முதல் பக்கம்

Oct 28, 2014

மங்கள்யான்: விஞ்ஞானி சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டம் சார்பில் அக்டோபர் 27 திங்கள் கிழமை அன்று விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஒரே நாளில் மூன்று பள்ளிகளில் இந்நிகழ்ச்சிக்கு மிகச்சிறப்பாக திட்டமிடப்பட்டு இருந்தது. காலை 10 மணி அளவில் கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளியில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளோடு விஞ்ஞான பிரச்சார் விஞ்ஞானி த.வி .வெங்கடேஷ்வரன் உரையாற்றினார். மதியம் சுருளிப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைப்பெற்றது.மாலை கூடலூர் என்.எஸ்.கே,பி,மேல்நிலைப்பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.மாநிலச் செயலர் தே.சுந்தர், மாவட்ட செயலர் வி.வெங்கட் பாளையம் கிளைத்தலைவர் திருமிகு வளையாபதி மற்றும் அறிவியல் இயக்க ஆர்வலர்கள் பெரோஸ் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.மங்கள்யான் செயற்கைகோள் தொடர்பாகவும் இந்திய அறிவியல் ஆய்வுகள் குறித்தும் விஞ்ஞானி விளக்கம் அளித்தார்.

No comments:

Post a Comment