முதல் பக்கம்

Oct 26, 2010

அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010

கம்பம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் வினாடி வினா போட்டிகள்ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுக் குழு உறுப்பினர்ஸ்ரீராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுந்தர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அனுசுயா பேசினார். போட்டிகளில் 6,7,8 வகுப்பு பிரிவுகளில் முதல்இடத்தை கூடலூர் வ.உ.சி. பள்ளியும், இரண்டாம் இடத்தை ராயப் பன்பட்டி எஸ்.யூ.எம். பள்ளியும், மூன்றாம் இடத்தை க.புதுப்பட்டி ஏ.எல்.வி பள்ளியும்பெற்றது. 9, 10 ம் வகுப்புகளுக்கான பிரிவில், முதல் இடத்தை கூடலூர்என்.எஸ்.கே.பி. பள்ளியும், இரண்டாம் இடத்தை திருவள்ளுவர் பள்ளியும், மூன்றாம்இடத்தை கம்பம் அரசு பெண்கள் பள்ளி, எஸ்.யூ.எம். பள்ளிகளும் பெற்றன. 11, 12 ம்வகுப்பு பிரிவில் கே.கே.பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் பள்ளி முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை என்.எஸ்.கே.பி., பள்ளியும், மூன்றாம் இடத்தை திருவள்ளுவர்பள்ளியும் பெற்றது.

மதுரை துளிர் அறிவியல் இயக்கத்தின் இயக்குனர் தியாகராஜன், மாநில கல்விக் குழுஉறுப்பினர் அமலராஜன் பரிசுகளை வழங்கினர். பேராசிரியர்கள் வாணி, சந்திரா,ஆசிரியர்கள் சுரேந்தர், முத்துக்கண்ணன் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர்வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

நன்றி: தினமலர், கம்பம்

No comments:

Post a Comment