முதல் பக்கம்

Oct 4, 2013

அறிவியல் மாலை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளியில் அக்டோபர் 3 அன்று மாலை 4 மணி அளவில் அறிவியல் மாலை நிகழ்ச்சி நடைபெற்றது.கம்பம் கிளை தலைவர் திருமிகு மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு.ஜி.பாண்டி வரவேற்புரை ஆற்றினார்.தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கவுள்ள மாணவர்களின் ஆய்வு செயல்பாடுகளையும் வழிமுறைகளையும் மாநிலக் கருத்தாளர் திருமிகு மொ.பாண்டியராஜன் அவர்கள் விளக்கிப் பேசினார்.மேலும் ஓரிகாமி மற்றும் எளிய அறிவியல் பரிசோதனைகளையும் மாணவர்களிடம் செய்து காட்டினார்.மாநிலச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே எடுத்துக்கூறினார்.கம்பம் கிளை செயற்குழு உறுப்பினர் திருமிகு. நந்தகுமார் நன்றி கூறினார்.50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அறிவியல் மாலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment