முதல் பக்கம்

Sep 14, 2013

மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்செயற்குழு கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

1.மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்த மஹாராஸ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர தபேல்கர் அவர்கள் புனேயில் படுகொலை செய்யப்பட்டத்தைக் கண்டித்தும்,அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் தீர்மானமாக நிறைவேற்றுகிறது.


2.இன்றைக்கு நாடகங்களுக்கும்,சினிமாவிற்கும் தணிக்கைக் குழு இருப்பதுபோல் தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் வருகிற விளம்பரங்களுக்கும் தணிக்கைக்குழு அமைக்க வேண்டும்.தொலைக்காட்சிகளில் வருகிற பெரும்பாலான விளம்பரங்கள் அறிவியலுக்குப் புறம்பானதாக இருப்பதால் எல்லாம் விளம்பரங்களையும் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே ஊடகங்களில் வெளியிட வேண்டும் என செயற்குழு கோருகிறது.


3.இந்திய அரசு தற்போது கொண்டுவர முயலும் உயிரித்தொழில் நுட்ப மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என்றும் நிறைவேற்றக் கூடாது என்றும் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.கூட்டாட்சி தத்துவம் கோலோச்சும் எந்தவொரு நாட்டிலும் இத்தகைய மத்தியப்படுத்தப்பட்ட சட்டம் இயற்றப்பட்ட்தில்லை என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சுட்டிக்காட்டுகிறது. மாநில சுயாட்சியை பாதிக்கும் எந்தவொரு சட்டமும் ,மாநிலங்கள் நலனில் அக்கறையுள்ளவர்களிடமும் விவாதம் நட்த்திய பின்னரே இம்மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.எனவே இந்த உயிரி தொழில் நுட்ப மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படக்கூடாது என கேட்டுக்கொள்கிறது.


4.மத்திய அரசால் 2010ல் மருத்துவ மனைகளை கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.இச்சட்டத்தில் தரமான சிகிச்சை,குறைந்த கட்டணம்,நோயாளிகளின் உரிமை காத்தல்,மருத்துவ சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை ,மருத்துவமனைகளை மூடக்கூடாது.மருத்துவக் காப்பீடு திட்டத்தில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உட்படுத்தி திருத்தப்பட்ட சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என செயற்குழு கோருகிறது.

No comments:

Post a Comment