முதல் பக்கம்

Nov 25, 2012

வெள்ளி விழா 2012

நவம்பர்.23 (வெள்ளி) துளிர் வெள்ளி விழா ஆண்டின் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வு சென்னை பல்கலை கழக வளாகத்தில் மிக சிறப்பாக துவங்கியது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், துளிர் , சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை, மானுடவியல் துறை இணைந்து ” இந்திய அறிவியல் பத்திரிகை முன்னுள்ள சவால்கள் “ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தின் துவக்க நிகழ்ச்சி காலை 10. 30 மணியளவில் சென்னை பல்கலை கழக இதழியல் துறை தலைவர் முனைவர்.G. ரவீந்திரன் தலைமையில் துவங்கியது. இக்கருத் தரங்கத்தில் அறிமுகவுரையினை துளிர் ஆசிரியர் முனைவர். R. இராமானுஜம் ஆற்றினார். இதனை தொடர்ந்து வாழ்த்துரையினை சென்னை பல்கலை கழக மானுடவியல் துறை தலைவர் முனைவர். சுமதி, புதுதில்லி விஞ்ஞான் பிரச்சார் பதிவாளர் முனைவர். T.V.வெங்கடேஸ்வரன் வழங்கினார்கள். இறுதியாக தலைமையுரையினை இரவீந்திரன் ஆற்றினார். துவக்க நிகழ்ச்சிக்கான வரவேற்புரையினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில பொது செயலாளர் திரு.M.S.ஸ்டீபன்நாதனும் துளிர் ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. ஹரீஷ் நன்றியினையும் கூறினார்கள்

2வது அமர்வாக முனைவர் . A. வள்ளிநாயகம் தலைமையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க இதழ்களின் அனுபவம் & மற்ற இதழ்களின் அனுபவம் குறித்து அனுபவ பகிர்வு நடைபெற்றது. இதில் கிழக்கு பதிப்பகம் திரு.பத்ரி, ” அறிவியல் ஒளி” சிதம்பரம் ஆகியோர் தாங்கள் நடத்தும் இதழ்களின் அனுபவத்தினை பகிர்ந்துகொண்டனர். இதனை தொடர்ந்து அறிவியல் இயக்க இதழ்கள் சார்பாக ” துளிர்” பற்றி துளிர் இணை ஆசிரியர் திரு.பாலகிருஷ்ணன், ” விழுது ”ஆசிரியர் திரு,மாதவன், ” விஞ்ஞான சிறகு” திரு. இல.நாராயணசாமி, ” அறிவு தென்றல் “ மொ.பாண்டிய ராஜன், ” ஜந்தர் மந்தர் ” ஆசிரியர் முனைவர் இந்துமதி ஆகியோர் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டனர்.

3வது அமர்வாக தமிழ்நாடு அறிவியல் இயக்கதின் மாநில தலைவர் முனைவர்.N மணி தலைமையில் மாநில பொருளாளர் திரு.எஸ்.சுப்பிரமணி முன்னிலையிலும் ” இந்திய பத்திரிகை முன்னுள்ள சவால்கள் குறித்த விவாதம், மற்றும் குழந்தைகள் அறிவியல் பத்திரிக்கை செயல்திட்டம்” பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் முனைவர்.R.இராமனுஜம், C.ராமலிங்கம், புதிய ஆசிரியர் ஆசிரியர் திரு. கி.ராஜூ, வேலூர் மாவட்ட அறிவியல் அலுவலர் திரு.லெனின் தமிழ்கோவன் கருத்துகளை முன்வைத்தனர். மேலும் கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அனைவரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டு தங்களின்அனுபவத்தினையும், கருத்துகளையும் தெரிவித்தனர். இறுதியாக நன்றியினை தென்சென்னை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் திரு. உதயன் நன்றியினை தெரிவித்துகொண்டனர். இக்கருத்துரங்கத்தில் 120க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment