முதல் பக்கம்

Mar 23, 2014

மார்ச்-22 சர்வதேச தண்ணீர் தினம்

தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பாளையம் ஒன்றியக்கிளைக்கு உடபட்ட அணைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மார்ச் 22 அன்று சர்வதேச தண்ணீர் தின கருத்தரங்கம் நடைப்பெற்றது.கருத்தரங்கத்திற்கு பாளையம் ஒன்றியக்கிளைத் தலைவர் திருமிகு வளையாபதி தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியை திருமிகு.சத்யா முன்னிலை வகித்தார்.உடற்கல்வி ஆசிரியரும் தமிழ் நாடு அறிவியல் இயக்க ஆர்வலருமான திருமிகு. நவீன் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் திருமிகு.வி.வெங்கட் ராமன் கல ந்து கொண்டு நீர் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் நீர் நிலைமைகளின் நிலை குறித்தும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கருத்துரை வழங்கினார்.படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment