முதல் பக்கம்

Aug 9, 2017

கம்பத்தில் வினாடி வினா போட்டி

ஆக.9 அன்று பிற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கம்பம் ஒன்றியக் கிளை சார்பில் வினாடிவினா போட்டி கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சுரேஷ்கண்ணன் வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பெரோஷ், வளையாபதி, தலைமை ஆசிரியர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 பள்ளிகள் கலந்துகொண்டன. நிறைவாக மாநிலச் செயலாளர் தே.சுந்தர் ஹிரோஷிமா நாகசாகி தினம் குறித்து உரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன், ஜி.பாண்டி, மருத்துவர் இன்பசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தனசேகரன், சோமநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

No comments:

Post a Comment