முதல் பக்கம்

Nov 25, 2012

பெரியகுளத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

First Published : 23 November 2012 11:11 AM IST 

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன இணைந்து, இந்த ஆண்டுக்கான மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தின.

 பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். மனோகரன் தலைமை வகித்தார். இந்த இயக்கத்தின் பெரியகுளம் கிளைத் தலைவர் ஏ.எஸ். பாலசுப்பிரமணியன், செயலர் எல். ராம்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். தெய்வேந்திரன் வரவேற்றார்.

 மாவட்டச் செயலர் டி. சுந்தர் தொடக்க உரையாற்றினார். இதில், தேனி மாவட்ட அளவில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 25 ஆய்வுக் குழுவின் 160 மாணவர்கள் கலந்துகொண்டு, தங்களது ஆய்வுகளை சமர்ப்பித்தனர். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜி. செல்வராஜ், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

 தமிழ்-முதுநிலைப் பிரிவில் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியரின் மின்சாரத் தட்டுப்பாட்டை போக்க தேவையான வழிமுறைகளைக் கண்டறிதல் என்ற ஆய்வு, தமிழ்-இளநிலை பிரிவில் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒனறிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கிராம ஆற்றல் வளங்களை சரியாக பயன்படுத்தாத தால் மக்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வு, பெரியகுளம் எட்வர்டு நடுநிலைப் பள்ளி மாணவர்களின் மின்சார சிக்கனம் என்ற ஆய்வு ஆகிய 3 ஆய்வுகளை, மாநில அளவிலான மாநாட்டுக்கு நடுவர்கள் தேர்வு செய்தனர். மேலும், ஆய்வுகளை சமர்ப்பித்த மாணவர்கள் அனைவருக்கும், இம் மாநாட்டின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் எம். பாண்டியராஜன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

 ஏற்பாடுகளை, கார்த்திகேயன், ரமேஷ், முத்துக்கண்ணன், நந்தகுமார் உள்பட பலர் செய்திருந்தனர். எஸ். ராம்சங்கர் நன்றி கூறினார்.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment