முதல் பக்கம்

Sep 25, 2013

அறிவியல் கொண்டாட்டம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளை சார்பில் கம்பம் முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளியில் கணிதமேதை ராமானுஜன் துளிர் இல்லம் செப்டம்பர் 22 (ஞாயிற்றுக்கிழமை) அன்று துவக்கப்பட்டது.கம்பம் கிளைத் தலைவர் திருமிகு.மா.சிவக்குமார் தலைமை தாங்கினார்.கம்பம் கிளை இணைச் செயலாளர் ஓவியர் ஜி.பாண்டி வரவேற்புரை ஆற்றினார்.அறிவியல் கல்வியின் அவசியம் குறித்தும் அறிவியல் அணுகுமுறை குறித்தும் மாநிலச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் குழந்தைகளிடம் பேசினார்.அறிவியல் புனைக்கதைகளை அறிமுகம் செய்து குழந்தைகளுக்கான எளிய அறிவியல் பரிசோதனைகளை மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட்ராமன் செய்து காட்டினார்.குழந்தைகளுக்கு காகிதமடிப்புக்கலை பயிற்சியை(ஓரிகாமி) கம்பம் கிளை செயலாளர் திருமிகு.க.முத்துக்கண்ணன் வழங்கினார்.இறுதியில் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமிகு.பா.சிவசக்தி நன்றி கூறினார். 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment