முதல் பக்கம்

Jul 14, 2013

ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா, ஒரு புத்தகம் உலகையே மாற்ற முடியும் : ஐக்கிய நாடுகள் மன்றத்தில் மலாலா போர்க்குரல்


ஐக்கிய நாடுகள் மன்றம் (நியூயார்க்), ஜூலை 13-ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா, ஒரு புத்தகம் உலகையே மாற்ற முடியும் என்று ஐக்கிய நாடுகள் மன் றத்தில் மலாலா போர்க்குரல் எழுப் பினார். தலிபான் இயக்கத்தினரால் சுடப் பட்டு, காப்பாற்றப்பட்ட 16 வயது சிறு மியான பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப் சாய் பிறந்த தினமான ஜூலை 12ம் நாளை ஐக்கிய நாடுகள் மன்றம் மலாலா தினமாக அறிவித்துக் கொண்டாடியது. அதனையொட்டி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், சிறுமி மலாலா ஐ.நா. மன்றத்திற்கு வரவழைக் கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். அப் போது மலாலா பேசியதாவது: ‘‘மாண்புமிகு மக்கள் மத்தியில் உரையாட எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும். என் உரையை எங்கிருந்து தொடங் குவது என்று எனக்குத் தெரியவில்லை. இங்கு கூடியிருக்கும் மக்கள் என் னிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறார் கள் என்றும் எனக்குத் தெரியவில்லை. முதற்கண் என்மீது அன்பு செலுத்தி என் உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்த அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களில் ஒருத்தி

அன்பார்ந்த சகோதர, சகோதரி களே, ஒரு விஷயத்தை நன்கு நினை வில் வைத்துக்கொள்ளுங்கள். மலாலா தினம் என்பது என்னுடைய தினம் அல்ல. இன்றைய தினம், தங்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ் வொரு சிறுவனுக்கும், ஒவ்வொரு சிறுமிக்குமான தினமாகும். மனித உரி மைகளுக்காகவும், கல்வி, சமாதானம் மற்றும் சமத்துவத்திற்காகவும் குரல் கொடுக்கிற நூற்றுக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஊழியர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு குரல் கொடுத்த பல்லாயிரக்கணக்கா னோர் பயங்கரவாதிகளால் கொல்லப் பட்டிருக்கிறார்கள், லட்சக்கணக்கா னோர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். நானும் அவர் களில் ஒருத்தி. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருத்தியாக இங்கே நான் உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன். நான் எனக்காகப் பேசவில்லை, இவ் வாறு உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த சிறுவர்களுக்காகவும், சிறுமிகளுக்காகவும் பேசுகிறேன். உரிமைகளுக்காகப் போராடியவர்கள் சார்பாக நான் பேசுகிறேன். அமைதியுடன் வாழ்வதற்கான உரிமைக்காக, கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற உரி மைக்காக, எல்லோருக்கும் சமமான விதத்தில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற உரிமைக்காக, எல் லோருக்கும் கல்வி வேண்டும் என்ற உரிமைக்காக, நான் பேசுகிறேன்.

அதே அபிலாசை,அதே நம்பிக்கை, அதே கனவு

அன்பார்ந்த நண்பர்களே, 2012 அக்டோபர் 9 அன்று தலிபான் இயக் கத்தினர் என் நெற்றியின் இடது பக்கத் தில் சுட்டார்கள். அவ்வாறு என் நண் பர்கள்மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி னார்கள். அவ்வாறு துப்பாக்கிக் குண் டுகள் மூலம் எங்களை மவுனமாக்கி விடலாம் என்று அவர்கள் நினைத் தார்கள். ஆனால் அவர்கள் தோல்வி யடைந்து விட்டார்கள். எங்கள் மவு னத்திலிருந்து ஆயிரக்கணக்கான குரல்கள் எழுந்தன. எங்கள் லட்சியங் களை மாற்றிவிடலாம், எங்கள் அபி லாசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்று பயங்கரவாதிகள் நினைத்தார்கள். ஆனால் என்னிடமி ருந்த பலவீனம், பயம், நம்பிக்கை யின்மைதான் இறந்தனவேயொழிய, என் வாழ்க்கையில் வேறெந்த மாற்ற மும் இல்லை. அவற்றிற்குப் பதிலாக பலம், சக்தி, துணிவுடைமை ஆகிய வைதான் புதிதாகப் பிறப்பெடுத்திருக் கின்றன. முன்பிருந்த அதே மலாலா வாகத்தான் இப்போதும் இருக்கிறேன். என் அபிலாசைகளும் அதேதான். என் நம்பிக்கைகளும் அதேதான். என் கனவுகளும் அதேதான்.

துப்பாக்கி இருந்திருந்தால் கூட....

அன்பார்ந்த சகோதர, சகோதரி களே, நான் யாருக்கு எதிராகவும் இல்லை. தலிபான் இயக்கத்தின ருக்கு எதிராகவோ அல்லது இதர பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரா கவோ தனிப்பட்ட முறையில் எவரி டமும் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்கிற உணர்வுடன் இங்கே நான் பேசவில்லை. ஒவ்வொரு குழந்தை யின் கல்வி உரிமைக்காக இங்கே நான் பேசுகிறேன். அனைத்துத் தீவிர வாதிகளின், குறிப்பாக தலிபான் இயக்கத்தினரின் பையன்களுக்கும், பெண்களுக்கும் கல்வி வேண்டும் என்றுதான் நான் குரல் கொடுக்கி றேன். என்னைத் துப்பாக்கியால் சுட் டவரைக்கூட நான் வெறுக்கவில்லை. அவர் என் முன் நின்று என்னிடம் துப்பாக்கி இருந்திருந்தால்கூட நான் அவரைச் சுட்டிருக்க மாட்டேன். இது நான் நபிகள் நாயகத்திடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும், புத்த பெருமானிடமிருந்தும் கற்றுக் கொண்ட அன்புடைமையாகும். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மாண்டேலா, முகம்மது அலி ஜின்னா ஆகியோரிடமிருந்து நான் பெற்றி ருக்கிற பாரம்பரியச் சொத்து இதுவே யாகும். காந்திஜி, பாஷாகான் மற்றும் அன்னை தெரசா ஆகியோரிடமிருந்து கற்றுக்கொண்ட அஹிம்சைத் தத்து வம் இதுவேயாகும்.


புத்தகம், பேனாவின் முக்கியத்துவம்

இன்னா செய்தாருக்கும் இனிய வையே செய்ய வேண்டும் என்று என் தாயும் தந்தையும் எனக்குக் கற்றுக் கொடுத்தது இதுவேயாகும். எல்லோ ரையும் நேசி என்றும் எப்போதும் அமைதியுடன் இரு என்றும்தான் என் ஆத்மா எனக்குச் சொல்லிக் கொடுக் கிறது.இருட்டில் இருக்கும்போதுதான் வெளிச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். நாம் மவுனப்படுத்தப் படும்போதுதான் நம் குரலின் முக்கியத் துவத்தை உணர்கிறோம். அதே போன்று நாங்கள் பாகிஸ்தானின் வடக்குப் பகுதியான ஸ்வாட் பகுதி யில் வாழ்ந்தபோதுதான், துப்பாக்கி களை நாங்கள் பார்த்தபோதுதான் பேனாக்கள் மற்றும் புத்தகங்களின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந் தோம்.‘‘வாளின் முனையைவிட பேனா வின் முனை வலிமை வாய்ந்தது’’ என்கிற முதுமொழி உண்மையே யாகும். தீவிரவாதிகள், புத்தகங்களை யும் பேனாக்களையும் கண்டு பயப் படுகிறார்கள். கல்வியின் வீரியம் அவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தி யுள்ளது. பெண்களைப் பார்த்தாலே அவர்கள் அஞ்சுகிறார்கள். பெண் களின் குரலின் சக்தி அவர்களை நடு நடுங்க வைக்கிறது. அதன் காரண மாகத்தான் சமீபத்தில் அவர்கள் குவெட்டாவில் 14 அப்பாவி மருத்துவ மாணவர்களைக் கொன்றார்கள். அதன்காரணமாகத்தான் பல பெண் ஆசிரியர்களையும், போலியா மருந்து செலுத்தும் பெண் ஊழியர்களையும் அவர்கள் கொலை செய்தார்கள். அத னால்தான் அவர்கள் பள்ளிக்கூடங் களைத் தகர்த்துக்கொண்டிருக்கிறார் கள். ஏனெனில் அவர்கள் மாற்றத் தைக் கண்டு பயப்படுகிறார்கள், சமத் துவத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். எங்கள் சமூகத்தில் அதனை நாங்கள் கொண்டுவருவோம்.

அமைதி அவசியம்

பயங்கரவாதிகள் இஸ்லாமின் பெய ரைத் தங்கள் சொந்த ஆதாயத்திற் காகத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் ஜனநாயக நாடாகும். இஸ்லாம் மதமும் அமைதி, மனிதாபிமானம், சகோதரத் துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். இஸ்லாம், கல்வி பெறுவது ஒவ்வொரு குழந்தையின் உரிமை மட்டுமல்ல, அவர்களின் கடமையும் பொறுப்புமாகும். கல்வி கற்க அமைதி அவசியம். உலகின் பல பகுதிகளில், குறிப்பாக பாகிஸ்தானிலும் ஆப்கா னிஸ்தானிலும் பயங்கரவாதம், யுத்தங் கள் மற்றும் மோதல்கள் குழந்தை களை தங்கள் பள்ளிகளுக்குச் செல் லாமல் தடுத்து நிறுத்தியுள்ளன. யுத் தங்களினால் உண்மையிலேயே நாங்கள் மிகவும் களைப்படைந்து விட்டோம். உலகின் பல பகுதிகளில் பல விதங்களில் பெண்களும் குழந் தைகளும் பாதிக்கப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.இந்தியாவில், அப்பாவி மற்றும் ஏழைக் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக வாடிக் கொண் டிருக்கின்றனர். நைஜீரியாவில் பல பள்ளிக் கூடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. ஆப்கானிஸ்தான் மக்கள் பத்தாண்டுகளாக தீவிரவாதம் என்னும் தடைக்கற்களால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இளம் சிறுமிகள் வீடுகளில் குழந்தைத்தொழிலாளர் களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மிகவும் குறைந்த வயதிலேயே திரு மணமும் செய்விக்கப்படுகிறார்கள். வறுமை, கல்லாமை, அநீதி, மதவெறி, இனவெறி மற்றும் அடிப்படை உரிமை கள் மறுக்கப்படுதல் ஆகியவை ஆண் கள் -பெண்கள் அனைவரின் பிரச்சனை களாகவும் மாறிப்போயுள்ளன.

பெண்கள் - குழந்தைகளின் உரிமை

அன்புடையீர், நான் இன்றைய தினம் பெண்களின் உரிமைகள் மற் றும் கல்வி குறித்து உங்களின் கவ னத்திற்குக் கொண்டு வர விரும்புகி றேன். ஏனெனில் அவர்கள்தான் மிக வும் பாதிக்கப்பட்டவர்கள். பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற சுயேச் சையாகவே போராட முன்வர வேண் டும்.உலகத் தலைவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கி றேன். உலகம் முழுவதும் உள்ள ஒவ் வொரு குழந்தைக்கும் கல்வி அளிக் கப்படுவதைக் கட்டாயமாக்கிட வேண் டும் என்று அனைத்து அரசாங்கங் களையும் கேட்டுக்கொள்கிறேன்.அதேபோன்று உலகில் உள்ள அனைத்து அரசாங்கங்களும் பயங்கர வாதத்திற்கு எதிராகப் போராட வேண் டும் என்றும் குழந்தைகளை கொடு மைப் படுத்துவதிலிருந்து பாதுகா த்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று எழுத்தறிவின்மை, வறுமை, பயங்கரவாதத்திற்கு எதிராக உலக அளவிலான போராட்டத்தை முன்னெ டுத்துச் செல்வோம். ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா, ஒரு புத்தகம் உலகையே மாற்ற முடியும். கல்வி ஒன்றே தீர்வாகும். கல் விக்கே முன்னுரிமை கொடுத்திடு வோம் என்றார்.

No comments:

Post a Comment