முதல் பக்கம்

Aug 9, 2013

பொன்னம்மாள்பட்டியில் கருத்தரங்கம் & பேரணி:

ஆகஸ்ட்,8 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கடமலை, மயிலை ஒன்றியக் கிளையின் சார்பில் பொன்னம்மாள் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கருத்தரங்கம் மற்றும் பேரணி நடந்தது. தலைமை ஆசிரியர் திருமிகு.லிங்கப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அறிவியல் வளர்ச்சிக்கே.. அறிவியல் அமைதிக்கே.. அறிவியல் ஆக்கத்திற்கே... அறிவியல் உலக ஒற்றுமைக்கே என்னும் முழக்கங்களை எழுப்பியபடியே கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே வந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிளைச்செயலாளர் திருமிகு.இரத்தினசாமி செய்திருந்தார். 120 மாணவர்கள், ஆசிரியர்கள் திருமிகு.ஜெயப்பிரகாஷ், திருமிகு.பாலகிருஷ்ணன், திருமிகு.வள்ளிராணி, திருமிகு.வடிவாம்பிகை ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment