முதல் பக்கம்

Jan 8, 2018

தேனி மாணவிகளுக்கு குழந்தை விஞ்ஞானி விருது

தேனி : தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டு மத்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்ற குழு சார்பில், ஆய்வு கட்டுரைகள் மூலம் குழந்தை விஞ்ஞானிகள் கண்டறியப்பட்டனர்.இதனையொட்டி குஜராத்தில் நடந்த மாநாட்டை அம்மாநில முதல்வர் விஜய ரூபானி துவக்கிவைத்தார். கொலம்பியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இதில் தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளியின் 8 ம் வகுப்பு மாணவி யு.சிரின் தலைமையில் கே.பாண்டிமீனா, எம்.பிரதீபா, பி.நித்யஸ்ரீ, வி.ஸ்ரீ புவியா குழுவினர் ஆய்வை சமர்ப்பித்தனர்.தேனி மாவட்டம் அன்னஞ்சி கிராமத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தல் குறித்த புலனறிவை அடிப்படையாக கொண்டு ஆய்வுக் கட்டுரையை மாணவிகள் தயார் செய்திருந் தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், ஆயிரம் கட்டுரைகளில் சிறந்ததாக தேனி மாணவிகளின் கட்டுரை தேர்வாகி உள்ளது. இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு 'குழந்தை விஞ்ஞானி' விருதிற்கான சான்றிதழ் அங்கு வழங்கப்பட்டது.ஆய்வு கட்டுரையின் வழிகாட்டி ஆசிரியர் ராம்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலர் சுந்தர், மாவட்ட செயலர் ஜெகநாதன், வெங்கட், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உஸ்மான் அலி, கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள், பள்ளி செயலர் ஸ்ரீதர், இணைச்செயலர் கண்ணன், பொரு ளாளர் ஜெயராமன், முதல்வர் ஜாய்ஸ் ஆகியோர் மாணவிகளை பாராட்டினர்.

No comments:

Post a Comment