முதல் பக்கம்

Jul 6, 2013

மாவட்ட செயற்குழு -1 ஜூலை,5.2013

அறிவியல் வணக்கம். ஜூலை 5,2013 அன்று மாலை நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் தேனி நகரில் நடைபெற்றது. செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது வளர்ச்சி உப குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.முத்துமணிகண்டன் அவர்களது தந்தை திரு.முத்து அவர்களது மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  
 
நடந்து முடிந்த 9 வது மாவட்ட மாநாடு வெற்றி பெற சிறப்பாய் செயல்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள்,கிளை பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் அறிமுகம் நடைபெற்றது.

லால்குடியில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை மாநில செயலர் திரு.தியாகராஜன் எடுத்துக்கூறினார்.

ஜூன் 29,30 விழுப்புரத்தில் நடைபெற்ற கல்வி மாநில மாநாட்டில் நமது மாவட்டம் சார்பாக பங்கேற்ற திருமிகு.ஞானசுந்தரி மாநாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

உப குழு பொறுப்பளர்கள் தேர்வு நடைபெற்றது.அதன்படி பிரச்சார உப குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட செயலர் வி.வெங்கட் ராமன் மற்றும் பொறுப்பாளர்களாக ராம்சங்கர், மணிமேகலை ,அம்மையப்பன், ஜஸ்டின் ரவி,முனைவர் செரீஃப், மனோகரன், தெய்வேந்திரன் ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது.

கல்வி உபகுழுவின் பொறுப்பாளர்களாக முத்துக்கண்ணன், ஞானசுந்தரி, சிவாஜி,செந்தில் குமரன் ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது.ஆசிரியர் இணையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஆசிரியை ஞானசுந்தரி செயல்படுவார்.

வளர்ச்சி உபகுழுவின் பொறுப்பாளர்களாக முத்துமணிகண்டன், ஓவியர் பாண்டி, ஸ்ரீதர், இரத்தினசாமி, மகேந்திரன் ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது.

வெளியீடு உபகுழுவின் பொறுப்பாளர்களாக ஹ.ஸ்ரீராமன், வெங்கட் ராமன், முத்துக்கண்ணன், பா.செந்தில் குமரன் ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது.

ஆரோக்ய உபகுழுவின் பொறுப்பாளர்களாக ஜ.மஹபூப் பீவி, மருத்துவர் இன்பசேகரன், மருத்துவர் வேல்மணி, மருத்துவர் நளினி, மருத்துவர் சுரெஷ், மருத்துவர் தேவ் ஆனந்த், ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது.

சமம் உபகுழுவின் பொறுப்பாளர்களாக திரு.ஜேசுராஜ், ஜெயந்தி, வன்னியராசன், தே.சுந்தர் ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக திரு.தெய்வேந்திரன் மற்றும் துளிர் வினாடி வினா போட்டியின் ஒருங்கிணைப்பாளராக திரு. மனோகரன் மற்றும் துளிர் திறனறிதல் போட்டியின் ஒருங்கிணைப்பாளராக திரு. ஜஸ்டின் ரவி செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது

அமைப்பு சார்ந்த ஒருங்கிணைப்பாளர்களாக திரு.தே.சுந்தர் மற்றும் ஹ.ஸ்ரீராமன் ஆகியோரும் கல்வி சார்ந்த ஆய்வுகளின் பொறுப்பாளர்களாக திரு.அழகு கணேசன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது.

தேசிய அறிவியல் தின கொண்டாட்டத்தின் பொறுப்பாளராக திரு.அம்மையப்பன், ஹிரோசிமா-நாகசாகி நினைவு தின நிகழ்ச்சியின் பொறுப்பாளராக திரு.ராம்சங்கர்,கணித செயல்பாடுகளுக்கான பொறுப்பாளர்களாக திரு.முனைவர் செரீஃப் மற்றும் மணிமேகலை ஆசிரியை ஆகியோர் செயல்படுவதென முடிவு எடுக்கப்பட்டது,

வருகின்ற ஆகஸ்ட் 2,3,4 செங்கல்பட்டில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரிதிநிதிகள் தேர்வும் நடைபெற்றது.
 
செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பங்கும் செயல்பாடும் அதிகரிக்கப்பட வேண்டும்.                                 ------ மாவட்ட செயலர்

No comments:

Post a Comment