச் செயலாளர் அருணா நன்றி கூறினார். அக்.5 சர்வதேச ஆசிரியர் தினத்தை கிளையின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.

Sep 3, 2019

ஆசிரியர் தினம்: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கட்டுரை, கவிதை, சிறுகதை போட்டி அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களுக்கு கட்டுரை, கவிதை மற்றும் சிறுகதை போட்டி நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈ.ஜெகநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

5 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு "தேர்வும் நானும்' என்ற தலைப்பிலும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு "நான் விரும்பும் வகுப்பறை' என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கு "என்னமோ நடக்குது, மர்மமாக இருக்குது' என்ற தலைப்பிலும், கல்வி ஆர்வலர்களுக்கு "அரசுப் பள்ளிகள் இணைப்பும் அடைப்பும்' என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, "நின்னா தேர்வு, நடந்தா தேர்வு' என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், கல்வி பொதுத் தலைப்பில் அனைத்துப் பிரிவினருக்கும் சிறுகதைப் போட்டி நடைபெறும்.

கட்டுரைகள் 3 பக்கங்களுக்கும், கவிதை 20 வரிகளுக்கும், சிறுகதை 4 பக்கங்களுக்கும் மிகாமலும், சொந்தப் படைப்பாகவும் இருக்க வேண்டும். படைப்புகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் தின விழா போட்டி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 5-தெற்குத்தெரு, கோட்டூர்-625 534 என்ற முகவரிக்கு தபால் மூலமும், ‌t‌n‌s‌f.‌k​a‌l‌v‌i‌k‌u‌l‌u@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற மின்னஞ்சல் மூலமும் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். போட்டி முடிவுகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இணைய தளத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்படும்.

போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பரிசு பெற்ற படைப்புகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெளியாகும் கல்வி மாத இதழில் பிரசுரிக்கப்படும் என்று அறிக்கப்பட்டுள்ளது.

Aug 26, 2019

அன்னஞ்சியில் அறிவியல் திருவிழா

அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, அன்னஞ்சியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது. மேனாள் மாவட்ட்த் தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார்.. சிறப்பு விருந்தினராக கள்ளர் சீரமைப்பின் இணை இயக்குநர் வை.குமார் அவர்கள் கலந்து கொண்டார். ஆசிரியர்கள் அன்பழகன், தேனி கிளைத் தலைவர் தாழைக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. நெல்லை தாமிரபரணி மதியழகன் குழுவினரின் அறிவியல் விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன் நன்றி கூறினார்..

அறிவியல் மனப்பான்மை தினம்

பகுத்தறிவுச் செயல்பாட்டாளரான நரேந்திர தபோல்கர் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஆகஸ்ட்-20ஐ தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக அனுசரிக்க அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கம் அறைகூவல் விடுத்தது. எனவே அந்நாளை அறிவியல் மனப்பான்மை தினமாக அறிவிக்க அரசுகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாவட்ட்த்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மாநிலச் செயலாளர் சுந்தர், மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர்கள் ஜெகநாதன், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்..

May 23, 2019

தமிழ்நாடு அறிவியல் இயக்க கூட்டம்

உத்தமபாளையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை அமைப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். கிளை அமைப்பாளர் ச.அருணா வரவேற்றார். மாநில செயலாளர் தே.சுந்தர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்நோக்கங்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் கிளை தலைவராக சி.முகமது இப்ராகீம், செயலாளராக செ.முத்துப்பாண்டி, பொருளாளராக இரா.சத்யா, துணைத் தலைவர்களாக ஜாக்குலின், வளை யாபதி, இணை செயலாளர்களாக அருணா, ராஜேஸ்வரி தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட இணைசெயலாளர் ஜெகநாதன் வாழ்த்தினர். உத்தமபாளையம் பகுதியில் விஞ்ஞானிகள் சந்திப்பு, மந்திரா தந்திரமா போன்ற நிகழ்ச்சிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டது.