முதல் பக்கம்

Oct 10, 2014

வழிகாட்டி ஆசிரியர்களுக்கான NCSC பயிற்சி முகாம் 1-2014


தேசிய குழந்தைகள அறிவியல் மாநாட்டிற்கான உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அக்டோபர் 9 வியாழன் அன்று கம்பம் நாகமணிஅம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஓவியர் பாண்டி தலைமை தாங்கினார்.பள்ளி முதல்வர் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட் வரவேற்புரை ஆற்றினார். உத்தமபாளையம் கல்வி மாவட்ட அலுவலர் வனஜா மேரி அறிமுகவுரை ஆற்றினார்.மாநிலச் செயலாளர் தே.சுந்தர் கலந்து கொண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாடு தொடர்பாக அறிமுகவுரை ஆற்றினார். மாநிலக்கருத்தாளர் முனைவர் தினகரன் மற்றும் மாவட்ட இணைச்செயலர் திருமிகு.ஞானசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டிற்கான கருப்பொருள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விளக்கம் அளித்தனர்.60 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment