முதல் பக்கம்

Aug 8, 2013

டி.வாடிப்பட்டியில் கருத்தரங்கம் மற்றும் பேரணி:


பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் இயக்கம் சார்பில் ஆகஸ்ட்,6 அன்று காலை ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திருமிகு.எஸ்.வாசுகி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு.எம்.கே.மணிமேகலை வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்டத் துணைச்செயலாளர் திருமிகு.எஸ்.ஞானசுந்தரி ஹிரோஷிமா-நாகசாகி: மனிதகுலத் துயரம் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வே.ஜெயந்தி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக அமைதியை வலியுறுத்தி மாணவர்கள், ஆசிரியர்களின் பேரணி நடைபெற்றது. 170 பேர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment