முதல் பக்கம்

Jul 30, 2015

தேனி ஒன்றியக்கிளை 3வது மாநாடு:

தேனி ஒன்றியக்கிளையின் மூன்றாவது மாநாடு ஜூலை 27 2015 திங்கள்கிழமை அன்று மாலை மாலை 5 மணி அளவில் தேனி கருணா பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது. ஆர் .அம்மையப்பன் அவர்கள் தலைமை தாங்கினார். தேனி கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் கிளையின் கடந்த கால செயல்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். அதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதமும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைப்பெற்றது. புதிய தலைவராக எஸ்.முருகேசன் அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டார். கிளைச்செயலாளராக ஈ.ஜெகநாதன், பொருளாளராக அ.சதீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளையின் இணைச்செயலாளர்களாக எஸ்.ஜேசுராஜ் மற்றும் கிளைத் துணைத் தலைவர்களாக ஆர்.அம்மையப்பன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பத்து பேர் அடங்கிய செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் மற்றும் மாவட்ட செயலாளர் வி.வெங்கட் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத்தலைவர் பா.செந்தில் குமரன் அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். மாவட்டப்பொருளாளர் ஜெ.மெஹபூப் பீவி போடி கிளைத்தலைவர் ஆர்.காளிதாஸ் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க ஆர்வலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment