முதல் பக்கம்

Aug 18, 2017

தேனியில் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டு விழா


ஆக.18 அன்று பிற்பகல் தேனி மாவட்டத்தில் கடந்த 2016-17 கல்வியாண்டில் 10, 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற சுமார் 60 பள்ளிகளுக்கான பாராட்டு விழா மாவட்டத் தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஈ.ஜெகநாதன் வரவேற்றுப் பேசினார். மாவட்டத் துணைத்தலைவர்கள் பேரா.செல்வராஜ், ஜான்சன், ஏ.எஸ்.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் தே.சுந்தர் துவக்கிவைத்துப் பேசினார். 




மாவட்டக் கல்வி அலுவலர் (பெரியகுளம்) வீ.செல்வம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பி.என்.கணேஷ் ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினர். முன்னாள் மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் நிறைவுரையாற்றினார். மாவட்டத் துணைத்தலைவர் ஆர்.அம்மையப்பன் நன்றி கூறினார். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன், கிளைச் செயலாளர்கள் ப.ஸ்ரீதர், முருகேசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

No comments:

Post a Comment