முதல் பக்கம்

Sep 23, 2014

மாவட்ட பொதுக்குழு கூட்டம்: 1

செப்டமபர் 20 சனி அன்று மாலை தேனி கருணா பயிற்சி மையத்தில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் திருமிகு பா.செந்தில் குமரன் தலைமை தாங்கினார். தேனி கிளைச்செயலர் தெய்வேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். ஜூன் 23 2013 மாவட்ட மாநாட்டிற்க்குப்பிறகு தேனி மாவட்டத்தில் நடைப்பெற்ற வேலைகளை மாவட்ட செயலாளர் வி.வெங்கட் அறிக்கையாக சமர்ப்பித்தார்.பிறகு அறிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது.மாட்டத்தில் நடைப்பெற்ற வேலை குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.அனைத்து கிளைகளிலும் செயல்பாடுகளை எடுத்துச் செல்வதன் அவசியம் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாநிலச் செயலர் தியாகராஜன், சுந்தர் ஆகியோர் மாவட்ட செயல்பாடுகள் குறித்து கருத்துகளை வழங்கினர். மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நபர்கள் குறித்து எடுத்துரைத்தனர்.முப்பதுக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்

No comments:

Post a Comment