முதல் பக்கம்

Nov 1, 2008

மாவட்ட செயற்குழு கூட்டம்

நவம்பர்,1,2008 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டம் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலை அறிக்கை, எதிர்காலப் பணிகள், முன்மொழிவுகள் ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. பேரா.மு.முகமது ஷெரீப் தலைமை வகித்தார். 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் நடைபெற்ற வேலைகள் குறித்துப் பேசினார். எதிர்காலப் பணிகளாக துளிர் இல்லக் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம், பூமி மேளா ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. 

மாநிலச் செயலாளர் திருமிகு.அ.அமலராஜன் முன்மொழிய தே.சுந்தர் மாவட்டச் செயலாளராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். பேரா.எஸ்.எம்.எஸ்.சௌகத் அலி, பேரா.ஆர்.பாண்டி, பேரா.எஸ்.ராஜா, ஜெயமுருகன், எஸ்.சரவணன், மாநிலச் செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment