முதல் பக்கம்

Sep 8, 2013

நரேந்திரா தபோல்கர் படுகொலை: அறிவியல் இயக்கம் கண்டனம்


மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளருமான நரேந்திரா தபோல்கர் படுகொலையை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வன்மையாகக் கண் டித்துள்ளது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் ஆக. 25 அன்று புதுக்கோட்டையில் நடைபெற் றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

இந்நாட்டின் சில அரசியல்வாதிகளின் குருவாக விளங்கும் ஆசாராம் பாபு என் பவர் ஹோலி பண்டிகையின்போது சுமார் 5000 வறட்சியில் வாடுகையில் இது தேவை யற்றது என கொதித்தெழ்ந்தவர் தபோல்கர். தனது வாழ்வின் இன்னொரு பகுதியாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் போரா டினார். முற்போக்குவாதிகளும், சீர்திருத்தவாதி களும் தபோல்கர் கனவு கண்ட மூடநம் பிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னி லும் வேகமாக எடுத்துச் செல்ல வேண்டு மென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தபோல்கரின் படுகொலைக்குப்பின் கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டம் போல் நாடு முழு வதும் உடனடியாக இயற்றப்படுவதற்கு மக்களிடம் விழிப்புணர்வினை உருவாக்கு வதற்கு தீவிரமாக செயலாற்ற வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட கிளைகள் அரங்கக்கூட்டங்கள் கண்டன அறிக்கை வெளியிடுதல், துண்டு பிர சுரங்கள் வெளியிடுதல், அரங்க கூட்டங்கள் நடத்துதல் ஆகிய பல்வேறு வடிவங்களில் இந்தப் படுகொலைக்கு எதிரான கண்டன முழக்கத்தை எழுப்புவதோடு தபோல்கரின் கனவு மெய்ப்பட நம்மால் இயன்ற பணி களை செய்யவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment