முதல் பக்கம்

Oct 14, 2014

வழிகாட்டி ஆசிரியர்களுக்கான NCSC பயிற்சி முகாம் 2-2014


தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அக்டோபர் 13 திங்கள் அன்று பெரியகுளம் சரஸ்வதி நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. பெரியகுளம் கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.பள்ளிதலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார். மாவட்டத்தலைவர் பா.செந்தில குமரன் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடர்பாக அறிமுகவுரை ஆற்றினார். மாநிலக்கருத்தாளர் திருமிகு.பேரா.சோ.மோகனா கலந்து கொண்டு மாநாட்டிற்கான கருப்பொருள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விளக்கம் அளித்தனர்.80 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.ஆசிரியர் ராஜா நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post a Comment