முதல் பக்கம்

Aug 15, 2014

ஹிரோசிமா- நாகசாகி நினைவு தின நிகழ்ச்சிகள்: 2014

அறிவியல் ஆக்கத்திற்கே அனும் குறிக்கோளை மையப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஹிரோசிமா நாகசாகி நினைவு தின நிகழ்ச்சிகள் தேனி மாவட்டத்தில் அறிவியல் இயக்கம் சார்பில் அனுசரிக்கப்படுகின்றன.கூடலூர் நகரக்கிளை சார்பில் கூடலூர் பூங்கா ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் நினைவு தினம் ஆகஸ்ட் 6 அன்று அனுசரிக்கப்பட்டது.கம்பம் கிளைச் செயலாலர் திருமிகு,க.முத்துக்கண்ணன் கூடலூர் கிளை பொருளாளர் திருமிகு,ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று அணு ஆயுதத்தின் கோரங்களை மாணவர்களுக்கு விளக்கினர். தேனி கிளைச் செயலாளர் திருமிகு.தெய்வேந்திரன் பெரியகுளம் கிளைகளில் டிரயம்ப்,எட்வர்டு மற்றும் பாரதியார் நடுநிலைப்பள்ளியில் மிகச்சிறப்பாக நிகச்சிகளை ஒருங்கிணைத்தார். கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியம் மற்றும் கிளை செயலாளர் திருமிகு.ராம்சங்கர் ஆகியோர் அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.போடி கிளை சார்பில் குண்டல்னாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போடிக்கிளைச் செயலர் ஸ்ரீதர் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்.

No comments:

Post a Comment