முதல் பக்கம்

Aug 22, 2013

ஜி.கல்லுப்பட்டியில் கருத்தரங்கம் & பேரணி:


ஆக.6 பிற்பகல் பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட முகாம் இணைந்து நடத்திய கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் திருமிகு.முருகேசன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் திருமிகு. பா.செந்தில்குமரன் கருத்தரங்கைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.


100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு.நாகராஜன் துவங்கிவைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.அம்மையப்பன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

No comments:

Post a Comment