முதல் பக்கம்

Feb 13, 2020

கம்பம் சந்திப்பு 2

கம்பம் சந்திப்பு- 2 ஆம் நிகழ்வு அறிவியல் அறிஞர் டார்வின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்.12 மாலை கம்பம் நகரில் நடைபெற்றது.. நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் தே.சுந்தர் தலைமை வகித்தார்.. பொதுக் குழு உறுப்பினர் மா.சிவக்குமார் வரவேற்று பேசினார்..

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவர் பேரா.தினகரன் அவர்கள் கலந்து கொண்டு டார்வின் தின கருத்துரை வழங்கினார்.. டார்வின் குறித்து, பரிணாமம், மரபணு மற்றும் ஜீன் தெரபி, பாலின வேறுபாடுகள், மனித இனத்தின் 20க்கும் மேற்பட்ட கிளை இனங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் விளக்கங்கள் அளித்து, வழக்கம் போல கிளை கிளையாக புதிய புதிய தகவல் மழைதனைப் பொழிந்து சென்றார்..

உதாரணத்திற்கு சில..

டார்வின் ஓரிரு நாட்களில் ஆய்வு மேற்கொண்டு உயிரினங்களின் தோற்றம் குறித்த நூலை வெளியிடவில்லை.. பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு செய்து தான் வெளியிட்டார்.. அதற்கு அடிப்படையாக அமைந்தது உயிரைப் பணயம் வைத்து டார்வின் மேற்கொண்ட ஹெச்.எம்.எஸ்.பீகிள் கடற்பயணம்.. 

நேரடியாக குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்றெல்லாம் டார்வின் கூறவில்லை.. அதே போல Survival of the fittest எனும் பதம் டார்வின் சொன்ன பதமல்ல! டார்வினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. தரைக்கு அடியில் உருளைக்கிழங்கு, மேலே தக்காளி என ஒரே செடியில் இரு உணவுப் பொருள் பொமேட்டோ குறித்த ஆராய்ச்சி பற்றிய தகவல்கள்..

தேசம், இனம், மதம், சாதி எனப் பலவாறாக பிரிந்து நாம் நின்றாலும் மோதிக் கொண்டாலும் போரிட்டாலும் கூட நாம் அனைவருக்கும் ஆதித் தாய் ஒருத்தி தான் என்பது அறிவியல் நிரூபணம் .. ஆண், பெண், திருநங்கை, திருநம்பி மட்டுமின்றி இன்னும் பல மாற்றுப் பாலினங்களும் உண்டு..

தினகரன் சார் உரை கேட்க போடியில் இருந்து ஆசிரியர் சுரேஷ் குமார் தனது மாணவர்கள் இருவரை அழைத்துக் கொண்டு வந்திருந்தது சிறப்பு... தேனி, ஆண்டிபட்டி, தேவாரத்தில் இருந்தும் கூட அறிவியல் ஆர்வமுள்ள நண்பர்கள், மாணவர்கள் வந்திருந்தனர்.. டார்வின் மற்றும் சி.வி.ராமன் முகமூடிகள் வெளியிடப்பட்டன. அவர்கள் குறித்த சிறு நூல்களும் வெளியிடப்பட்டன..

மாவட்ட தலைவர் மா.மகேஷ் நிறைவுரை வழங்கினார். மாவட்ட செயலாளர் மு தெய்வேந்திரன் நன்றி கூறினார்.. மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.. பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்

No comments:

Post a Comment