முதல் பக்கம்

Feb 27, 2018

பிப்.28-தேசிய அறிவியல் தின போட்டி முடிவுகள் அறிவிப்பு

அன்புடையீர் 

வணக்கம்.பிப்.28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அப்துல்கலாம் விஷன் இந்தியா இயக்கத்துடன் இணைந்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப்போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.. மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 50 பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் படைப்புகளை அனுப்பியிருந்தனர். அவற்றில் இருந்து மாவட்ட அளவில் முதல் மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.. 

போட்டி முடிவுகள்: 

4,5 வகுப்பு மாணவர்களுக்கான ஒளியோடு விளையாடு என்ற தலைப்பிலான ஓவியப் போட்டியில் வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப்பள்ளியின் இரா.ஹேமா வைஷ்ணவி முதல் இடத்தையும் கு.இலட்சுமிபுரம் அரசு துவக்கப் பள்ளியின் கு.மகாலட்சுமி இரண்டாம் இடத்தையும் காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பி.சுவேதா மற்றும் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தேவிபிரித்திஸ்கா ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் வானில் மேரிகியூரி என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் எஸ்.யுவதர்ஷனி முதல் இடத்தையும் வரதராஜபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் எஸ்.சாய்குமார் இரண்டாம் இடத்தையும் பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியின் அஸ்ரூல் நிஷா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

9-12 வகுப்பு மாணவர்களுக்கான எனது பார்வையில் விஷன் இந்தியா-2020 என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் மு.சங்கவி முதல் இடத்தையும் புலிகுத்தி அரசு உயர்நிலைப்பள்ளியின் நா.சிவானி இரண்டாம் இடத்தையும் வடபுதுப்பட்டி ஸ்ரீமுத்தாலம்மன் மேல்நிலைப்பள்ளியின் செ.தாரணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

கல்லூரி மாணவர்களுக்கான டார்வினுக்கே என்றும் வெற்றி என்ற தலைப்பிலான கவிதைப் போட்டியில் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரியின் என்.ஷர்மிளாதேவி முதல் இடத்தையும் இலட்சுமிபுரம் இரா.கௌசல்யா இரண்டாம் இடத்தையும் போடிநாயக்கனூர் வி.பவித்ரா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

ஆசிரியர்களுக்கான இந்திய அறிவியல் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் திருமிகு.அ.ஞானதெரஸ் முதல் இடத்தையும் உப்பார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு.எஸ்.ஜி.விஜயலட்சுமி இரண்டாம் இடத்தையும் உப்பார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் உதவி ஆசிரியை திருமிகு.வி.ஹேமலதா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 


ஆர்வலர்களுக்கான கட்டுரைப் போட்டியில் கம்பம் ஜெ.தனலட்சுமி முதல் இடத்தையும் ஆண்டிபட்டி எஸ்.ஆர்.எஸ்.ரெங்கநாதன் இரண்டாம் இடத்தையும் அல்லிநகரம் எஸ்.கௌசல்யா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

பரிசளிப்பு & பாராட்டு விழா: 
  • பரிசளிப்பு விழா பிப்.28 மாலை 5 மணிக்கு தேனி கான்வெண்ட் அருகில் உள்ள அம்பி வெங்கிடசாமி மக்கள் மன்றத்தில் நடைபெறும்.. 
  • போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். 
  • பள்ளி & மாவட்ட அளவில் முதல் மூன்று படைப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.. 
  • பங்கேற்ற பள்ளிகளுக்கான நினைவுப்பரிசுகளும் வழங்கப்படும்.. 
  • அனுமதி இலவசம். 
அன்புடன் 
ஈ.ஜெகநாதன், மாவட்டச் செயலாளர் 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 
9789411022

No comments:

Post a Comment