முதல் பக்கம்

Aug 9, 2017

அறிவியலுக்காக அணிவகுப்போம் இந்தியா பேரணி


“அறிவியல் வளர்ச்சிக்காக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% நிதி ஒதுக்க வேண்டும். கல்விக்காக 10% நிதி ஒதுக்க வேண்டும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 51 A(h) வலியுறுத்துவதன் படி மக்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வை, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். பாடத்திட்டம் மற்றும் நாட்டின் கல்விக் கொள்கைகள் அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்..” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.9- நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட நகரங்களில் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் சார்பில் அறிவியலுக்காக அணிவகுப்போம் இந்தியா… என்ற பெயரில் பேரணிகள் நடைபெற்றன..


நமது பகுதியில் கம்பம் நகரில்  ஆக.9  அன்று மாலை பேரணி நடைபெற்றது. அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட துணைத் தலைவர் பேராசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர் அறிமுக உரையாற்றி பேரணியைத் துவங்கி வைத்தார். பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அறிவியல் செயல்பாட்டாளர்கள் பங்கேற்றனர். கம்பம் காந்தி சிலை அருகில் துவங்கி காமராசர் சிலை அருகே நிறைவுற்றது. இறுதியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் ஜெயமுருகன், வாலிபர் சங்க செயலாளர் லெனின், கலிலியோ அறிவியல் மையத்தின் சத்யமாணிக்கம் ஆகியோர் பேசினர். அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைச் செயலாளர் சுரேஷ்கண்ணன், தேனி கிளைச் செயலாளர் இராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment