முதல் பக்கம்

Mar 22, 2014

மார்ச் 21 உலக வன நாள் நிகழ்ச்சி-1


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியக் கிளை சார்பாக கம்பம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வன நாள் கருத்தரங்கம் மற்றும் கவிதைப் போட்டி மார்ச் 21 அன்று காலை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் திருமிகு. உபதி அந்தோனி அம்மாள் தலைமை தாங்கினார். கம்பம் ஒன்றியக்கிளை செயலாளர் க. முத்துக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் வி. வெங்கட் ராமன் அவர்கள் “ மரம் நமக்கு வரம்” எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். காடுகளின் முக்கியத்துவம் குறித்தும் உலக நாடுகளில் காடுகளின் பரவல் குறித்தும் படக்காட்சி திரையிடப்பட்டது. கவிதைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியை. திருமதி. கீதா அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.இறுதியில் பள்ளி ஆசிரியை மு.வேணி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment