முதல் பக்கம்

Aug 21, 2014

துளிர் அறிவியல் வினாடி வினா-2014

ஆகஸ்ட் 20 புதனன்று மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி கம்பம் ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நடைப்பெற்றது….15 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து நடு நிலை,உயர்நிலை,மேல்நிலை ஆகிய பிரிவுகளில் மாணவ,மானவியர் பங்கேற்றனர்.வினாடி வினாப்போட்டியில் போட்டியில் வெற்றி பெற்றவர்களூக்கான பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்திலேயே நடைப்பெற்றது.கம்பம் கிளைத்தலைவர் மா.சிவக்குமார் தலைமை தாங்கினார். கிளைச்செயலர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார்.கல்லூரி தாளாளரும் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான என்.எம்.இராமகிருஷ்ணன் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.கல்லூரி முதல்வர், மாநிலச் செயலர் தே.சுந்தர் மற்றும் மு.தியாகராஜன் மாவட்ட செயலர் வெங்கட் கூடலூர் கிளை பொருளாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment